search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கையெழுத்து"

    • ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு மேஜிக் செய்து காண்பித்தனர்.
    • திண்டுக்கல் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-பழனி சாலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 14ந் தேதி டெல்லியை சேர்ந்த ரோகித்ராய் (வயது22), கமல்ராய் (22), மெகந்தர்ராய் (30), அஜய்ராய் (23), மேக்ராஜ் (60) ஆகிய 5 பேர் திண்டுக்கல்மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மேஜிக் செய்து காட்ட அனுமதி வழங்க வேண்டும் என விண்ணப்பம் அளித்தனர்.

    ஆனால் இதற்கு முதன்மை கல்வி அலுவலர் நாசுருதீன் அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதனையடுத்து அவர்கள் கல்வி அலுவலக வெளியில் இருந்த அறிவிப்பு பலகையில் நாசுருதீன் கையெழுத்தை ஸ்கேன் செய்து பள்ளிகளில் மேஜிக் செய்ய அனுமதி வழங்கப்ப டுவதாக போலியான சுற்றறிக்கையை தயார் செய்தனர். மேலும் ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு மேஜிக் செய்து காண்பித்தனர்.

    அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பள்ளி ஆசிரியர்கள் சிலர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் அனுமதி அளிக்கவில்லை என தெரிய வந்தது. இதனையடுத்து மேஜிக் ஆசாமிகளை பிடிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகார் அளித்தார். அதன்பேரில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • நீதிபதி குருமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்து இயக்கத்தை முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் சட்டபணிகள் ஆணைக்குழு செயல்பாடுகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழக்கறிஞர்கள், வழக்காடிகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, சார்பு நீபிதி சுந்தரராஜ், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில்முரளி, நீதிதுறை நடுவர்கள் அனிதா கிரிஸ்டீ, சத்திய நாராயணன், கூடுதல் மகிளா குற்றவியல் நீதிதுறை நடுவர் ஆப்ரின் பேகம் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், சட்டம் சார் தன்னார்வலர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் கையெழுத்து இயக்க விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி வைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி (பொறுப்பு) மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு சிறப்பு நீதிமன்ற அமர்வு நீபிதி பூரண ஜெய ஆனந்த் தலைமை தாங்கி பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க தலைவர், வழக்கறிஞர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர், முத்திரை ஆய்வாளர், நீதிமன்ற ஊழியர்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், தன்னார்வ சட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு பேரணி-கைெயழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • மனிதசங்கிலி நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகரில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பங்கேற்று விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகையில் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார். பின்னர் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்.

    தொடர்ந்து விழிப்பு ணர்வு பிரசார வாகனத்தை யும் கலெக்டர் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு, மனித சங்கிலி போன்றவற்றில் கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் தொழி லாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) மைவிழிச்செ ல்வி, விருதுநகர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் வேல்முருகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு இயக்குநர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் 11 இடங்களில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மனிதசங்கிலி நடந்தது.

    இதேபோல் சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர், சாத்தூர், அருப்புக் கோட்டையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, கையெழுத்து இயக்கம் நடந்தது.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி தெரிவித்து உள்ளார்.

    • இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது
    • இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்,

    போதை பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்க, மதுவை ஒழிக்க அரியலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமையில் மாவட்ட பொருளாளர் அருண்பாண்டியன் முன்னிலையில் ஒரு கோடி கையெழுத்துக்கள் பெற்று தமிழக முதல்வரிடம் மனு கொடுக்க திட்டமிட்டனர். கையெழுத்து இயக்கத்தை ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் கையெழுத்து போட்டு துவக்கி வைத்தார். பஸ் நிலையத்திற்கு வந்த ஏராளமான பொதுமக்கள், பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து மதுவை ஒழிக்க வலியுறுத்தி கையெழுத்து போட்டனர். இதில் போதை வஸ்துகளான மது, கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற கொடிய போதைக்கு சுமார் 10 கோடி பேர் அடிமையாக உள்ளனர். அவர்களை மீட்டெடுக்க வேண்டும், அனைவரும் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து கப்பல் வழியாகவும், விமானங்கள் வழியாகவும் சட்டவிரோதமாக கொண்டு வந்து குவிக்கப்படும் கொடிய போதை பொருட்களை தடுக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும் கையில் கத்தியுடன் கைது செய்யப்படும் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் 18 வயது முதல் 30 வயது உடைய போதைக்கு அடிமையானவர்களே. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இரவு, பகலும் பாதுகாப்பற்ற சூழல் மாறி வருகிறது. இரவு நேர தெருக்களில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை மீட்டெடுக்க வேண்டியது ஒன்றிய மாநில அரசுகளின் கடமையாகும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட தலைவர் வெங்கடாஜலம், கைத்தறி நெசவு தலைவர் துரைராஜ், பத்மாவதி, கோவிந்தராஜ், ரவி, முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • சன் பயோ நேச்சுரல்ஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • வேப்பங்கொட்டையில் இருந்து எண்ணெய் தயாரிப்பது, மூலப்பொருட்களை எவ்வாறு சேமிப்பது குறித்து விவாதம் நடந்தது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயோ ஆராய்ச்சி மற்றும் பூச்சி கட்டுப்பாடு எனும் தலைப்பில் ஆய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக சன் பயோ நேச்சுரல்ஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி தாளாளர் டாக்டர் சேது குமணன், சன் பயோ நேச்சுரல்ஸ் நிறுவன அதிகாரி சக்திவேல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    கல்லூரியின் கூட்ட அரங்கில் பயோ ஆர்கானிக் உரம் மற்றும் பூச்சி கட்டுப்பாடு குறித்த விவாதம் நடந்தது. வேப்பங்கொட்டையில் இருந்து எண்ணெய் தயாரிப்பது, மூலப்பொருட்களை எவ்வாறு சேமிப்பது குறித்து விவாதம் நடந்தது. உதவி பேராசிரியர் கருப்புராஜ், ஆர்கானிக் உரம் தொழில்நுட்பத்தை பற்றியும், பூச்சியல் இணை பேராசிரியர் விஷ்ணுபிரியா, ஆர்கானிக் பூச்சிக்கொல்லி பற்றியும் பேசினர். இதில் கல்லூரி தாளாளர் சேதுகுமணன், பயோ நேச்சுரல்ஸ் சக்திவேல், ஆடிட்டர் எழில், இயக்குநர் கோபால் உள்பட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் குறித்து நிகழ்வில் கூறப்பட்டது.
    • காப்பீட்டு நிறுவனம் மற்றும் மீன்வள பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நன்னீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் குறித்து நிகழ்வில் கூறப்பட்டது.

    நிகழ்வில் காப்பீட்டு நிறுவனம் மற்றும் மீன்வள பல்கலைகழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டது.

    நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • மாணவி ஸ்ரீமதி மர்ம சாவு வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற 3 பேர் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டனர்.
    • இந்த வழக்கில் கைதான 5 பேருக்கும் சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

    மதுரை

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிபிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    அவர்கள் 5 பேருக்கும் சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதில் ஆசிரி யைகள் 2 பேரும் சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்திலும், பள்ளி தாளாளர் உள்ளிட்ட மற்ற 3 பேரும் மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்திலும் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தது.

    அந்த நிபந்தனையின் அடிப்படையில் 5 பேரும் சேலம் சிறையில் இருந்து விடுக்கப்பட்டனர். கோர்ட்டு உத்தரவுபடி பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, தலைமை ஆசிரியர் சிவசங்கரன் ஆகிய 3 பேரும் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் நேற்று காலை மற்றும் மாலை ஆஜராகி கையெழுத்திட்டனர்.

    அவர்கள் 2-வது நாளாக இன்று காலை 10:30 மணி அளவில் தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு திரும்பிச் சென்றனர்.

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.
    • போட்டி தொடர்பாக செல்பி பூத்தில் சுய புகைப்படம் (செல்பி) எடுத்துக் கொண்டார்.

    மயிலாடுதுறை:

    சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    அதனை விளம்பரப்படு த்தும் வகையில் மயிலாடு துறை மாவட்டத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான இலச்சினை மற்றும் சின்னத்தினை அச்சிட்ட பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை கலெக்டர் லலிதா கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    தொடர்ந்து மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக செல்பி பூத்தில் சுய புகைப்படம் (செல்பி) எடுத்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜா மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்குவதற்கு எவ்வாறு பயிற்றுவிப்பது என்று பார்ப்போம்.
    • மீண்டும், மீண்டும் எழுதி பயிற்சி செய்தல் வேண்டும்.

    அழகான கையெழுத்து குழந்தைகளின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது. சரளமாக வாசிப்பதற்கு உதவுகிறது. காட்சி உணர்வை செயல்படுத்துகிறது. மதிப்பெண்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்குவதற்கு எவ்வாறு பயிற்றுவிப்பது என்று பார்ப்போம்.

    முதலில் குழந்தைகள் எந்தெந்த விரல்களைப் பயன்படுத்தி எழுதுகோல்களைப் பிடித்து எழுதுகிறார்கள் என்று கவனிக்க வேண்டும். சிலர் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலையும், ஒரு சிலர் கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் பயன்படுத்தி எழுதுவார்கள். இதனைக் கண்டறிந்த பின்பு அவர்களின் வசதிக்கு ஏற்றது போல எளிமையாகக் கையாளும் வகையில் எடை மற்றும் தடிமன் குறைந்த எழுதுகோல்களை வழங்க வேண்டும். இதன் மூலம், எழுதும்போது அவர்களையும் அறியாமல் விரல்களுக்கு அழுத்தம் கொடுப்பது தவிர்க்கப்பட்டு விரல் வலி, கை வலி இல்லாமல் எழுதுவதில் கவனம் அதிகரிக்கும்.

    இரண்டாவதாக, எழுத்துக்களை அதன் வரி வடிவம் (நேர்க்கோடு, படுக்கைக் கோடு, சாய்வுக் கோடு), வளைவு, சுழி போன்றவற்றை வடிவம் மாறாமல் எழுதப் பழக வேண்டும். அவ்வாறு பழகும்போதுதான் கையெழுத்து அழகாகும். இதற்கு சிறு கட்டமிடப்பட்ட குறிப்பேடு, இரட்டை வரி, நான்கு வரி குறிப்பேடு பயிற்சியே சிறந்தது. இதன் மூலம் ஒரு எண் அல்லது எழுத்து, இந்த அளவில் தான் அமைய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள முடியும்.

    மூன்றாவதாக, எழுத்துக்களை முறையான அமைப்பு, வடிவத்தில் எழுதக் கற்றுக் கொண்ட பின்னர், ஒரு வரி நேர்க்கோடு இட்டக் குறிப்பேட்டில் எழுதப் பழக வேண்டும். இதன் மூலம் எழுத்துக்களின் அடிப்பகுதியை எவ்வாறு கோட்டின் மேற்புறம் அமைத்து எழுத வேண்டும்; மேல் நோக்கி மற்றும் கீழ் நோக்கி எழுத வேண்டும் என்று தெரிந்துகொள்ள முடியும்.

    நான்காவதாக, எழுதும் வார்த்தையில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் ஒரே அளவில் அமைய வேண்டும். ஒன்று பெரியது, மற்றொன்று சிறியது என்று அளவு மாறுபடாமல், எழுத்துக்களின் அளவிலும் கவனம் செலுத்தி எழுத வேண்டும். பயிற்சியே சிறந்த ஆசான்! எனவே மீண்டும், மீண்டும் எழுதி பயிற்சி செய்தல் வேண்டும். இதன் மூலம் நிதானமாக எழுதும் சூழலிலும், 'தேர்வு' போன்று கால அவகாசம் அளித்து, வேகமாக எழுத வேண்டிய சூழலிலும் அழகாக எழுத முடியும்.

    ×