என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mosquito bites"
- எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூதன முறையில் கொசுவலை பிடித்துக் கொண்டு கொசு பிடிக்கும் போராட்டம் நடைபெற்றது.
- ஒன்றிய செயலாளர் கே.எஸ். வெங்கடாசலம் போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூதன முறையில் கொசுவலை பிடித்துக் கொண்டு கொசு பிடிக்கும் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கே.எஸ். வெங்கடாசலம் போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை சார்பில் இருபுறமும் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. அப்போது எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள சாக்கடை கால்வாய் தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டதால் மழைக்காலங்களில் மழைநீர், சாக்கடை கழிவுநீர் வெளியேறாமல் இங்குள்ள கடைகள், அரசு அலுவலகங்கள் முன்பு குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதால் தற்போது கொசு பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.
இதில் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ், மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள், முன்னால் ஒன்றிய செயலாளர் பி.சுரேஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, ஈஸ்வரன், கிட்டுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு நேரங்களில் பொதுமக்களை தாக்குகிறது.
- கடற்கரை ஓரம் காற்று வீசுவதால் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருப்பதில்லை.
விழுப்புரம்:
மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது இதனால் இப்பகுதியில் உள்ள குடியிருப்பு சாலை ஓரங்கள் குளம் குட்டை போன்றவைகளில் நீர் தேங்கியுள்ளது. இதிலிருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு நேரங்களில் பொதுமக்களை தாக்குகிறது. அதிலும் இரவு நேரங்களில் மின்சாரம் தடைபட்டால் பொதுமக்கள் கொசுக்கடிகளிலிருந்து தப்பிக்கவே பெரும்பாடு படுகின்றனர். இதுபோல் இரவு நேரங்களில் தாக்கும் கொசுக்களை விரட்ட கொசு விரட்டிகள் வைத்தால் கூட கொசுவை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில் கொசுக்கடிகளிலிருந்து மனிதர்களே தப்பிக்க அவதிப்படும் நிலையில் கால்நடைகளும் தப்பவில்லை. இது போன்ற கொசுக்கடிகளிலிருந்து தப்பிக்க சில கால்நடைகள் கூட்டம் கூட்டமாக கடற்கரை ஓரம் சென்று இரவு நேரங்களில் தங்கி ஓய்வெடுத்து வருகின்றது. கடற்கரை ஓரம் காற்று வீசுவதால் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருப்பதில்லை. இதனால்தான் கால்நடைகள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள இதுபோன்று கடற்கரையை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்கிறது என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்