search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. நெசவாளர் அணி புதிய நிர்வாகிகள் நீலகிரி மாவட்ட செயலாளருடன் சந்திப்பு
    X

    தி.மு.க. நெசவாளர் அணி புதிய நிர்வாகிகள் நீலகிரி மாவட்ட செயலாளருடன் சந்திப்பு

    • தலைவராக முத்துசாமி, துணை தலைவராக ஈஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட திமுக நெசவாளர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவராக முத்துசாமி, துணை தலைவராக ஈஸ்வரன், மாவட்ட அமைப்பாளராக எல்கில் ரவி, துணை அமைப்பாளர்களாக தியாகராஜன், பௌ்ளன், பிரபுதாஸ், மகேந்திரன், ராஜசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக்ைகை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா, குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, பில்லன் தொரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, ராஜா, அன்வர் அப்துல்லா, விவேகானந்தன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜ், பத்மநாபன், ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ரகுபதி, விஷ்னு, கஜேந்திரன், குன்னூர் நகரமன்ற உறுப்பினர்கள் ஜாகீர் உசேன், மணிகண்டன், மன்சூர், அப்துல் காதர், பந்தலூர் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர்கள் ஞானசேகர், சுபாசினி, மகளிர் அணி நிர்வாகிகள் மைமூனா, ஜெயந்தி உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×