search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீமதி மர்ம சாவு வழக்கில் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்ட 3 பேர்
    X

    ஸ்ரீமதி மர்ம சாவு வழக்கில் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்ட 3 பேர்

    • மாணவி ஸ்ரீமதி மர்ம சாவு வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற 3 பேர் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டனர்.
    • இந்த வழக்கில் கைதான 5 பேருக்கும் சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

    மதுரை

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிபிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    அவர்கள் 5 பேருக்கும் சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதில் ஆசிரி யைகள் 2 பேரும் சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்திலும், பள்ளி தாளாளர் உள்ளிட்ட மற்ற 3 பேரும் மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்திலும் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தது.

    அந்த நிபந்தனையின் அடிப்படையில் 5 பேரும் சேலம் சிறையில் இருந்து விடுக்கப்பட்டனர். கோர்ட்டு உத்தரவுபடி பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, தலைமை ஆசிரியர் சிவசங்கரன் ஆகிய 3 பேரும் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் நேற்று காலை மற்றும் மாலை ஆஜராகி கையெழுத்திட்டனர்.

    அவர்கள் 2-வது நாளாக இன்று காலை 10:30 மணி அளவில் தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு திரும்பிச் சென்றனர்.

    Next Story
    ×