search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கையெழுத்து இயக்க விழிப்புணர்வு பிரசாரம்
    X

    கையெழுத்து இயக்க விழிப்புணர்வு பிரசாரம்

    • ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் கையெழுத்து இயக்க விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி வைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி (பொறுப்பு) மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு சிறப்பு நீதிமன்ற அமர்வு நீபிதி பூரண ஜெய ஆனந்த் தலைமை தாங்கி பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க தலைவர், வழக்கறிஞர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர், முத்திரை ஆய்வாளர், நீதிமன்ற ஊழியர்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், தன்னார்வ சட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×