என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமாடுகள்"

    • அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு நேரங்களில் பொதுமக்களை தாக்குகிறது.
    • கடற்கரை ஓரம் காற்று வீசுவதால் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருப்பதில்லை.

    விழுப்புரம்:

    மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது இதனால் இப்பகுதியில் உள்ள குடியிருப்பு சாலை ஓரங்கள் குளம் குட்டை போன்றவைகளில் நீர் தேங்கியுள்ளது. இதிலிருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு நேரங்களில் பொதுமக்களை தாக்குகிறது. அதிலும் இரவு நேரங்களில் மின்சாரம் தடைபட்டால் பொதுமக்கள் கொசுக்கடிகளிலிருந்து தப்பிக்கவே பெரும்பாடு படுகின்றனர். இதுபோல் இரவு நேரங்களில் தாக்கும் கொசுக்களை விரட்ட கொசு விரட்டிகள் வைத்தால் கூட கொசுவை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

    இந்நிலையில் கொசுக்கடிகளிலிருந்து மனிதர்களே தப்பிக்க அவதிப்படும் நிலையில் கால்நடைகளும் தப்பவில்லை. இது போன்ற கொசுக்கடிகளிலிருந்து தப்பிக்க சில கால்நடைகள் கூட்டம் கூட்டமாக கடற்கரை ஓரம் சென்று இரவு நேரங்களில் தங்கி ஓய்வெடுத்து வருகின்றது. கடற்கரை ஓரம் காற்று வீசுவதால் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருப்பதில்லை. இதனால்தான் கால்நடைகள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள இதுபோன்று கடற்கரையை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்கிறது என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். 

    • தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
    • புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி, 

    கூடலூர் அருகே நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெல்வியூ பகுதியை சேர்ந்தவர் மாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டார்.

    அப்போது எஸ்டேட் பகுதியில் மறைந்திருந்த புலி பசுமாட்டை தாக்கி கொன்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக நடுவட்டம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் மாரியின் மற்றொரு பசு மாட்டை நேற்று மதியம் புலி தாக்கி கொன்றது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நடுவட்டம் வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது புலி தாக்கி 2 பசு மாடுகள் பலியானது தொடர்பாக உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். மருத்துவ சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்தனர். தொடர்ந்து தோட்ட தொழிலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அப்பகுதியில் நடமாடும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புலி நடமாட்ட பீதியால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.

    ×