search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராசிபுரத்தில் கைத்தறி கண்காட்சி
    X

    ராசிபுரத்தில் கைத்தறி கண்காட்சியை கலெக்டர் உமா தொடங்கி வைத்து பார்வையிட்டபோது எடுத்த படம்.

    ராசிபுரத்தில் கைத்தறி கண்காட்சி

    • 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நாமக்கல் கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.
    • கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மருத்துவ காப்பீடு அட்டையினை 20 பணியாளர்களுக்கும், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 12 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் முத்ரா கடன் உதவிகளையும் வழங்கினார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நாமக்கல் கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மருத்துவ காப்பீடு அட்டையினை 20 பணியாளர்களுக்கும், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 12 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் முத்ரா கடன் உதவிகளையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் டாக்டர் உமா பேசியதாவது:-

    கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்டு 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக நாடு முழுவதும் கொண்டா டப்பட்டு வருகிறது.

    கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியா ளர்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டையும் நெச வாளர் முத்ரா திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்க ளுக்கு முத்ரா கடன் உதவி களும் வழங்கப்படுகிறது. இதுபோன்று நெசவா ளர்களின் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வரு கிறது. நெசவாளர்கள் இத்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து சிறப்பாக நெசவுத் தொழில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவா ளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி துண்டுகள், வேட்டி கள், காட்டன் சேலைகள், காட்டன் கோர்வை சேலைகள், ஜமுக்காளம் இடம்பெற்றுள்ளன.

    நிகழ்ச்சியில் கைத்தறி உதவி இயக்குனர் பழனி குமார், தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் ஜெயலட்சுமி, கைத்தறித்துறை அலுவ லர்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து ராசிபுரம் நகராட்சி வேலா பூங்கா அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தவறிய தடுப்பூசி தவணைகளை செலுத்தும் சிறப்பு முகாமினையும் கலெக்டர் உமா பார்வையிட்டார்.

    Next Story
    ×