search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைத்தறி"

    • மாவட்ட அளவிலான கைத்தறி மற்றும் கைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திறந்து வைத்தார்.
    • அனைத்து கைத்தறி ரகங்களுக்கும் தள்ளுபடி மாநில அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ் நிலையம் அருகில் தனியார் ஹாலில் அமைக்கப்பட்டு ள்ள மாவட்ட அளவிலான கைத்தறி மற்றும் கைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் கமல க்கண்ணன் திறந்து வைத்தார்.

    சென்னை நெசவாளர் சேவை மையம் சார்பில் திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான கைத்தறி மற்றும் கைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை திண்டுக்கல்லில் வருகிற 23ந் தேதி வரை 6 நாட்கள் நடைபெறவுள்ளது.

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இயங்கும் 20-க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 5 கைவினை கலைஞர்கள் தங்கள் உற்பத்தி ரகங்கள் மற்றும் பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படு த்தியுள்ளனர்.

    மேலும் பரமக்குடி காட்டன் சேலைகள், அருப்பு க்கோட்டை காட்டன் சேலைகள், காட்டன் லுங்கிகள், துண்டுகள், சட்டைகள், காஞ்சிபுரம் பட்டு சேலைகள், செயற்கை ப்பட்டு சேலைகள், திண்டுக்கல் காட்டன் சேலைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் இதர கைத்தறி , ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு ள்ளன. அனைத்து கைத்தறி ரகங்களுக்கும் தள்ளுபடி மாநில அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

    • குருசாமிபாளையத்தில்கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
    • சங்கத்திற்கு சென்று மானேஜர் பிரகாஷிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில் நெ.எஸ்.844 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தற்போது 260-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர்.

    இந்த சங்கத்தில் 3 பேர் ஊழியர்களாக இருந்து வருகின்றனர். சங்க உறுப்பினர்களுக்கு பாவு கொடுத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் இலவச வேட்டி சேலைகள் வாங்கி அரசுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் சேலைகள் கோவாப்ரேடிவ் நிறுவனத்திற்கும் அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் குருசாமிபாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் (32) சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் சங்கத்தின் மேனேஜர் (பொறுப்பு) பிரகாஷிடம் பாவு நூல் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் மேனேஜர் பிரகாஷ் ஒரு வேட்டிக்கு ரூ.5 தர வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விருப்பமில்லாத லோகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் லோகநாதன் சங்கத்திற்கு சென்று மானேஜர் பிரகாஷிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் உடனடியாக சங்கத்திற்குள் நுழைந்து கையும் களவுமாக மேனேஜர் பிரகாஷை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவரிடமிருந்து லஞ்சமாக வாங்கிய ரூ.3 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கணக்கில் வராத ரூ.49 ஆயிரம் வைத்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது பற்றி அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சங்க உறுப்பினர்களிடமிருந்து வசூலித்ததாக மேனேஜர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து லஞ்சம் வாங்கிய பிரகாஷை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சி.ஐ.டி.யூ தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல்
    • கைத்தறி நெசவுத் தொழில் நலிவடையும் மாதங்களில் அரசு நிவாரணம் வழங்கவும் கோரிக்கை

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் பகுதியில் சி.ஐ.டி.யூ தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளன மாநில குழுக்கூட்டம் சிறுமுகையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமை வைத்தார். மாநில பொதுச் செயலாளர் முத்துக்குமார், மாவட்டத் தலைவர் சிங்காரவேலு, கோவை மாவட்ட செயலாளர் இ.என்.ராஜகோபால் முன்னிலை வைத்தனர்.

    மாவட்ட பொருளாளர் டி.ஆர்.ராமசாமி வரவேற்றார். காஞ்சிபுரம், கடலூர், பரமக்குடி, தேனி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கைத்தறி சேலை ரகங்களை விசைத்தறியில் நெய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறி செயல்படும் விசைத்தறிகளை பறிமுதல் செய்ய வேண்டும்.

    கைத்தறி சேலைகளின் மூலப் பொருட்களான பட்டு நூல், நூல் ஜரிகை ஆகியவற்றின் சந்தை விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட தொடக்க நெசவாளர் கூட்டுறவு வங்கி தொடங்க வேண்டும்.

    கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும் நிரந்தர அடையாள அட்டை வழங்க வேண்டும். கைத்தறி நெசவுத் தொழில் நலிவடையும் மாதங்களில் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.

    கைத்தறி சேலைகளை சாமானியரும் வாங்குவதற்கு ஏதுவாக ஜி.எஸ்.டி வரிவிலக்கு அளிக்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு வழக்கத்தில் இருந்த மருத்துவ திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் கோவை மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.

    • 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நாமக்கல் கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.
    • கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மருத்துவ காப்பீடு அட்டையினை 20 பணியாளர்களுக்கும், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 12 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் முத்ரா கடன் உதவிகளையும் வழங்கினார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நாமக்கல் கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மருத்துவ காப்பீடு அட்டையினை 20 பணியாளர்களுக்கும், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 12 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் முத்ரா கடன் உதவிகளையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் டாக்டர் உமா பேசியதாவது:-

    கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்டு 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக நாடு முழுவதும் கொண்டா டப்பட்டு வருகிறது.

    கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியா ளர்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டையும் நெச வாளர் முத்ரா திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்க ளுக்கு முத்ரா கடன் உதவி களும் வழங்கப்படுகிறது. இதுபோன்று நெசவா ளர்களின் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வரு கிறது. நெசவாளர்கள் இத்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து சிறப்பாக நெசவுத் தொழில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவா ளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி துண்டுகள், வேட்டி கள், காட்டன் சேலைகள், காட்டன் கோர்வை சேலைகள், ஜமுக்காளம் இடம்பெற்றுள்ளன.

    நிகழ்ச்சியில் கைத்தறி உதவி இயக்குனர் பழனி குமார், தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் ஜெயலட்சுமி, கைத்தறித்துறை அலுவ லர்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து ராசிபுரம் நகராட்சி வேலா பூங்கா அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தவறிய தடுப்பூசி தவணைகளை செலுத்தும் சிறப்பு முகாமினையும் கலெக்டர் உமா பார்வையிட்டார்.

    • தேசிய கைத்தறி தினமானது 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் அன்று தொடங்கப்பட்டது.
    • நெசவாளர்களின் பெருமையை உயர்த்தவும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கைத்தறிதுறை சார்பில் 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் அமைக்கப்ப ட்டிருந்த ஜவுளி கண்காட்சியினை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தேசிய கைத்தறி தினமானது 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கைத்தறியின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி கைத்தறிநெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், நெசவாளர்களின் பெருமையை உயர்த்தவும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் மென் பட்டு சேலைகள், கோர காட்டன் சேலைகள், பெட்சீட், ஜமுக்காளம், துண்டுகள் மற்றும் மிதியடிகள் ஆகியவை பருத்தி இழை மற்றும் பட்டு இழை ஆகியவற்றை கொண்டு பாரம்பரிய தொழில்நுட்ப த்துடனும், தனித்துவத்துடனும் உற்பத்தி செய்யப்படு கின்றது.

    மேற்படி கைத்தறி ரகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கைத்தறி ரகங்களை பெருமளவில் கொள்முதல் செய்து, நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், கைத்தறியின் பாரம்பரியத்தை காத்திடவும் வேண்டும் என்றார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறி துறையின்சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சியை பார்வையிட்டு நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சம் வீதம் 4 நெசவாளர்களுக்கும் , தலா ரூ.50,000 வீதம் 6 நெசவாளர்களுக்கு என மொத்தம் 10 நெசவாளர்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான காசோலையையும், 15 கைத்தறி நெசவாளர்களுக்கு நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்ட ஆணையினையும், நெசவாளர் கூட்டுறவு சங்க 45 நிரந்தர பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் வழங்கினார்.

    முன்னதாக நெசவாளர்களின் நலன் காக்கும் பொருட்டு பொன்கோவில் நகரில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், திருப்பூர் சரக கைத்தறி துறை உதவி இயக்குநர் கார்த்திகேயன், கைத்தறி துறை சார்ந்த அலுவலர்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர்கள், நெசவாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில மாதங்களாக பல்வேறு காரணங்களால் பெரும்பாலான கைத்தறிகள் முடங்கி, பல ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.
    • தனியாரிடம் நெசவு செய்வோருக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர், கோவை மாவட்டத்தில் ஏராளமான கைத்தறிகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக பல்வேறு காரணங்களால் பெரும்பாலான கைத்தறிகள் முடங்கி, பல ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இதையடுத்து, தமிழ்நாடு நெசவு தறிக்காரர்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் தேவராஜன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் கடந்த 6 மாதங்களாக பெரும்பாலான கைத்தறிகள் பாவு, நூல் இல்லாமல் முடங்கி கிடக்கின்றன. பல ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இதற்கு தீர்வாக கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் புதிதாக உறுப்பினர் சேர்க்க வேண்டும். பாவு, நூல் உடனே வழங்க வேண்டும்.தனியாரிடம் நெசவு செய்வோருக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். நெசவாளர்களுக்கு என தனியாக கூட்டுறவு வங்கி துவக்க வேண்டும். 60 வயதான நெசவாளர்களுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய் பென்ஷனை 5000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய கைத்தறி நெசவாளர் தினமான வரும் 7-ந் தேதி அனைத்து கைத்தறி நெசவாளர்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

    • கைத்தறி நெசவாளர் குடும்ப பெண்கள் தற்போது கட்டிட வேலைக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    • இதுதான் விடியா தி.மு.க. அரசின் சாதனைகளாகும்.

    திருப்பூர்:

    மதுரை அ.தி.மு.க. மாநாடு தொடர்பாக திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்றவுடன் அவர் அறிவித்த முதல் அறிவிப்பு அ.தி.மு.க. உறுப்பினர்களை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதாகும். அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு உலக அளவில் வரலாற்று சிறப்புமிக்க கூட்டமாக இருக்க வேண்டும். மதுரை மாநாட்டிற்கு பிறகு எந்த அனுபவமும் இல்லாத, அணுகுமுறை தெரியாத தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கான இறுதி தேதியை அறிவிக்கின்ற மாநாடாக அமையும். தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்கள் மிகுந்த கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர்.

    பொள்ளாச்சி, ஆரணி உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைத்தறி நெசவாளர் குடும்ப பெண்கள் தற்போது கட்டிட வேலைக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விசைத்தறி, பனியன் தொழில்கள் நலிவடைந்துள்ளது. தி.மு.க. ஆட்சி வந்தாலே திருப்பூர் மக்களுக்கு திண்டாட்டம்தான். தண்ணீர் வரி, வீட்டு வரி, மின்கட்டணம் உயர்வு காரணமாக அடித்தட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர். இதுதான் விடியா தி.மு.க. அரசின் சாதனைகளாகும். இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த 50 ஆண்டுகளாக, பள்ளிபாளையத்தின் பொருளாதார வளர்ச்சியில் விசைத்தறி தொழில் பெரும் பங்காற்றி வருகிறது.
    • ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் விசைத்தறி தொழிற்சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகரில் நெசவுத்தொழில் பிரதானமாக உள்ளது. கைத்தறியில் இருந்து மெல்ல விசைத்தறிக்கு மாறிய பின்னர் தான், நெசவுத்தொழில் நல்ல வளர்ச்சியை பெற்றது. வீடுகளில் இயங்கிய விசைத்தறிகள், விசைத்தறி பட்டறைகளாக மாற்றம் பெற்றன.

    கடந்த 50 ஆண்டுகளாக, பள்ளிபாளையத்தின் பொருளாதார வளர்ச்சியில் விசைத்தறி தொழில் பெரும் பங்காற்றி வருகிறது. வேட்டி, சட்டை, சுடிதார், லுங்கி உள்பட பல வகையான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு செல்கிறது. இந்த தொழிலை, நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பி ஒரு லட்சம் பேர் உள்ளனர்.

    விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்தி, சதவீத அடிப்படையில் கூலி உயர்வு வழங்கப்படுகிறது.

    கடைசியாக போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிந்துவிட்டதால், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட வேண்டும். இதை தொடர்ந்து ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் விசைத்தறி தொழிற்சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டது.

    இதையெடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி, பள்ளிபாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தொழிற் சங்கத்தினர் இடையே முதல் கட்ட பேச்சு வார்த்தை நடந்தது. அதில், உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 3 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதாக தெரிவித்தனர். இதை தொழிற்சங்கத்தினர் ஏற்கவில்லை.

    இதை தொடர்ந்து 2-ம் கட்ட பேச்சு கடந்த 18-ந் தேதி நடந்தது. அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு முன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது.

    இந்த பேச்சு வார்த்தையில் பள்ளிபாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் நிர்வாகிகளும், தொழிற்சங்கத்தினரும் கலந்து கொண்டனர். இதில் உரிமையாளர்கள் சங்கத்தினர் 5 சதவீதம் அளிப்பதாக தெரிவித்தனர். தொழிற்சங்கத்தினர் 25 சதவீதம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து 4-வது கட்ட பேச்சுவார்த்தை வருகிற 3-ந் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • புதிதாக, 12 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு நூற்பாலைகள் அமைக்கப்படும்.
    • ஜவுளி தொழில் முனைவோர் அமைப்புகள் பங்கேற்கும், 2 நாள் பயிலரங்கம் நடத்தப்படும்.

    திருப்பூர் :

    கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் காந்தி 22 வகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். துணி நூல் துறைக்கு, ஐந்து அறிவிப்புகளும் கைத்தறித்துறைக்கு 17 அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. அனைத்து ஜவுளி பிரிவுகளையும் ஒருங்கிணைத்து மாபெரும் ஜவுளி நகரம், பொது - தனியார் பங்களிப்புடன் சென்னையில் அமைக்கப்படும். தலா 6கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கூட்டுறவு நூற்பாலையில், சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்கப்படும். புதிதாக, 12 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு நூற்பாலைகள் அமைக்கப்படும்.

    சர்வதேச தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்னையில் நடத்தப்படும். இந்தியாவில் உள்ள 12 தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி சிறப்பு மையங்களில் கண்டறியப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை பகிர வசதி செய்யப்படும். அதற்காக தமிழக தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான கலந்தாய்வு நடத்தப்படும்.

    கோவையில் 27 லட்சம் ரூபாய் செலவில், ஜவுளி தொழில் முனைவோர் அமைப்புகள் பங்கேற்கும், இரண்டு நாள் பயிலரங்கம் நடத்தப்படும். தமிழகத்தில், ஜவுளித்தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தொழில்நுட்பம் மற்றும் முதலீடு தொடர்பான வழிகாட்டுதல் வழங்கப்படும். அதற்காக, கைத்தறி துணிநூல் துறையின் கீழ், பிரத்யேக ஜவுளி தொழில் ஊக்குவிப்பு பிரிவு துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை திருப்பூர் தொழில் அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.

    இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:- புதிய தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் ஆராய்ச்சி மையங்களுடன் கலந்தாய்வு ஏற்பாடு செய்துள்ளது பயனுள்ளதாக இருக்கும். தொழில்முனைவோருக்கு வழிகாட்டும் தொழில் ஊக்குவிப்பு பிரிவு துவங்குவதையும் வரவேற்கிறோம். பாரம்பரிய கைத்தறி ரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் விற்பனை அதிகரிக்கும். பலவகை அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வரும் போது தமிழகத்தின் ஜவுளி மற்றும் கைத்தறி தொழில் மேம்படும் என்றார்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், பின்னலாடை தொழில் உட்பட, பல்வேறு பிரிவுகளுடன் ஒருங்கிணைந்த ஜவுளி தொழில் நகரம் அமையும் போது, புதிய வேலை வாய்ப்புகளும், தொழில்களும் உருவாகும். சர்வதேச தொழில்நுட்ப கருத்தரங்கு ஒவ்வொரு தொழில் பிரிவுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அரசு மானிய உதவியுடன் தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கு வழிகாட்ட ஜவுளித்துறை ஆணையரகத்தில் ஜவுளி மேம்பாட்டு பிரிவு துவங்குவதை வரவேற்கிறோம். கோவையில் 12 ஆராய்ச்சி மையங்கள் சார்பில் இரண்டு நாள் தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்துவது சிறப்பான ஏற்பாடாக இருக்கும் என்றார்.

    • கைத்தறி துணிகளை வாங்கி அனைவரும் நெசவாளர்களை ஊக்குவிக்க வேண்டும் விருதுநகர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • கைத்தறி உதவி இயக்குநர் ரகுநாத் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 8-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது இதை கலெக்டர் மேகநாதரெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

    இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது, உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், 1905-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ம் நாள் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. சுதேசி இயக்கத்தை நினைவு கூறும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களை சிறப்பிக்கும் வகையிலும் 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன் அ டிப்படையில், விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதில், 40எஸ், 60எஸ், 80எஸ் ரக பருத்தி சேலைகள், செயற்கை இழை பட்டுச் சேலைகள், கைத்தறி லுங்கிகள், வேட்டிகள், துண்டுகள், போர்வை ரகங்கள் ஆகியவை அரசு வழங்கும் 20 சதவீத தள்ளுபடி மானியத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி பயன்படுத்தி கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் 10 பயனா–ளிகளுக்கு நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும், நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 10 நெசவாளர்களுக்கு ஒப்பளிப்பு ஆணைக–ளையும், முத்ரா கடனுதவி திட்டத்தின்கீழ், 10 நெசவாளர்களுக்கு கடனுதவிகளையும் கலெக்டர் மேகநாத ரெட்டி வழங்கினார். கைத்தறி உதவி இயக்குநர் ரகுநாத் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

    • கைத்தறியில் சேலை மற்றும் வேட்டி நெய்வ–தற்கு லைசென்ஸ் பெற்று கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • விசைத்தறியில் சேலை மற்றும் வேட்டி நெய்வது தெரியவந்தது. இதனையடுத்து அவர் தாமோதரன் மீது வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, உதவி இயக்குனர் மற்றும் உதவி அமலாக்க அலுவலர் (கைத்தறி இதர ஒதுக்கீடு சட்டம்) ஜெயவேல்கனேசன் நேற்று திருச்செங்கோடு வட்டாரத்திற்கு உட்பட்ட கைத்தறியில் சேலை மற்றும் வேட்டி நெய்வ–தற்கு லைசென்ஸ் பெற்று கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புல்லாக்க–வுண்டம்பட்டி, மேட்டுப்பு தூரைச் சேர்ந்த ‌‌‌‌‌‌‌‌‌‌தாமோ தரன்(வயது47). என்பவரது கைத்தறி நெசவு தொழில் கூடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    ஆய்வில் தாமோதரன் கைத்தறியில் சேலை மற்றும் வேட்டி நெய்வதற்கு லைசென்ஸ் பெற்றுவிட்டு விசைத்தறியில் சேலை மற்றும் வேட்டி நெய்வது தெரியவந்தது. இதனையடுத்து அவர் தாமோதரன் மீது வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வேல கவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தாமோ தரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×