search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோவாளை"

    • நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பயிற்சியினை பயிற்றுனர்கள் டைமன் அருள் மற்றும் ஜான்சிராணி பயிற்சி அளித்தனர்.

    பூதப்பாண்டி:

    பூதப்பாண்டியில் உள்ள தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் வார்டு உறுப்பினர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது. ஆர்.ஜி.எஸ்.ஏ.திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட 16 ஊராட்சிகளில் உள்ள பெண் வார்டு உறுப்பினர்களுக்கு தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலக அவைக்கூடத்தில் நடந்த பயிற்சியில் பெண்கள் பங்கேற்பு சுயசார்பு தன்மை, பணியில் சந்திக்கும் சவால்கள், பாலின சமத்துவம் மற்றும் பாலினசரி நிகர் வரவு செலவு திட்டம், அரசியல் அமைப்பு சமத்துவம், பெண்களுகளுக்கான உரிமைகள், சட்டங்கள், மத்திய, மாநில அரசின் திட்டங்கள் ஆளுமை திறமையை வளர்த்தல், நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சியினை பயிற்றுனர்கள் டைமன் அருள் மற்றும் ஜான்சிராணி பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் செய்யப்பட்டது.

    • பூ வரத்து அதிகரிப்பால் விலை குறைவு
    • குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, புதியம்புத்தூர், ராதாபுரம், பழவூர் ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப் பூ, சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை, மானாமதுரை, வத்தலகுண்டு, கொடை ரோடு, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூவும். பெங்களூர், ஓசூர் ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சள் கேந்தி , பட்டர் ரோஸ், தென்காசி, அம்பாசமுத்திரம், புளியங்குடி, திருக்கனங்குடி ஆகிய பகுதியில் இருந்து பச்சையும் துளசியும் தோவாளை ஆவரை சுற்றியுள்ள பகுதியில் இருந்து கனகாம்பரம், அரளி, கோழி கொண்டை, தாமரை உள்ளிட்ட பூக்கள் தோவாளை பூச்சந்தைக்கு வந்து மாவட்டம் முழுவதும், மாநிலம் முழுவதும் விற்பனைநடைபெறுகிறது.

    தற்போது மல்லிகைப்பூ அதிக அளவில் தோவாளை பூச்சந்தைக்கு வருவதால் பூக்கள் விலை குறைந்து காணப்படுகிறது. மற்ற பூக்களும் பிச்சிப்பூ ரூ.1200, அரளி ரூ. 200, சம்பங்கி ரூ. 125, பட்டர் ரோஸ் ரூ. 220, பாக்கெட் ரோஸ் ரூ. 40, கேந்தி ரூ. 80, சேலத்து அரளி ரூ. 100, மரிக்கொழுந்து ரூ.100, பச்சை ரூ.7, தாமரை ரூ.5, கனகாம்பரம் ரூ. 500 விற்பனையாகி வருகிறது.

    மல்லிகைப்பூ விலை குறைந்து காணப்படுவதால் சில்லறை வியாபாரிகளும், மொத்த வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் விவசாயிகள், பறிப்பு கூலி கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பிரச்சினையை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இம்மாத இறுதிக்குள் தானும் அந்த இடத்தை ஆய்வு செய்ய இருப்பதாகவும் உறுதியளித்தார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி சட்ட மன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் சட்டமன்றத்தில் பேசியதாவது:-

    குமரி மாவட்டம் தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் அமைக்க வேண் டுமென்று கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.1 கோடி நிதி ஒதுக் கப்பட்டு அதற்கான வேலைகளும் முடிக்கக் கூடிய நிலையில், தனி நபரால் வழக்கு தொட ரப்பட்டு அந்த இடம் இந்து சமய மற்றும் அறநிலைய துறைக்கு சொந்த மானது என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. ஆனால் அந்த இடத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலெக்டர் ஆய்வு செய்து அந்த இடம் அரசுக்கு சொந்தமென்று மணி மண்டபத்திற்கு ஒதுக்கினார்கள். ஆனால் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த இடம் அறநிலையத்து றைக்கு சொந்தமென தீர்ப்பு வந்திருக்கிறது. அறநிலையத்துறை அமைச்சர் என்னுடைய கிராமத்தில் ஆய்வு செய்ய வந்த போது மணி மண்டபத்தையும் ஆய்வு செய்தார். அங்குள்ள திருமண மண்டபத்தையும் ஆய்வு செய்தார்.

    அப்பொழுது திருமண மண்டபத்திற்கான வாடகை ரூ.15 ஆயிரம் என நிர்ண யிக்கப்பட்டது. அதற்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் இந்த இடம் இப்போது அரசுக்கு சொந்தம். அறநிலையத்து றைக்கு சொந்த மானது என தீர்ப்பு வந்திருக்கிறது. எனவே அமைச்சர் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும். அந்த வழக்கிற்கு அப்பீல் செய்ய வேண்டும். அறநி லையத்துறையோடு ஆலோசித்து அந்த இடத்தி லேயே மணிமண்டபம் பணி களை மீண்டும் தொடங்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதிலளித்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், குமரி மாவட்டத்தில் துறையின் பணிகள் குறித்து ஆய்வு செய்கிற போது அந்த பிரச்சினை எனது கவனத்திற்கு வந்தது. முதல்-அமைச்சர் உத்தரவின் அடிப்படையில் கலெக்டர் கவனத்திற்கு எடுத்து சொல்லியிருக்கிறோம். நீதிமன்ற உத்தரவு இருக்குமானால் அந்த பிரச்சினையை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இம்மாத இறுதிக்குள், நானும் அந்த இடத்தை ஆய்வு செய்ய இருக்கிறேன் என்றார்.

    • குறைதீர்க்கும் நாளில் ஆதிதிராவிட மக்கள் மனு
    • கல்லறைகளை அகற்றி விட்டு அங்கு அரசு அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்பதற்கான வேலைகள் நடக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து மனு அளித்தனர். குமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் வந்து ஒரு மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்புதூர் கிராமத்தில் சுமார் 400 ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. அந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மரணம் அடைந்தால் அடக்கம் செய்வதற்காக காற்றாடி விளை பகுதியில் அமைந்து உள்ள சுடுகாட்டை 200 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

    அங்கு சுடுகாடு மற்றும் இடுகாடு அமைந்துள்ளது. இந்த இடுகாட்டில் பல கல்லறைகளும் அமைந்து உள்ளன. இந்த நிலையில் கல்லறைகளை அகற்றி விட்டு அங்கு அரசு அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்பதற்கான வேலைகள் நடக்கிறது.

    இதனால் ஆதிதிராவிடர் மக்கள் பாதிக்கப்படுவார் கள். எனவே அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். 200 ஆண்டு களாக பயன்படுத்தி வரும் சுடுகாடு நிலத்தை ஆதி திராவிட மக்களுக்காக கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2 நாட்கள் நடக்கிறது
    • கூடுதல் விவரங்களுக்கு 04652-260008 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தை தொழில் வளத்தில் முதன்மை மாநிலமாக மாற்றும் பொருட்டு தொழில்களுக்கு தோள் கொடுத்து தொழில் வளம் பெருக்க புதிய தொழில்முனைவோர்களை கண்டறியும் பொருட்டு தொழில் ஊக்குவிப்பு முகாம் 15-ந் தேதி கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கிலும், 22-ந் தேதி தோவாளை ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கிலும் நடைபெற உள்ளது.

    தமிழக அரசு செயல்ப டுத்தி வரும் வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ( UYEGP ) நமது மாவட்டத்திற்கு 98 நபர்களுக்கு ரூ.78 லட்சம் மானிய திட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பலசரக்கு வியாபாரம், மின்சார பொருட்கள் வியா பாரம், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை போன்ற அனைத்து வகை யான வியாபாரங்களுக்கும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது . ரூ.5 லட்சம் வரையுள்ள திட்டங்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு 25 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.

    தமிழ்நாடு அரசின் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 39 நபர்களுக்கு ரூ .385 லட்சம் மானிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சேவை மற்றும் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் ரூ.5 கோடி வரை கடன் பெற பரிந்துரைக்கப்படும்.

    இத்திட்டத்தில் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து விண்ணப்பத்தை பதி விறக்கம் செய்யலாம். மத்திய அரசால் செயல்ப டுத்தப்பட்டு வரும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 189 நபர்களுக்கு ரூ.546 லட்சம் மானிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறத்தில் சிறப்பு பிரிவினர் தொழில் தொடங்க முன்வரும் பட்சத்தில் அதிகபட்சம் 35 சதவிகிதம் மானியம் பெற வழிவகை

    உள்ளது. இத்திட்டத்தில் கடன் பெற www.kviconline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து விண்ணப்பத்தை பதி விறக்கம் செய்யலாம். மேற்படி கடன் திட்டங்க ளுக்கு விண்ணப்பிக்க கடவுசீட்டு அளவு நிழற்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை , விலைப்புள்ளி, கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களுடன் மேற்படி அசல் சான்றிதழ்களுடன் முகாமில் கலந்து கொள்ப வர்களுக்கு கூட்ட அரங்கி லேயே விண்ணப்பம் பதிவேற்றம் செய்து வழங்கப்படும் .

    மேலும் கூடுதல் விவ ரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் , தொழிற்பேட்டை கோணம் அஞ்சல் , நாகர்கோவில் -4 அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04652-260008 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கடும் பனிப்பொழிவு-முகூர்த்தம் காரணமாக உயர்வு
    • ஒரு கிலோ மல்லிகை ரூ.3 ஆயிரம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தச் சந்தைக்கு தோவாளை, ஆரல்வாய்மொழி,காவல் கிணறு,புதியம்புத்தூர், மாடநாடார் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், மானாமதுரை, மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன் கோவில், ராஜபாளையம் பகுதிகளில் இருந்து மல்லி கைப்பூவும் வருகின்றன.

    சேலத்தில் இருந்து அரளி, பெங்களூரூவில் இருந்து மஞ்சள் கேந்தி, பட்டர் ரோஸ், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி பகுதிகளில் இருந்து பச்சை, துளசி போன்றவையும், ஆரல்வாய்மொழி, தோவாளை, ராஜாவூர், மருங்கூர் பகுதிகளில் இருந்து கோழிப்பூ, அரளி உள்ளிட்ட பூக்களும் தினமும் விற்பனைக்கு வருகின்றன.

    இங்கிருந்து மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மட்டுமின்றி, கேரளாவுக்கும் பூக்கள் அனுப்பப்படுகின்றன. எனவே தோவாளை சந்தை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கு பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்தி ருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அதே நேரம் தேவை அதிகமாக உள்ள தால் பூக்களின் விலை கிடு கிடு உயர்வை சந்தித்து உள்ளது.

    தோவாளை சந்தையில் இன்று மல்லிகைப் பூ கிலோ ரூ. 3 ஆயிரத்துக்கும், பிச்சிப்பூ ரூ.1750-க்கும் விற்கப்பட்டது.அரளிப் பூ கிலோ ரூ.250, சேலம் அரளி ரூ.220, சம்பங்கி ரூ.125-க்கு விற்கப்பட்டன.

    மஞ்சள் கேந்தி ரூ.60, சிகப்பு கேந்தி ரூ.70, மரிக்கொழுந்து ரூ.150, பட்டர் ரோஸ் ரூ.150,கோழிப்பூ ரூ.50, துளசி ரூ.50 என விற்கப்படுகிறது. இந்த விலையேற்றத்திற்கு பூக்களின் வரத்து குறைவும், அதிக அளவிலான முகூர்த்த ங்கள் நாளை இருப்பதுமே காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பிச்சி பூ கிலோ ரூ.1400-க்கு விற்பனை
    • நாளை தீபாவளி பண்டிகை

    கன்னியாகுமரி:

    தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் ஊட்டி, பெங்களூரு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும், பண்டிகை நாட்களில் இங்கு பூக்கள் வாங்க பல்வேறு ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த சில நாட்களா கவே பூக்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நாளை (24-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதனால் பூக்களை வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லறையா கவும் வாங்குவதற்கு ஏராள மானோர் திரண்டனர். பூ மார்க்கெட்டில் வியாபா ரிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் பூக்களின் விற்பனை அதிகரிப்பால் அதன் விலை அதிகரித்து காணப்படுகிறது.

    கிலோ ஒன்றுக்கு அதன் விலை வருமாறு:-

    பிச்சி ரூ.1400, மல்லிகை ரூ.900, முல்லை ரூ.1250, சேலம் அரளி ரூ.250, சம்மங்கி ரூ.100, பட்டர் ரோஸ் ரூ.180, மஞ்சள் மற்றும் சிகப்பு கேந்தி ரூ,60, கொழுந்து ரூ.110, மரிக்கொழுந்து ரூ.120, துளசி ரூ.35.

    • முன்பக்க கதவை உடைத்து கைவரிசை
    • கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை கமல்நகர் ரோஜா தெருவை சேர்ந்தவர் பாக்கிய சுப்பிரமணியம். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அய்யம்மாள். இவர்தனது குழந்தையுடன் தோவாளையில் வசித்து வருகிறார்.

    வீட்டின் மேல் மாடியில் அய்யம்மாளும் கீழ் பகுதியில் அவரது சகோதரி தயாவும் வசித்து வருகிறார்கள். தயாவின் கணவர் முருகானந்தம் மத்திய போலீஸ் படையில் வேலை செய்து வருகிறார்.

    கணவர் சென்னையில் வேலை பார்ப்பதால் அய்யம்மாள் தனது குழந்தையுடன் தினசரி இரவில், சகோதரி தயா வீட்டில் படுத்து உறங்குவது வழக்கம். அதன்படி நேற்று இரவும் வீட்டை பூட்டி விட்டு தயா வீட்டிற்கு அய்யம்மாள் வந்து விட்டார்.

    இன்று அதிகாலை அவர் தனது வீட்டிற்கு சென்று பார்த்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யம்மாள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தது.

    இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் 12 பவுன் நகை கொள்ளை போய் இருப்பதாக போலீசாரிடம் அய்யம்மாள் தெரிவித்தார்.

    அதன் பேரில் டவுன் துணை சூப்பிரண்டு நவீன்குமார் ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். ஆள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு நிறைந்த பகுதியில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு

    நாகர்கோவில்:

    தோவாளை தாலுகாவில் 123 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் ஆரல்வாய்மொழி பகுதியில் 41 அங்கன்வாடி மையங்கள் உள்ளன.இந்த மையத்திற்குட்பட்ட 50 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் சார்பில் பண்டாரபுரம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பொன்பகவதி தலைமை தாங்கினார். ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், தோவாளை ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன், பீமநகரி ஊராட்சி தலைவர் சஜிதா சுப்பிரமணியம், சகாயநகர் ஊராட்சி தலைவர் மகேஷ் ஏஞ்சல், திருப்பதிசாரம் ஊராட்சி தலைவர் சிந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அனைவரையும் வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வளைகாப்பு நிகழ்ச்சியானது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாகும். இக்கால கட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். மேலும் எந்த துயர சம்ப வத்தினை பற்றியும் சிந்தித்து மன அழுத்தத்தை ஏற்படுத்த கூடாது.

    மேலும் உங்களின் குழந்தைகள் ஆரோக்கி யமாக இருக்க வேண்டும் என்றால் குழந்தை பிறந்ததும் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதை கடைபிடிக்க வேண்டும். இது அனைத்து கர்ப்பிணி பெண்களும் கடைப்பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜீவிதா, தோவாளை ஊராட்சி துணைத்தலைவர், தாணு, பண்டாரபுரம் ஊர் தலைவர் ராமன், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 1 கிலோ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனை
    • ஓணம் பண்டிகை விற்பனை களை கட்டியது

    கன்னியாகுமரி:

    ஓணம் பண்டிகை நாளை மறுநாள் (8-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த சில நாட்களாக தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை களை கட்டியுள்ளது.

    தமிழக மற்றும் கேரள வியாபாரிகள், பொதுமக்கள் சந்தைக்கு படையெடுத்து வந்து பூக்களை வாங்கிச் செல்கின்றனர். அவர்களின் வருகையை கருத்தில் கொண்டு தோவாளை சந்தைக்கு கூடுதல் பூக்கள் வரவழைக்கப்பட்ட போதி லும், பூக்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.

    அதிலும் குறிப்பாக மல்லிகைப் பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லி கைப்பூ ரூ.4 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. நாளை மறுநாள் நடைெபறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மொழி மக்கள்அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட இருப்பதால் பூக்களுக்கு வரும் நாட்களில் மேலும் அதிக கிராக்கி இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் தற்போது தோவாளை சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4 ஆயிரத்திற்கும் பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ. 2 ஆயிரத்திற்கும், சேலம்அரளி, சம்பங்கி ஆகியவை கிலோ ரூ.400க்கும், கனகரம்பரம் ஒரு கிலோ ரூ. 2 ஆயிரத்திற்கும் விற்கப்ப டுகிறது.

    மற்ற பூக்களும் விலை உயர்ந்து உள்ளது. இன்று மட்டும் 150 டன் பூக்கள் விற்பனையாகியுள்ளது.ஓணம் பண்டிகை விழா நாளில் தோவாளை பூ சந்தையில் பூக்கள் விலை இதை விட அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் 200 டன்னுக்கும் மேற்பட்ட பூக்கள்இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • மல்லி கிலோ ரூ.1700
    • வியாபாரிகள் குவிந்தனர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. இங்கு ஆரல்வாய்மொழி, புதியம்புத்தூர், மாடன் நாடார் குடியிருப்பு, ஆவரைகுளம், குமாரபுரம், ஆகிய பகுதிகளிலிருந்து பிச்சிப்பூவும் சங்கரன் கோவில், ராஜபாளையம், வத்தலக்குண்டு, மதுரை, மானாமதுரை, கொடை ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூவும் விற்பனைக்கு வருகிறது.

    சேலத்தில் இருந்து மஞ்சள் அரளியும், பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கேந்தி பட்டர் ரோஸ், தென்காசி, அம்பாசமுத்திரம், புளி யங்குடி, திருக்கனங்குடி ஆகிய பகுதிகளில்இருந்து பச்சை, துளசியும் தோவாளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தாமரை, கோழிக்கொண்டை, அரளி, சம்மங்கி ஆகிய பூக்கள் சந்தைக்கு வருகிறது.

    இங்கிருந்து குமரி மாவட்டம், பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங் களுக்கு விற்பனை ஆகி வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தோவாளை சந்தைக்கு கூடுதல் பூக்கள் வந்தது. இன்று வியாபாரிகள், பொதுமக்களும், அரசு அலுவலர்களும், தோவாளை சந்தையில் பூக்களை வாங்கி சென்றனர்.

    இன்றைக்கு பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.800, மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1700, அரளி ரூ.300, சம்பங்கி ரூ. 500 கோழிக்கொண்டை ரூ.50, பட்டர் ரோஸ் ரூ. 750, சிவப்பு கேந்தி ரூ. 55, மஞ்சள் கேந்தி ரூ.40, துளசி ரூ.30, கொழுந்து ரூ.90, பச்சை ரூ.8, முல்லை ரூ.800, கனகாம்பரம் ரூ.1600 என மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

    இதுகுறித்து வியாபாரி கள் கூறும் போது விநாயகர் சதுர்த்தி மட்டுமல்ல ஓணத்தை முன்னிட்டும் பூக்கள் விலை இதைவிட கூடும் என்றும் தெரிவித்தனர் மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 100 டன் வரை பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

    கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பூக்கள் வரத்து அதிகம் வியாபாரிகள் கூட்டத்தால் வியாபாரம் சூடு பிடித்தது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகளும் கிருஷ்ணசாமி பக்தர்கள் சேவா சங்கத்தினரும் செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமாரி:

    தோவாளை கிருஷ்ண சுவாமி கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் உறியடி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சிறப்பு நிகழ்ச்சியாக 7-ம் திருவிழா அன்று கண்கவர் அலங்காரத்தோடு மலர் மாலையோடு ஸ்ரீ விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்திலும், முருகர் மயில் வாகனத்திலும், அம்மையப்பர் ரிஷப வாகனத்திலும், கிருஷ்ண சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும் பல்லக்கில் பக்தர்களோடு மேளதாளத்தோடு வீதி உலா வருதல் நடைபெற்றது.

    நாளை (27-ந் தேதி)செண்டை மேளம் முழங்க உறியடி மகா உற்சவமும்,10-ம் திருவிழா அன்று மணிதட்டு வாக னத்தில் விநாயகர், முருகர், அம்மையப்பர், கிருஷ்ண சாமி ஆராட்டுக்கு எழுந்தரு ளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை அறநிலையத் துறை அதிகாரிகளும் கிருஷ்ண சாமி பக்தர்கள் சேவா சங்கத்தினரும் செய்து வருகின்றனர்.

    ×