search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் அருகே மாயாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட பரிசல்
    X

    கூடலூர் அருகே மாயாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட பரிசல்

    • கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கூடலூர் அருகே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • பரிசல் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கூடலூர் அருகே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதன்காரணமாக தெங்குமரஹடா, கல்லாம்பாளையம் பகுதிகளுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பரிசல் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் அத்தியாவசிய தேவைகளுக்காக 2 கிராம மக்களும் பரிசலில் சென்று வருகின்றனர். இன்று காலை கல்லாம்பாளையம் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து இருந்தது.

    இந்த நிலையில் கல்லாம்பாளையத்தை சேர்ந்த 3 பேர் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக கோத்தகிரி செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் பரிசலில் ஏறி மாயாற்றில் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கில் பரிசல் சிக்கி கொண்டது. சிக்கிய வேகத்தில் சிறிது தூரம் பரிசல் அடித்து செல்லப்பட்டது.

    இருப்பினும் பரிசல் ஓட்டுனர் சாதுர்யமாக செயல்பட்டு பரிசலில் இயக்கி கரைக்கு கொண்டு வந்தார். இதனால் அதிர்ஷ்டவசமாக பரிசல் ஓட்டுனர் உள்பட 4 பேரும் உயிர் தப்பினர்.

    Next Story
    ×