search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "signing"

    • சமீபத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
    • சமீபத்தில் சீனாவின் உளவுக்கப்பல் மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து மாலத்தீவு, சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. சமீபத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்நிலையில் சீனா-மாலத்தீவு இடையே புதிய இரண்டு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் கசான் மவுமூன், சீன அரசின் சர்வதேச ராணுவ ஒத்துழைப்பு அலுவலக துணை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஜாங் பாகுன் ஆகியோர் ஒப்பந்தங்களை பரிமாறி கொண்டனர். இந்த ஒப்பந்தம் மூலம் மாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவிகளை வழங்க சீனா உறுதியளித்துள்ளது. சமீபத்தில் சீனாவின் உளவுக்கப்பல் மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு பேரணி-கைெயழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • மனிதசங்கிலி நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகரில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பங்கேற்று விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகையில் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார். பின்னர் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்.

    தொடர்ந்து விழிப்பு ணர்வு பிரசார வாகனத்தை யும் கலெக்டர் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு, மனித சங்கிலி போன்றவற்றில் கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் தொழி லாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) மைவிழிச்செ ல்வி, விருதுநகர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் வேல்முருகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு இயக்குநர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் 11 இடங்களில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மனிதசங்கிலி நடந்தது.

    இதேபோல் சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர், சாத்தூர், அருப்புக் கோட்டையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, கையெழுத்து இயக்கம் நடந்தது.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி தெரிவித்து உள்ளார்.

    சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வடகொரிய தலைவருடன் முக்கிய ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட உள்ளார். #TrumpKimSummit #USPresidentDonaldTrump
    சிங்கப்பூர்:

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது.  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள  கேபெல்லா ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்ததாக இருவரும் தெரிவித்தனர்.



    அதன்பின்னர், கிம் ஜாங் அன் - டொனால்டு டிரம்ப் இடையே 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, இரு தலைவர்களின் முக்கிய உதவியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் இருந்தனர். மதிய உணவு அருந்திய பின்னர் இருவரும் தனியாக நடந்து சென்று பேசினர். அப்போது, முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து நேரடியாக இருவரும் விவாதித்தனர்.

    இந்த சந்திப்பு குறித்து டிரம்ப் கூறும்போது, ‘இது மிகவும் அற்புதமான கூட்டம், நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எதிர்பார்த்ததைவிட இந்த பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்தது. இருவரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளோம்’ என்றார். ஆனால் அது எந்த துறை சார்ந்தது என்ற விவரத்தை வெளியிடவில்லை. #TrumpKimSummit #USPresidentDonaldTrump 
    ×