search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மங்குழியில் தற்காலிக பாலம் அமைத்து தர வேண்டும்-கவுன்சிலர்கள் கோரிக்கை
    X

    மங்குழியில் தற்காலிக பாலம் அமைத்து தர வேண்டும்-கவுன்சிலர்கள் கோரிக்கை

    • கூடலூா் நகா்மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • காளம்புழா மின்மயான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

    ஊட்டி:

    கூடலூா் நகா்ம ன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்து க்கு நகராட்சித் தலைவா் பரிமளா தலைமை தாங்கினாா். துணைத் தலைவா் சிவராஜ், கமிஷனர் காந்திராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில் நகா் மன்ற உறுப்பினா்கள் பேசியதாவது:- காளம்புழா மின்மயான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும். அந்த பகுதியில் குடிநீா், மின்வசதி செய்து தரவேண்டும். மாக்கமூலா பகுதியிலுள்ள பொதுகிணறுக்கு செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. இதனை விரைந்து சீரமைத்துத் தர வேண்டும். முதல்மைல், புறமணவயல், நேதாஜி நகா் ஆகிய பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்து தரவேண்டும்.

    நடுகூடலூா் பகுதியில் குடிநீா் விநியோகம் சீராக இல்லை. பல இடங்களுக்கு குடிநீா் வந்து சோ்வதில்லை. மங்குழியில் மழையில் பாலம் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் தற்காலிக பாலம் அமைத்து தர வேண்டும்.

    மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஏழுமுறம் பாலத்தை விரைவில் அமைத்துத் தரவேண்டும். யானைகள் நடமாடும் பகுதியான தொரப்பள்ளி பகுதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை. தொரப்ப ள்ளியிலிருந்து இருவயல் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதை சீரமைத்துத் தரவேண்டும். எஸ்.எஸ்.நகா் பகுதியில் தெருவிளக்கு, குடிநீா் வசதி, நடைபாதை அமைத்து தரவேண்டும்.

    நகராட்சியின் சுகாதாரத் துறையில் செலவு கணக்குகளை முறையாக காண்பிப்பதில்லை. கூடலூா் பஸ் நிலையம் அருகில் கழிவறைகள் கட்ட வேண்டும். நகரில் குறுகிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தவிா்க்க முறையான பாா்க்கிங் வசதி செய்து தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து உறுப்பினா்கள் பேசினா்.

    விவாதத்தில், வெண்ணிலா(திமுக), இளங்கோ (திமுக), வா்கீஸ் (காங்), ஷகிலா (மு.லீக்), லீலா வாசு (சி.பி.எம்.), ராஜு(காங்), சத்தியசீலன் (திமுக), உஷா (திமுக), கௌசல்யா (திமுக), உஸ்மான் (காங்), அனூப்கான்(அதிமுக) ஆகியோா் பேசினா்.

    Next Story
    ×