search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெசவாளர்"

    • நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
    • தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., கைத்தறி உதவி இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நெசவாளர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி புனல்வேலி கிராமத்தில் கைத்தறி துறை சார்பாக முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன் னிட்டு நெசவாளர்களுக் கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், கைத்தறி உதவி இயக்குனர் வெங்க டேஷ் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து. நெசவாளர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி னர்.

    பின்னர் தங்கப்பாண்டி யன் எம்.எல்.ஏ. பேசியதா வது:-

    விருதுநகர் மாவட்டத்தில் அதிக நெசவாளர்களை கொண்ட தொகுதி ராஜ பாளையம் தொகுதி தான். தமிழ்நாட்டில் அதிகளவில் காடா நெசவு செய்து கொடுக்கும் தொகுதியாக ராஜபாளையம் தொகுதி திகழ்கிறது. நெசவாளர் களுக்கு நமது முதல் அமைச் சர், மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் அமைச்சர் களான வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரனும், நிதித்துறை அமைச்சர் தங்கம்தென்னர சும், ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரான நானும் எப்போதும் உறு துணையாக இருப்போம் என உறுதி கூறினார்.

    இந்நிகழ்வில் பேரூர் சேர்மன் ஜெயமுருகன், தலைமை மருத்துவர் கரு ணாகரபிரபு பேரூர் செயலா ளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தலைவராக முத்துசாமி, துணை தலைவராக ஈஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட திமுக நெசவாளர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவராக முத்துசாமி, துணை தலைவராக ஈஸ்வரன், மாவட்ட அமைப்பாளராக எல்கில் ரவி, துணை அமைப்பாளர்களாக தியாகராஜன், பௌ்ளன், பிரபுதாஸ், மகேந்திரன், ராஜசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக்ைகை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா, குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, பில்லன் தொரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, ராஜா, அன்வர் அப்துல்லா, விவேகானந்தன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜ், பத்மநாபன், ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ரகுபதி, விஷ்னு, கஜேந்திரன், குன்னூர் நகரமன்ற உறுப்பினர்கள் ஜாகீர் உசேன், மணிகண்டன், மன்சூர், அப்துல் காதர், பந்தலூர் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர்கள் ஞானசேகர், சுபாசினி, மகளிர் அணி நிர்வாகிகள் மைமூனா, ஜெயந்தி உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

    • கைத்தறி நெசவாளர் குடும்ப பெண்கள் தற்போது கட்டிட வேலைக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    • இதுதான் விடியா தி.மு.க. அரசின் சாதனைகளாகும்.

    திருப்பூர்:

    மதுரை அ.தி.மு.க. மாநாடு தொடர்பாக திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்றவுடன் அவர் அறிவித்த முதல் அறிவிப்பு அ.தி.மு.க. உறுப்பினர்களை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதாகும். அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு உலக அளவில் வரலாற்று சிறப்புமிக்க கூட்டமாக இருக்க வேண்டும். மதுரை மாநாட்டிற்கு பிறகு எந்த அனுபவமும் இல்லாத, அணுகுமுறை தெரியாத தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கான இறுதி தேதியை அறிவிக்கின்ற மாநாடாக அமையும். தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்கள் மிகுந்த கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர்.

    பொள்ளாச்சி, ஆரணி உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைத்தறி நெசவாளர் குடும்ப பெண்கள் தற்போது கட்டிட வேலைக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விசைத்தறி, பனியன் தொழில்கள் நலிவடைந்துள்ளது. தி.மு.க. ஆட்சி வந்தாலே திருப்பூர் மக்களுக்கு திண்டாட்டம்தான். தண்ணீர் வரி, வீட்டு வரி, மின்கட்டணம் உயர்வு காரணமாக அடித்தட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர். இதுதான் விடியா தி.மு.க. அரசின் சாதனைகளாகும். இவ்வாறு அவர் பேசினார்.

    • அவிநாசி அருகே தத்தனூர் ஊராட்சி, சாவக்காட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவு தொழிலில் 3,000 குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கூட்டுறவு சங்கம் வாயிலாகவே வாங்கிக்கொடுத்து, தயாரிப்பு சேலைகளை கோ- ஆப்டெக்ஸ் வாயிலாகவே விற்பனை செய்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும்.

    அவினாசி:

    அவிநாசி அருகே தத்தனூர் ஊராட்சி, சாவக்காட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவு தொழிலில் 3,000 குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு சிறுமுகை, புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பட்டு சேலை வியாபாரிகள் ஆர்டர் வழங்குவர்.தங்கள் தேவையின் அளவு பொருத்து, பாவு நூல் வழங்கி சேலையை நெய்து வாங்கிக் கொள்வர். அதற்கான கூலியை, நெசவாளர்களுக்கு வழங்குவர். சமீப காலமாக ஆர்டர் இல்லாததால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது:- ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன், மனைவி, பிள்ளைகள் என ஒரு குடும்பமே நெசவு தொழிலில் ஈடுபட்டால் தான் ஒன்றரை நாளில் ஒரு சேலையை நெய்து முடிக்க முடியும். வாரத்துக்கு 3,4 சேலைகள் ஆர்டர் கிடைக்கும். ஒரு சேலைக்கு 1,000 முதல் 1,200 ரூபாய் வரை வருமானம் கிடைத்தது. தற்போது வாரத்துக்கு ஒரு சேலை மட்டுமே ஆர்டர் கிடைக்கிறது. வருமான பற்றாக்குறையால் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறோம். ஆர்டர் வழங்கும் வியாபாரிகள் தங்களுக்கு வியாபாரம் இல்லை என்ற காரணத்தை கூறுகின்றனர்.எனவே அரசின் சார்பில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை அங்காடிகளுக்கு தேவையான சேலையை, எங்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.

    தத்தனூர் ஊராட்சி தலைவர் விஜயகுமார் கூறியதாவது:-

    சாவக்கட்டுப்பாளையத்தில் நெசவாளர்களை உள்ளடக்கி 4 கூட்டுறவு சங்கங்கள் இருந்தன. நிர்வாக குளறுபடியால் அவை செயல்படாமல் போயின. தற்போது நெசவாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு 100 நெசவாளர்களை உள்ளடக்கி புதிதாக கூட்டுறவு சங்கம் அமைக்க திட்டமிட்டு அதற்கான அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். நிர்வாக அனுமதிக்காக காத்துள்ளோம். கூட்டுறவு சங்கம் அமைக்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சேலை நெய்வதற்குரிய பாவு, நூல் உள்ளிட்டவற்றை கூட்டுறவு சங்கம் வாயிலாகவே வாங்கிக்கொடுத்து, தயாரிப்பு சேலைகளை கோ- ஆப்டெக்ஸ் வாயிலாகவே விற்பனை செய்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும்.

    இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நெசவு பயிற்சி மையம் மற்றும் தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
    • இளைஞர்கள் இத்தொழிலுக்கு வர வாய்ப்பு உள்ளது.

    திருப்பூர் :

    சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொட ரில் கைத்தறி, துணிநூல் துறை மானிய கோரிக்கை யில் அமைச்சர் காந்தி, புதிய திட்டங்களை அறி வித்துள்ளார்.

    இதுகுறித்து கோவை, திருப்பூர், மாவட்டநெச வாளர் கூட்டுறவு சங்கங்க ளின் சம்மேளன தலைவர் ஜெகநாதன் கூறியதாவது:- இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மையம் மற்றும் தொழில் முனைவோர் திட்டம், 140 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என அரசு கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த மையத்தை, அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும். இதனால், இளைஞர்கள் இத்தொழிலுக்கு வர வாய்ப்பு உள்ளது. அது போல் கூட்டுறவு சங்கங்க ளில் உள்ள கைத்தறிநெச வாளர்களுக்கு 10 சத வீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்பதும் வர வேற்க வேண்டிய அம்சம்.பட்டின் விலை அதிகமாக உள்ளது. கூட்டு றவு சங்கம் சார்பில், பட்டுச்சேலை நெய்வதற்கு பட்டு, சரிகை,நூல் ஆகியவை போதிய அளவு வழங்கப்படுவதில்லை.மிக குறைந்த அளவே வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, வாரத்திற்கு இரண்டு சேலைதான் நெய்ய முடியும். இது வாழ்வாதா ரத்துக்கு போது மானதல்ல.

    வாரத்திற்கு 4 முதல் 5 சேலைகள் நெய்யும் அளவிற்கு மூலப்பொரு ட்கள் வழங்க வேண்டும். கைத்தறி ரகங்க ளை சந்தை படுத்த வாங்குவோர், விற்போர் சந்திப்பு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அது பெயரளவிற்கு இல்லாமல் முறையாக நடத்தினால் நன்றாக இருக்கும்.நெச வாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை மத்திய அரசு சார்பில், வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், மருத்துவமனை சென்றாலும் சிகிச்சை பெறமுடியவில்லை.

    எனவே மாநில அரசு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கி அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். என பல முறை கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 

    • நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி சங்கத்தின் சார்பில் மகாசபை கூட்டம் நடந்தது.
    • இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சிவகாமிபுரம் தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் மகாசபைக் கூட்டம் சாலியர் உறவின் முறை பொதுக்கட்டிடத்தில் நடந்தது.

    இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட கைத்தறி மேலாண்மை இயக்குநர் ரகுநாத் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் நெசவாளர்களுக்கு வருடம் முழுவதும் ஜனதா சேலை வேலை வழங்க வேண்டு மென பிரதான கோரிக்கையாக முன் வைக்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. இந்த கோரிக்கை குறித்து வருகிற சட்ட மன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பியும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தியிடம் வலியுறுத்தியும் உள்ளதாக கூறினார்.

    மேலும் நெசவாளர்களின் நலன் காக்க தமிழக முதல்-அமைச்சர் தொடர்ந்து செயலாற்றி வருகிறார். அவரது வழியில் நமது மாவட்டத்திலுள்ள வருவாய்த்துறை அமைச்ச ரும், தொழில்த்துறை அமைச்சரும், நானும் நெசவாளர்களுக்கு உறு துணையாக இருப்போம் என கூறினார்.

    அதனைத்தொடர்ந்து சங்கத்திலுள்ள நெசவாளர் அனைவருக்கும் போனஸ் தொகையையும் நெசவு அச்சு பிரைம் செட்-ஐ வழங்குவதை தொடங்கி வைத்தார்.

    கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் குருநமச்சிவயம், நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் ராஜேந்திர குமார், குருசாமி, குணா ராமலட்சுமி, நாகேஷ்வரன் மற்றும் திருவள்ளுவர், நடராஜன் நெசவாளர்கள் கழக நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

    • மதுைரயில் உள்ள நெசவாளர் மையத்தில் குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.
    • இந்த தகவலை மதுரை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2021-22-ம் ஆண்டின் கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானியக் கோரிக்கையின் போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரால் கைத்தறி ஆணையரகத்தில் "நெசவாளர் குறை தீர்க்கும் மையம்" அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவும், நெசவாளர்களின் குறைகளான வேலைவாய்ப்பு, கூலி உயர்வு, கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும், தங்களின் குறைகளை தெரிவிக்க ஏதுவாகவும் கைத்தறி துறை ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தில் நெசவாளர்கள் குறைகளை கீழ்காணும் வழிமுறைகளில் தெரிவித்து தீர்வு பெறலாம்.

    1.துணை இயக்குநர் (அமலாக்கம்) முகமை அதிகாரி/குறை தீர்க்கும் அலுவலர், நெசவாளர் குறை தீர்க்கும் மையம், கைத்தறி ஆணையரகம், குறளகம், சென்னை-104 என முகவரியிட்டு கடிதம் மூலமாக நெசவாளர்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    2.நெசவாளர் குறைதீர்க்கும் மையத்தின் இணையதள முகவரி: https:/gdp.tn.gov.in/dhl.

    3. நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தின் மின்னஞ்சல் முகவரி: wgrcchennai@gmail.com.

    4. நெசவாளர் குறை தீர்க்கும் அலுவலரை அரசு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரடியாக சந்தித்தும், 044-25340518 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டும் குறைகளை தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட வழிகள் மூலம் நெசவாளர்கள் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×