search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் கைத்தறி, கைவினை பொருட்களின் கண்காட்சி தொடக்கம்
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல்லில் கைத்தறி, கைவினை பொருட்களின் கண்காட்சி தொடக்கம்

    • மாவட்ட அளவிலான கைத்தறி மற்றும் கைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திறந்து வைத்தார்.
    • அனைத்து கைத்தறி ரகங்களுக்கும் தள்ளுபடி மாநில அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ் நிலையம் அருகில் தனியார் ஹாலில் அமைக்கப்பட்டு ள்ள மாவட்ட அளவிலான கைத்தறி மற்றும் கைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் கமல க்கண்ணன் திறந்து வைத்தார்.

    சென்னை நெசவாளர் சேவை மையம் சார்பில் திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான கைத்தறி மற்றும் கைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை திண்டுக்கல்லில் வருகிற 23ந் தேதி வரை 6 நாட்கள் நடைபெறவுள்ளது.

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இயங்கும் 20-க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 5 கைவினை கலைஞர்கள் தங்கள் உற்பத்தி ரகங்கள் மற்றும் பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படு த்தியுள்ளனர்.

    மேலும் பரமக்குடி காட்டன் சேலைகள், அருப்பு க்கோட்டை காட்டன் சேலைகள், காட்டன் லுங்கிகள், துண்டுகள், சட்டைகள், காஞ்சிபுரம் பட்டு சேலைகள், செயற்கை ப்பட்டு சேலைகள், திண்டுக்கல் காட்டன் சேலைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் இதர கைத்தறி , ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு ள்ளன. அனைத்து கைத்தறி ரகங்களுக்கும் தள்ளுபடி மாநில அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×