search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடலூர்"

    • பெரும்பாலான பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாமலும், காலாவதியான நிலையிலும் இயக்கப்பட்டு வருகிறது.
    • நாடுகாணி பொன்னூர் வந்தபோது மீண்டும் பஸ் பழுதடைந்து நின்றது

    ஊட்டி:

    கூடலூர் அரசு போக்குவரத்துக்கழக கிளை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 50 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாமலும், காலாவதியான நிலையிலும் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு கூடலூரில் இருந்து பந்தலூர் தாலுகா தாளூருக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.

    இதற்கிடையே கூடலூர் செம்பாலா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென அரசு பஸ் பழுதடைந்து நடுவழியில் நின்றது. மின் சாதனத்தில் (சென்சார்) பிரச்சினை ஏற்பட்டதால் பஸ் நடுவழியில் நின்றதாக தெரிகிறது. பள்ளி மாணவர்கள் அவதி பின்னர் டிரைவரின் பல்வேறு முயற்சியால் அரை மணி நேரத்துக்கு பிறகு பஸ் மீண்டும் புறப்பட்டது.

    தொடர்ந்து நாடுகாணி பொன்னூர் வந்தபோது மீண்டும் பஸ் பழுதடைந்து நின்றது. இதனால் மாணவர்கள், நடுவழியில் அவதிப்பட்டனர். பின்னர் பஸ் பழுது பார்க்கப்பட்டு புறப்பட்டது. ஆனால் பொன்வயல் பகுதியில் 3-வது முறையாக பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். பல்வேறு முயற்சி செய்த பின்னரும் பஸ்சை இயக்க முடியவில்லை.

    இதனால் காலையில் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் தவித்தனர். தொடர்ந்து காலதாமதம் ஆவதை உணர்ந்த பயணிகள் வேறு வாகனங்களில் தங்களது ஊர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு தாமதமாக சென்றனர். பள்ளிகளுக்கு மாணவர்கள் காலதாமதமாக சென்றார்கள். பராமரிக்க வேண்டும்

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சம்பந்தப்பட்ட பஸ்சில் சென்சார் பிரச்சினை உள்ளது. இதை பழுது பார்க்க கோவை அல்லது ஊட்டியில் போக்குவரத்து கழக பொறியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் கூடலூர் பகுதியில் இயக்கப்படும் பஸ்களை பராமரிப்பது இல்லை. எனவே, பஸ்களை முறையாக பராமரித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



    • கூடலூா் நகா்மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • காளம்புழா மின்மயான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

    ஊட்டி:

    கூடலூா் நகா்ம ன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்து க்கு நகராட்சித் தலைவா் பரிமளா தலைமை தாங்கினாா். துணைத் தலைவா் சிவராஜ், கமிஷனர் காந்திராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில் நகா் மன்ற உறுப்பினா்கள் பேசியதாவது:- காளம்புழா மின்மயான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும். அந்த பகுதியில் குடிநீா், மின்வசதி செய்து தரவேண்டும். மாக்கமூலா பகுதியிலுள்ள பொதுகிணறுக்கு செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. இதனை விரைந்து சீரமைத்துத் தர வேண்டும். முதல்மைல், புறமணவயல், நேதாஜி நகா் ஆகிய பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்து தரவேண்டும்.

    நடுகூடலூா் பகுதியில் குடிநீா் விநியோகம் சீராக இல்லை. பல இடங்களுக்கு குடிநீா் வந்து சோ்வதில்லை. மங்குழியில் மழையில் பாலம் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் தற்காலிக பாலம் அமைத்து தர வேண்டும்.

    மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஏழுமுறம் பாலத்தை விரைவில் அமைத்துத் தரவேண்டும். யானைகள் நடமாடும் பகுதியான தொரப்பள்ளி பகுதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை. தொரப்ப ள்ளியிலிருந்து இருவயல் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதை சீரமைத்துத் தரவேண்டும். எஸ்.எஸ்.நகா் பகுதியில் தெருவிளக்கு, குடிநீா் வசதி, நடைபாதை அமைத்து தரவேண்டும்.

    நகராட்சியின் சுகாதாரத் துறையில் செலவு கணக்குகளை முறையாக காண்பிப்பதில்லை. கூடலூா் பஸ் நிலையம் அருகில் கழிவறைகள் கட்ட வேண்டும். நகரில் குறுகிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தவிா்க்க முறையான பாா்க்கிங் வசதி செய்து தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து உறுப்பினா்கள் பேசினா்.

    விவாதத்தில், வெண்ணிலா(திமுக), இளங்கோ (திமுக), வா்கீஸ் (காங்), ஷகிலா (மு.லீக்), லீலா வாசு (சி.பி.எம்.), ராஜு(காங்), சத்தியசீலன் (திமுக), உஷா (திமுக), கௌசல்யா (திமுக), உஸ்மான் (காங்), அனூப்கான்(அதிமுக) ஆகியோா் பேசினா்.

    • மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
    • வீட்டுக்குள் மழைநீர் ஒழுகுவதால், மேற்பகுதியில் தார்பாய் போடப்பட்டு உள்ளது.

    பந்தலூர்,

    பந்தலூர் தாலுகாவில் உப்பட்டி, பொன்னானி, பிதிர்காடு, பாட்டவயல், தேவாலா, கரியசோலை, நெலாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    தொடர் மழையால் பொன்னானி, சோலாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பந்தலூரில் பலத்த மழை பெய்தது.

    சேரங்கோடு அருகே காப்பிகாடு பாரதியார் நகரில் பார்வதி என்பவரது வீடு இடிந்து சேதமடைந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    மேலும் வீட்டுக்குள் மழைநீர் ஒழுகுவதால், மேற்பகுதியில் தார்பாய் போடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பந்தலூர் தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    • ஏலமன்னா-பந்தலூர் இடையே உள்ள சாலை ஏற்கனவே குண்டும், குழியுமாக காணப்பட்டது.
    • பழங்குடியின மக்கள், பொதுமக்கள் ரேஷன் கடைகளில் வாங்கும் அத்தியாவசிய பொருட்களை தலையில் சுமந்தவாறு நடந்து செல்கிறார்கள்.

    ஊட்டி:

    பந்தலூர் அருகே ஏலமன்னாவில் இருந்து ேமங்கோரேஞ்ச் வழியாக பந்தலூருக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமான தனியார் வாகனங்கள், பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், ஆட்டோக்கள் சென்று வருகின்றன.

    ஏலமன்னா-பந்தலூர் இடையே உள்ள சாலை ஏற்கனவே குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை சீரமைக்கப்பட்டது. பின்னர் நாளடைவில் சாலை மீண்டும் பழுதடைய தொடங்கியது. மேலும் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் சென்றால், சாலை குண்டும், குழியுமாக மாறியது. இதனால் கற்கள் பெயர்ந்து கரடு முரடாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அவசர சிகிக்சைக்கு நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. பழுதடைந்த சாலையில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் காட்டு யானைகள் நடமாட்டம் சாலையில் உள்ளது. எனவே, சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, சாலை பழுதடைந்து உள்ளதால், ஏலமன்னா அரசு உண்டு உறைவிட பள்ளிக்கு அரிசி, காய்கறிகளை ஏற்றி செல்லும் சரக்கு வாகனம் செல்ல முடியவில்லை. இதனால் சுமந்தபடி கொண்டு செல்கின்றனர்.

    பழங்குடியின மக்கள், பொதுமக்கள் ரேஷன் கடைகளில் வாங்கும் அத்தியாவசிய பொருட்களை தலையில் சுமந்தவாறு நடந்து செல்கிறார்கள். அந்த சமயத்தில் காட்டு யானைகள் விரட்டும் போது, சிலர் தவறி விழுந்து காயமடைகின்றனர். தற்போது பெய்து வரும் மழையால் சாலை அடித்து செல்லப்பட்டு, கால்வாய் போல் காணப்படுகிறது. எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • 150 பயனாளிகளுக்கு உணவுப் பொருள்களுடன் கூடிய மஞ்சப்பைகளை வழங்கப்பட்டது.
    • விசாயிகளுக்கு புதிய அடையாள அட்டைகள், தொழில் முனைவோருக்கு வங்கி கடன் உத்தரவு ஆகியவற்றையும் அமைச்சா் வழங்கினாா்.

    ஊட்டி:

    கூடலூா் பஸ் நிலையம் அருகே வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் புதுப்பொலிவுடன் கூடிய உழவா் சந்தையை வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் திறந்துவைத்து, முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.

    பின்னர் அவர் பேசுகையில், உழவா் சந்தை மூலம் இடைத்தரகா் இல்லாமல் விவசாயிகள் தங்களது பண்ணை காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்யவும், அதற்கு சரியான விலையையும் பெறலாம். மேலும், நுகா்வோா் தரமான பொருள்களை வெளிசந்தையை விட குறைந்த விலையில் வாங்க முடியும் என்றாா். இதைத் தொடா்ந்து விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டைகள், தொழில் முனைவோருக்கு வங்கி கடன் உத்தரவு ஆகியவற்றையும் அமைச்சா் வழங்கினாா்.

    மேலும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலநாடு உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு உறுப்பினா்களின் பங்குத் தொகைக்கு, இணை பங்குத் தொகையாக ரூ.5 லட்சம் அரசு மானியத்தையும், முதுமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு ரூ.2.01 லட்சம் மானியமும் வழங்கினாா்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றாக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக 150 பயனாளிகளுக்கு உணவுப் பொருள்களுடன் கூடிய மஞ்சப்பைகளை வழங்கினாா்.

    தேவாலா பகுதியில் காட்டு யானைகள் தாக்கி வீடுகள் சேதமடைந்த பாதிக்கப்பட்ட நபா்களுக்ககு நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினாா். இதில் கலெக்டர் அம்ரித், மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், கூடலூா் கோட்டாட்சியா் சரவணக்கண்ணன், தோட்டக்கலை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, தோட்டக்கலை உதவி இயக்குநா் விஜியலட்சுமி, நகா்மன்றத் தலைவா் பரிமளா, நகர செயலாளர் இளஞ்செழியன்பாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • ராட்சத குழாய்களை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • குடிநீர் வினியோகத்தில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

    ஊட்டி:

    கூடலூர் நகராட்சி பகுதியில் சுமார் 1 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஓவேலி பேரூராட்சியில் ஹெலன், ஆத்தூர், பல்மாடி உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டி குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இப்பகுதியில் உள்ள அணைகளில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் கூடலூருக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் கடந்த 2 வாரங்களாக தொடர் கன மழை பெய்தது. இதன் காரணமாக பாண்டியாறு, மாயாறு உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் குடிநீர் திட்ட தடுப்பணைகளிலும் சேறும், சகதியுமான தண்ணீர் அடித்து வரப்பட்டது. குழாய்களில் உடைப்பு இதன் காரணமாக ராட்சத குழாய்களில் பல இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டது.

    தொடர்ந்து ராட்சத குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு வந்தது.

    இதையடுத்து கூடலூர் பகுதியில் மழையின் தாக்கம் பரவலாக குறைந்து விட்டது. இதன் காரணமாக உடைப்பு ஏற்பட்ட ராட்சத குழாய்களை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கெவிப்பாரா பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி தலைமையில் குடிநீர் ஆய்வாளர் ரமேஷ், கவுன்சிலர் வெண்ணிலா உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் நிலத்தை தோண்டினர்.

    சீரமைப்பு பணி தொடர்ந்து ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணி மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டது. இதேபோல் நகராட்சி பகுதியில் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் ஊழியர்கள் சீரமைப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். எனவே குடிநீர் வினியோகத்தில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • 2500-க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் உள்ளது.

     ஊட்டி:-

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தும், பல்வேறு சாலைகளும் துண்டிக்கப்பட்டும் உள்ளது.

    இதனை நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். பந்தலூர் பேரிஸ் ஹால் மற்றும் கூடலூர் நர்த்தகி திருமண மண்டபத்திலும் வைத்து 2500 மேற்பட்டவர்களுக்கு அரிசி, கம்பளி, சேலை, சுமார் வேட்டி, துண்டு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    சமீப காலங்களில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி 8 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் வீதம் ரூ.8 லட்சம் வழங்கியதுடன் யானை தாக்கியும், மழையால் வீடுகள் சேதமடைந்த சுமார் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கினார்.

    நடுவட்டம், கோழிபாலம் மங்குழி, தொரப்பள்ளி, தெப்பகாடு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக்,மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, திராவிடமணி, இளங்கோ, ராஜூ, பாண்டியராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், கூடலூர் பகுதி ஒன்றிய , நகர செயலாளர்கள் லியாகத் அலி, இளஞ்செழியன், சேகரன், சிவானந்த ராஜா, சுஜேஷ், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், பேரூர் செயலாளர்கள் சின்னவர், உதயகுமார், சுப்ரமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, சீனி, ராஜா, நகராட்சி தலைவர்கள் பரிமளா, சிவகாமி, பேரூராட்சி தலைவர்கள் சித்ரா தேவி, வள்ளி, கலியமூர்த்தி, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் மகேஸ்வரன், ஆலன், எல்கில் ரவி, நவ்புல், பிரதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • திறந்தவெளியை பயன்படுத்தும் அவல நிலை காணப்படுகிறது.
    • 10 வீடுகளில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது.

    கூடலூர்,

    நாடு முழுவதும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் பொருட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் வீடுகள் தோறும் கழிப்பறைகள் கட்ட தலா ரூ.15 ஆயிரம் நிதி ஒதுக்கியது. இதன் காரணமாக பெரும்பாலான கிராமங்களில் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இத்திட்டம் மக்களை முழுமையாக சென்றடையாத கிராமங்களும் உள்ளது. கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஓவேலி பேரூராட்சி சட்டப்பிரிவு-17 வகை நிலத்தின் கீழ் வருவதால் மக்களுக்கு தேவையான அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான கிராமங்களில் கழிப்பறை வசதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை. ஆத்தூர் கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். கிராமத்தில் வசிக்கும் மக்கள் வெளியிடங்கள், கிராமங்களுக்கு உடனடியாக செல்ல போக்குவரத்து வசதி இல்லை. இதேபோல் தொலைபேசி அலைவரிசை சேவையும் எட்டாக்கனியாகவே உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் வாரத்துக்கு ஒருமுறை பல கிலோமீட்டர் தூரம் கால்நடையாக நடந்து காந்திநகர் என்ற இடத்திற்கு வருகின்றனர். பின்னர் அங்கிருந்து வாகனத்தில் கூடலூருக்கு வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். அடர்ந்த வனம் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் ஆத்தூர் கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 10 வீடுகளில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது. ஆனால் மீதமுள்ள வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்படவில்லை. இதுதவிர மகளிர் மட்டும் பயன்படுத்தும் வகையில் பேரூராட்சி மூலம் பொதுகழிப்பறை கட்டப்பட்டு உள்ளது. திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர் இதனால் பெண்கள் பொதுகழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஆண்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. அப்பகுதியில் ஓடும் ஆற்றின் கரையோரம் திறந்தவெளியை இயற்கை உபாதை கழிக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீடுகளுக்கும் கழிப்பறை கட்டி தர வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பகுதியில் ஓடும் ஆற்றின் நீரையே கூடலூர் பகுதி மக்களுக்கு குடிநீராகவும் வழங்கப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஆத்தூர் பகுதி கிராம மக்களுக்கு கழிப்பறை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாட்டில் குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • 600 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஊட்டி:

    கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தினமும் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் சரக்கு லாரிகள் ஏராளமாக இயக்கப்படுகிறது. இவற்றில் தடை செய்யப்பட்ட பொருட்களும் கடத்தப்படுவதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தது. தமிழ்நாட்டில் குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் கூடலூர் தொரப்பள்ளி சோதனைசாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது காய்கறி மூட்டைகள் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று கூடலூர் நகரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது காய்கறி மூட்டைகளுக்கு இடையே வேறு சில மூட்டைகளும் இருப்பது தெரியவந்தது. கைது இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளை திறந்து பார்த்தனர்.

    அதில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 600 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சத்து 30 ஆயிரம் என்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே வெள்ளேரியை சேர்ந்த சாஜர் (வயது 38) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அதில் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்க முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சாஜரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

    • கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கூடலூர் அருகே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • பரிசல் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கூடலூர் அருகே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதன்காரணமாக தெங்குமரஹடா, கல்லாம்பாளையம் பகுதிகளுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பரிசல் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் அத்தியாவசிய தேவைகளுக்காக 2 கிராம மக்களும் பரிசலில் சென்று வருகின்றனர். இன்று காலை கல்லாம்பாளையம் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து இருந்தது.

    இந்த நிலையில் கல்லாம்பாளையத்தை சேர்ந்த 3 பேர் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக கோத்தகிரி செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் பரிசலில் ஏறி மாயாற்றில் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கில் பரிசல் சிக்கி கொண்டது. சிக்கிய வேகத்தில் சிறிது தூரம் பரிசல் அடித்து செல்லப்பட்டது.

    இருப்பினும் பரிசல் ஓட்டுனர் சாதுர்யமாக செயல்பட்டு பரிசலில் இயக்கி கரைக்கு கொண்டு வந்தார். இதனால் அதிர்ஷ்டவசமாக பரிசல் ஓட்டுனர் உள்பட 4 பேரும் உயிர் தப்பினர்.

    • தொடர்ந்து கோழிப்பாலம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை நேரில் சந்தித்து குறைகள் கேட்டார். பின்னர் மக்களுக்கு உணவு வழங்கினார்.
    • காலம்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த ஆற்றங்கரையையும் ஆய்வு செய்தாா்.

    நீலகிரி மாவட்டம் கூடலூா், மங்குழி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அங்குள்ள பாலம் அடித்துச் செல்லப்பட்டது. அந்த பகுதியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் அந்த பகுதி மக்களுக்கு மாற்றுப்பாதை அமைப்பது குறித்து கலெக்டரிடம் கேட்டறிந்து, மாற்றுப்பாதையை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து, காலம்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த ஆற்றங்கரையையும் ஆய்வு செய்தாா். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் மழையால் அதிக பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அந்தக் குழுவினா் பாதிப்பு தகவல் கிடைத்தவுடன் எந்த நேரத்திலும் மீட்பு பணியை மேற்கொள்ள தயாா் நிலையில் உள்ளனா். கூடலூா் பகுதியில் கன மழை தொடர்வதால் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரசுக்கு எடுத்துரைத்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோழிப்பாலம் ஊராட்சி ஒன்றிய பள்ளி முகாமில் மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கோழிப்பாலம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை நேரில் சந்தித்து குறைகள் கேட்டார். பின்னர் மக்களுக்கு உணவு வழங்கினார்.

    ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியா் சரவணகண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, வட்டாட்சியா் சித்தராஜ், கூடலூா் நகராட்சி ஆணையா் (பொ) காந்திராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதா், நகா்மன்றத் தலைவா் பரிமளா, தி.மு.க. நகர செயலாளா் இளஞ்செழியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்

    • யானைகள் வனத்திற்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி திரிந்தது.
    • யானை வீட்டை இடிப்பதை அறிந்து வீட்டில் இருந்தவர்கள், தப்பி அருகில் உள்ள வீட்டுக்கு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, புளிய ம்பா–றை அடுத்துள்ளது கத்தரித்தோடு கிராமம். இந்த கிராமத்தையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

    இதனால் அடிக்கடி வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி அங்குள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காட்டு யானைகள் கூட்டம் வனத்தை விட்டு வெளியேறி கிராம பகுதிகளுக்குள் புகுந்தது. நீண்ட நேரமாக அங்கேயே சுற்றி திரிந்த காட்டு யானை கூட்டம் அந்த பகுதியில் உள்ள தவமணி என்பவரது வீட்டை தாக்கி சேதப்படுத்தியது.

    சத்தம் கேட்டு தவமணி எழுந்து பார்த்தபோது யானை நின்றிருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானைகள் வனத்திற்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி திரிந்தது.

    பின்னர் அங்கிருந்து காட்டு யானைகள் வெளி யேறியது. இதையடுத்தே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதேபோல் அருகே உள்ள அட்டிக்கொல்லி கிராமத்தில் புகுந்த காட்டு யானை தா்மலிங்கம் என்பவரின் வீட்டையும் இடித்து சேதப்படுத்தியது.

    யானை வீட்டை இடிப்பதை அறிந்து வீட்டில் இருந்தவர்கள், தப்பி அருகில் உள்ள வீட்டுக்கு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×