search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Common festival celebration"

    • கோவிலில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது
    • கொட்டும் பனியை பொருட்படுத்தாது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாண்டியாறு ஆமைக்குளத்தில் ரதி-மன்மதன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அப்பகுதி மக்கள் விரதம் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர்.

    நேற்று முன்தினம் நள்ளிரவில் காமன் பண்டிகையையொட்டி ரதி - மன்மதன் திருமணம் நடைபெற்றது. பல்வேறு வேடங்கள் அணிந்த பக்தர்கள் தொடர்ந்து தேர் ஊர்வலம், மொய் விருந்து உபச்சாரம், மன்மதனுக்கு குறி சொல்லுதல் நிகழ்ச்சி, சிவபெருமான் தியானத்தில் அமர்தல், தட்சன் யாகம், முனீஸ்வரர். அகோர வீர புத்திரன் வருகை, மன்மதன், தட்சனை எரித்தல் உள்பட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்றது. இதை உணர்த்தும் வகையில் பக்தர்கள் ரதி - மன்மதன் மற்றும் சிவபெருமான் உள்பட பல்வேறு வேடங்களில் விடிய விடிய நடித்து காண்பித்தனர். தொடர்ந்து பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் கொட்டும் பனியை பொருட்படுத்தாது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×