search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cudalore"

    • கூடலூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • சாலையில் விழுந்த மூங்கில் தூா்களை அகற்றினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் கனமழை கொட்டியது. இதில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    கூடலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாட்டுக்குச் செல்லும் மலைப் பாதையில் நெலாக்கோட்டை கூவச்சோலை பகுதியில் கனமழையால் சாலையின் குறுக்கே மூங்கில் தூா் பெயா்ந்து விழுந்தது. இதனால் அவ்வழியிலான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

    தகவலறிந்த கூடலூா் தீயணைப்புத் துறையினா் மீட்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று நெடுஞ்சாலைத் துறையின் பொக்லைன் உதவியுடன் சாலையில் விழுந்துகிடந்த மூங்கில் தூா்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா்.

    இதனால், அந்த சாலையில் சுமாா் இரண்டரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. நீலகிரி மாவ ட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக அவலாஞ்சியில் 144 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. கூடலூர் - 76, சேரங்கோடு 63, நடுவட்டம் 60, பந்தலூர் 59, ஓவேலி 48, செருமுள்ளி 48, அப்பர் பவானி 48, பாடந்தொரை 42, தேவாலா 42, கிளன்மார்கன் 31, ஊட்டி - 8.4, பாலகொலா 6, கோடநாடு 4, மசினகுடி 4, கேத்தி 4, கல்லட்டி 2.4, குன்னூர் 2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    • கோவிலில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது
    • கொட்டும் பனியை பொருட்படுத்தாது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாண்டியாறு ஆமைக்குளத்தில் ரதி-மன்மதன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அப்பகுதி மக்கள் விரதம் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர்.

    நேற்று முன்தினம் நள்ளிரவில் காமன் பண்டிகையையொட்டி ரதி - மன்மதன் திருமணம் நடைபெற்றது. பல்வேறு வேடங்கள் அணிந்த பக்தர்கள் தொடர்ந்து தேர் ஊர்வலம், மொய் விருந்து உபச்சாரம், மன்மதனுக்கு குறி சொல்லுதல் நிகழ்ச்சி, சிவபெருமான் தியானத்தில் அமர்தல், தட்சன் யாகம், முனீஸ்வரர். அகோர வீர புத்திரன் வருகை, மன்மதன், தட்சனை எரித்தல் உள்பட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்றது. இதை உணர்த்தும் வகையில் பக்தர்கள் ரதி - மன்மதன் மற்றும் சிவபெருமான் உள்பட பல்வேறு வேடங்களில் விடிய விடிய நடித்து காண்பித்தனர். தொடர்ந்து பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் கொட்டும் பனியை பொருட்படுத்தாது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கைப்ைபயை போலீசார் மீட்டு பெண்ணிடம் ஒப்படைத்தனர்.
    • சிறிது தூரம் சென்ற பிறகே பையை தவறவிட்டது அவருக்கு தெரியவந்தது

    ஊட்டி

    கூடலூா் வட்டம் நியூ ஹோப் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆட்டோவில் பயணித்துள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோவை விட்டு இறங்கும் போது தனது கைப்பையை ஆட்டோவிலேயே விட்டு சென்றதாக தெரிகிறது. சிறிது தூரம் சென்ற பிறகே பையை தவறவிட்டது அவருக்கு தெரியவந்தது.உடனடியாக அவர் சம்பவம் குறித்து கூடலூா் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் கூடலூா் டி.எஸ்.பி.மகேஷ்குமாா் தலைமையில் சாா்பு ஆய்வாளா் இப்ராஹிம், முத்து முருகன், அசோக் குமாா் அடங்கிய தனிப்படையினர் அந்த பகுதிக்கு சென்று கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து தடயத்தை சேகரித்தனா். தொடா்ந்து பெரிய சூண்டி பகுதியில் சம்மந்தப்பட்ட ஆட்டோவை செல்வதை அறிந்ததும், அங்கு சென்று ஆட்டோவை நிறுத்தி டிரைவரிடம் விசாரனை நடத்தி பெண் தவறவிட்ட 3 சவரன் தங்க சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

    • காட்டு யானை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
    • காட்டு யானை ஒன்று வனத்தை விட்டு வெளியேறி சுண்ட வயல் பகுதிக்குள் புகுந்தது.

    ஊட்டி

    கூடலூர் அடுத்த பாடந்துறை அருகே உள்ளது சுண்டவயல் கிராமம். இந்த பகுதியையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

    இங்கு காட்டு யானை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

    குறிப்பாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து, விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதுடன், வீடுகளை இடித்து தள்ளி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு காட்டு யானை ஒன்று வனத்தை விட்டு வெளியேறி சுண்ட வயல் பகுதிக்குள் புகுந்தது.

    அங்கு வெகுநேரமாக சுற்றி திரிந்த காட்டு யானை, அந்த பகுதியில் உள்ள சுப்பிரமணி மற்றும் பிரபாகரன் ஆகியோரின் வீடுகளை இடித்து சேதப்படுத்தியது.அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

    தொடர்ந்து காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். யானையின் நடமா ட்டத்தை கண்காணித்து வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • கல்யாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.
    • காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், கூடலூா் பாடந்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் கல்யாணி (56). இவா் புளியம்பாறை பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சனிக்கிழமை காலை சென்றாா்.

    அப்போது அங்கு வந்த காட்டு யானை தாக்கியதில் கல்யாணி சம்பவ இடத்திலேயே பலியானாா். தகவலின்பேரில் புளியம்பாறை பகுதிக்கு விரைந்து வந்த வனத் துறையினா் கல்யாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    இதேபோல கூடலூா், தேவாலா வாளவயல் பகுதியில் கடந்த நவம்பா் 19 ஆம் தேதி காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழந்தாா். இதையடுத்து தேவாலா பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    இதனைத் தொடா்ந்து அந்தப் பெண்ணை தாக்கிய பிஎம் 2 அரிசி ராஜா என்கிற காட்டு யானையைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

    இந்நிலையில் கூடலூா் பாடந்துறை கிராமத்தில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கல்யாணியைத் தாக்கி கொன்றது ஏற்கெனவே தேடப்பட்டு வரும் பி.எம் 2 அரிசி ராஜா காட்டு யானையா அல்லது வேறு யானையா என்ற கோணத்தில் வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

    • கர்நாடகாவில் இருந்து கூடலூரை நோக்கி வந்த சுற்றுலா வேனை நிறுத்தி விசாரித்தனர்.
    • 199 பண்டல்களில் 2,985 தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஊட்டி

    தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லாவில் மசினகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கர்நாடகாவில் இருந்து கூடலூரை நோக்கி வந்த சுற்றுலா வேனை நிறுத்தி விசாரித்தனர்.

    அப்போது வேனில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனுக்குள் சோதனை நடத்திய போது, சில மூட்டைகள் இருந்தது. அதை திறந்து பார்த்தபோது 199 பண்டல்களில் 2,985 தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.23,880 ஆகும். மேலும் கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து குட்கா பாக்கெட்டுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேர் கைது பின்னர் மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குட்காவை கடத்த முயன்ற கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்த சாணபாட்ஷா (வயது 51), பஷுர் அகமது (40), குண்டல்பெட்டை சேர்ந்த கோவிந்தசாமி (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து குட்கா பாக்கெட்டுகள் கூடலூரில் யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என விசாரணை நடைபெற்று வருகிறது.

    இது குறித்து போலீசார் கூறும்போது, சுற்றுலா பயணிகள் போர்வையில் கடத்தல் பேர்வழிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வருவதை தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. மேலும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் கூடலூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
    • கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி திராவிட இயக்க வரலாறு எனும் தலைப்பிலும் கருத்துரையாற்றினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் கூடலூரில் உள்ள திருமண மண்டபத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் இமயம் சசிகுமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை அமைப்பாளர் நவபுல் அனைவரையும் வரவேற்றார்.

    மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தொடக்க உரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாபு, நாகராஜ், உமாநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தி.மு.க செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா மாநில சுயாட்சி எனும் தலைப்பிலும், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி திராவிட இயக்க வரலாறு எனும் தலைப்பிலும் கருத்துரையாற்றினர்.

    இதில் முன்னாள் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஒன்றிய நகர செயலாளர்கள் லியாகத் அலி, இளஞ்செழியன் பாபு, சிவானந்தராஜா, சேகர், சுஜேஷ், முன்னாள் நகர செயலாளர்கள் காசிலிங்கம், ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜா, சதக்கத்துல்லா, பேரூர் கழக செயலாளர்கள் சின்னவர், சுப்பிரமணி, நகராட்சி தலைவர்கள் பரிமளா, சிவகாமி, பேரூராட்சி தலைவர்கள் சித்ராதேவி, வள்ளி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ஆலன், ரெனால்டு, மகேஸ்வரன் உட்பட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்துகொண்டனர். இளைஞர் அணியினர் 400-க்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்துகொண்டனர். முடிவில் நெல்லியாளம் நகர துணை அமைப்பாளர் சூசைராஜ் நன்றி கூறினார்.

    • வீடுகள், அனைத்தும் மேற்கூரை சேதம் அடைந்து காணப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகாவில் உள்ள கோடமூளா என்ற பழங்குடியினர் கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் பெட்டகுரும்பா இனத்தைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் தங்கி இருக்கும் வீடுகள், அனைத்தும் மேற்கூரை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதையடுத்து தங்களுக்கு அரசு புதிதாக வீடு கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து இவர்களுக்கு 2018-ம் ஆண்டில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சுமார் 46 வீடுகள் கட்டப்படுவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வீடு கட்டும் பணி

    தொடங்கியது.வீடு கட்டும் பணி தொடங்கி 5 ஆண்டுகளை கடந்தும், இதுவரை 10 வீடுகள் மட்டுமே முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 36 வீடுகள் முழுமையடையாமலும், மேற்கூரை அமைக்கப்படாமலும் பாதியிலேயே நிற்கிறது.

    இதனால் புதிய வீடுகளில் குடியேறலாம் என்று நினைத்த பழங்குடியின மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் ஒழுகும் கூரை மற்றும் ஓட்டு வீடுகளில் தார்பாய்கள், பிளாஸ்டிக் தாள்களை வைத்து மறைத்து வீடுகளில் வசித்து வருகிறோம். இது தொடர்பாக கூடலூர் நகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரசு இதற்கு கூடுதல் நிதியை ஒதுக்கி பாதியில் நிற்கும் வீடுகளை கட்டி ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
    • வீட்டுக்குள் வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களையும், பிற பொருட்களையும் காட்டு யானை சேதப்படுத்தியது.

    கூடலூர்

    கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஓவேலி பேரூராட்சி சூண்டி அருகே மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். கடந்த ஆண்டு இறந்து விட்டார்.

    இவரது மனைவி முத்துலட்சுமி. தேயிலை தோட்டத்துக்கு வேலைக்கு சென்று தனது மகனை கவனித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு அப்பகுதிக்குள் காட்டு யானை நுழைந்தது. தொடர்ந்து முத்துலட்சுமியின் வீட்டை முற்றுகையிட்டது.

    சிறிது நேரத்தில் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு எழுந்த முத்துலட்சுமி தனது மகனை தூக்கிக் கொண்டு வீட்டின் மறுபுறம் வழியாக வெளியேறி தப்பி ஓடினார்.

    தொடர்ந்து வீட்டுக்குள் வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களையும், பிற பொருட்களையும் காட்டு யானை சேதப்படுத்தியது. பாக்கு மரங்கள் சேதம் இதை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் காட்டு யானை அங்கிருந்து சென்றது. தொடர்ந்து ஊருக்குள் காட்டு யானை வருவதால் தோட்ட தொழிலாளர்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதற்கிடையே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாலம்வயல், ஒற்றவயல் உள்ளிட்ட இடங்களில் தோட்டத்துக்குள் புகுந்து விநாயகன் காட்டு யானை நேற்று பாக்கு மரங்களை தின்று சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். பல மாதங்களாக பயிர்கள், வாகனங்களை காட்டு யானை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதாக புகார் தெரிவித்து உள்ளனர்.

    • தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
    • புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி, 

    கூடலூர் அருகே நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெல்வியூ பகுதியை சேர்ந்தவர் மாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டார்.

    அப்போது எஸ்டேட் பகுதியில் மறைந்திருந்த புலி பசுமாட்டை தாக்கி கொன்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக நடுவட்டம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் மாரியின் மற்றொரு பசு மாட்டை நேற்று மதியம் புலி தாக்கி கொன்றது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நடுவட்டம் வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது புலி தாக்கி 2 பசு மாடுகள் பலியானது தொடர்பாக உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். மருத்துவ சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்தனர். தொடர்ந்து தோட்ட தொழிலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அப்பகுதியில் நடமாடும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புலி நடமாட்ட பீதியால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.

    • 2500-க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் உள்ளது.

     ஊட்டி:-

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தும், பல்வேறு சாலைகளும் துண்டிக்கப்பட்டும் உள்ளது.

    இதனை நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். பந்தலூர் பேரிஸ் ஹால் மற்றும் கூடலூர் நர்த்தகி திருமண மண்டபத்திலும் வைத்து 2500 மேற்பட்டவர்களுக்கு அரிசி, கம்பளி, சேலை, சுமார் வேட்டி, துண்டு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    சமீப காலங்களில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி 8 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் வீதம் ரூ.8 லட்சம் வழங்கியதுடன் யானை தாக்கியும், மழையால் வீடுகள் சேதமடைந்த சுமார் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கினார்.

    நடுவட்டம், கோழிபாலம் மங்குழி, தொரப்பள்ளி, தெப்பகாடு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக்,மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, திராவிடமணி, இளங்கோ, ராஜூ, பாண்டியராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், கூடலூர் பகுதி ஒன்றிய , நகர செயலாளர்கள் லியாகத் அலி, இளஞ்செழியன், சேகரன், சிவானந்த ராஜா, சுஜேஷ், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், பேரூர் செயலாளர்கள் சின்னவர், உதயகுமார், சுப்ரமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, சீனி, ராஜா, நகராட்சி தலைவர்கள் பரிமளா, சிவகாமி, பேரூராட்சி தலைவர்கள் சித்ரா தேவி, வள்ளி, கலியமூர்த்தி, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் மகேஸ்வரன், ஆலன், எல்கில் ரவி, நவ்புல், பிரதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • திறந்தவெளியை பயன்படுத்தும் அவல நிலை காணப்படுகிறது.
    • 10 வீடுகளில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது.

    கூடலூர்,

    நாடு முழுவதும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் பொருட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் வீடுகள் தோறும் கழிப்பறைகள் கட்ட தலா ரூ.15 ஆயிரம் நிதி ஒதுக்கியது. இதன் காரணமாக பெரும்பாலான கிராமங்களில் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இத்திட்டம் மக்களை முழுமையாக சென்றடையாத கிராமங்களும் உள்ளது. கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஓவேலி பேரூராட்சி சட்டப்பிரிவு-17 வகை நிலத்தின் கீழ் வருவதால் மக்களுக்கு தேவையான அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான கிராமங்களில் கழிப்பறை வசதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை. ஆத்தூர் கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். கிராமத்தில் வசிக்கும் மக்கள் வெளியிடங்கள், கிராமங்களுக்கு உடனடியாக செல்ல போக்குவரத்து வசதி இல்லை. இதேபோல் தொலைபேசி அலைவரிசை சேவையும் எட்டாக்கனியாகவே உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் வாரத்துக்கு ஒருமுறை பல கிலோமீட்டர் தூரம் கால்நடையாக நடந்து காந்திநகர் என்ற இடத்திற்கு வருகின்றனர். பின்னர் அங்கிருந்து வாகனத்தில் கூடலூருக்கு வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். அடர்ந்த வனம் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் ஆத்தூர் கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 10 வீடுகளில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது. ஆனால் மீதமுள்ள வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்படவில்லை. இதுதவிர மகளிர் மட்டும் பயன்படுத்தும் வகையில் பேரூராட்சி மூலம் பொதுகழிப்பறை கட்டப்பட்டு உள்ளது. திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர் இதனால் பெண்கள் பொதுகழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஆண்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. அப்பகுதியில் ஓடும் ஆற்றின் கரையோரம் திறந்தவெளியை இயற்கை உபாதை கழிக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீடுகளுக்கும் கழிப்பறை கட்டி தர வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பகுதியில் ஓடும் ஆற்றின் நீரையே கூடலூர் பகுதி மக்களுக்கு குடிநீராகவும் வழங்கப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஆத்தூர் பகுதி கிராம மக்களுக்கு கழிப்பறை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    ×