என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு பேரணி-கையெழுத்து இயக்கம்
- குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு பேரணி-கைெயழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- மனிதசங்கிலி நடந்தது.
விருதுநகர்
விருதுநகரில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பங்கேற்று விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகையில் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார். பின்னர் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்.
தொடர்ந்து விழிப்பு ணர்வு பிரசார வாகனத்தை யும் கலெக்டர் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு, மனித சங்கிலி போன்றவற்றில் கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் தொழி லாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) மைவிழிச்செ ல்வி, விருதுநகர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் வேல்முருகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு இயக்குநர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் 11 இடங்களில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மனிதசங்கிலி நடந்தது.
இதேபோல் சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர், சாத்தூர், அருப்புக் கோட்டையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, கையெழுத்து இயக்கம் நடந்தது.
மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி தெரிவித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்