search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A wild elephant broke"

    • யானை தும்பிக்கையால் தாக்கியது.
    • ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் யானைகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரி த்துள்ளது பொதுமக்க ளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    2 நாட்களுக்கு முன்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யானை தாக்கி பலியானார்கள். இந்தநிலையில் இன்று காலை ஓவேலி நம்பர் 4 பகுதியில் யானை தாக்கியதில் ஒரு பெண் படுகாயம் அடைந்துள்ளார்.

    அந்த பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் என்பவரின் மனைவி மகாலட்சுமி (வயது 55). இன்று அதிகாலை இவர் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது காட்டு யானை அவரது வீட்டு அருகே வந்தது.

    அந்த யானை வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் மகாலட்சுமி அதிர்ச்சியுடன் விழித்தெ ழுந்தார். தப்பி ஓட முயன்ற அவரை யானை தும்பிக்கையால் தாக்கியது. இதில் மகாலட்சுமி பலத்த காயம் அடைந்தார். பின்னர் யானை அங்கிருந்து காட்டுக்குள் சென்று மறைந்தது. அக்கம்பக்கத்தினர் மகாலட்சுமியின் வீட்டுக்கு சென்று அவரை மீட்டனர். காயம் அடைந்த மகாலட்சுமி ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து வனத்துறை ஊழி யர்கள் நேரில் சென்று விசா ரணை மேற்கொண்டனர்.

    • கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
    • வீட்டுக்குள் வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களையும், பிற பொருட்களையும் காட்டு யானை சேதப்படுத்தியது.

    கூடலூர்

    கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஓவேலி பேரூராட்சி சூண்டி அருகே மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். கடந்த ஆண்டு இறந்து விட்டார்.

    இவரது மனைவி முத்துலட்சுமி. தேயிலை தோட்டத்துக்கு வேலைக்கு சென்று தனது மகனை கவனித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு அப்பகுதிக்குள் காட்டு யானை நுழைந்தது. தொடர்ந்து முத்துலட்சுமியின் வீட்டை முற்றுகையிட்டது.

    சிறிது நேரத்தில் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு எழுந்த முத்துலட்சுமி தனது மகனை தூக்கிக் கொண்டு வீட்டின் மறுபுறம் வழியாக வெளியேறி தப்பி ஓடினார்.

    தொடர்ந்து வீட்டுக்குள் வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களையும், பிற பொருட்களையும் காட்டு யானை சேதப்படுத்தியது. பாக்கு மரங்கள் சேதம் இதை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் காட்டு யானை அங்கிருந்து சென்றது. தொடர்ந்து ஊருக்குள் காட்டு யானை வருவதால் தோட்ட தொழிலாளர்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதற்கிடையே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாலம்வயல், ஒற்றவயல் உள்ளிட்ட இடங்களில் தோட்டத்துக்குள் புகுந்து விநாயகன் காட்டு யானை நேற்று பாக்கு மரங்களை தின்று சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். பல மாதங்களாக பயிர்கள், வாகனங்களை காட்டு யானை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதாக புகார் தெரிவித்து உள்ளனர்.

    ×