search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெசவாளர் குறைதீர்க்கும் மையம்
    X

    நெசவாளர் குறைதீர்க்கும் மையம்

    • மதுைரயில் உள்ள நெசவாளர் மையத்தில் குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.
    • இந்த தகவலை மதுரை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2021-22-ம் ஆண்டின் கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானியக் கோரிக்கையின் போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரால் கைத்தறி ஆணையரகத்தில் "நெசவாளர் குறை தீர்க்கும் மையம்" அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவும், நெசவாளர்களின் குறைகளான வேலைவாய்ப்பு, கூலி உயர்வு, கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும், தங்களின் குறைகளை தெரிவிக்க ஏதுவாகவும் கைத்தறி துறை ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தில் நெசவாளர்கள் குறைகளை கீழ்காணும் வழிமுறைகளில் தெரிவித்து தீர்வு பெறலாம்.

    1.துணை இயக்குநர் (அமலாக்கம்) முகமை அதிகாரி/குறை தீர்க்கும் அலுவலர், நெசவாளர் குறை தீர்க்கும் மையம், கைத்தறி ஆணையரகம், குறளகம், சென்னை-104 என முகவரியிட்டு கடிதம் மூலமாக நெசவாளர்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    2.நெசவாளர் குறைதீர்க்கும் மையத்தின் இணையதள முகவரி: https:/gdp.tn.gov.in/dhl.

    3. நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தின் மின்னஞ்சல் முகவரி: wgrcchennai@gmail.com.

    4. நெசவாளர் குறை தீர்க்கும் அலுவலரை அரசு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரடியாக சந்தித்தும், 044-25340518 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டும் குறைகளை தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட வழிகள் மூலம் நெசவாளர்கள் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×