search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் அருகே கூரை, ஓட்டு வீடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள்
    X

    கூடலூர் அருகே கூரை, ஓட்டு வீடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள்

    • வீடுகள், அனைத்தும் மேற்கூரை சேதம் அடைந்து காணப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகாவில் உள்ள கோடமூளா என்ற பழங்குடியினர் கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் பெட்டகுரும்பா இனத்தைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் தங்கி இருக்கும் வீடுகள், அனைத்தும் மேற்கூரை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதையடுத்து தங்களுக்கு அரசு புதிதாக வீடு கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து இவர்களுக்கு 2018-ம் ஆண்டில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சுமார் 46 வீடுகள் கட்டப்படுவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வீடு கட்டும் பணி

    தொடங்கியது.வீடு கட்டும் பணி தொடங்கி 5 ஆண்டுகளை கடந்தும், இதுவரை 10 வீடுகள் மட்டுமே முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 36 வீடுகள் முழுமையடையாமலும், மேற்கூரை அமைக்கப்படாமலும் பாதியிலேயே நிற்கிறது.

    இதனால் புதிய வீடுகளில் குடியேறலாம் என்று நினைத்த பழங்குடியின மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் ஒழுகும் கூரை மற்றும் ஓட்டு வீடுகளில் தார்பாய்கள், பிளாஸ்டிக் தாள்களை வைத்து மறைத்து வீடுகளில் வசித்து வருகிறோம். இது தொடர்பாக கூடலூர் நகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரசு இதற்கு கூடுதல் நிதியை ஒதுக்கி பாதியில் நிற்கும் வீடுகளை கட்டி ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×