search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "handwriting"

    • உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • நீதிபதி குருமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்து இயக்கத்தை முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் சட்டபணிகள் ஆணைக்குழு செயல்பாடுகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழக்கறிஞர்கள், வழக்காடிகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, சார்பு நீபிதி சுந்தரராஜ், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில்முரளி, நீதிதுறை நடுவர்கள் அனிதா கிரிஸ்டீ, சத்திய நாராயணன், கூடுதல் மகிளா குற்றவியல் நீதிதுறை நடுவர் ஆப்ரின் பேகம் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், சட்டம் சார் தன்னார்வலர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    ×