search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "repaired"

    • ய்க்கால் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது.
    • அதிகாரிகள் உடனடியாக சீரமைப்பதாக உறுதி அளித்தனர்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை குளத்துமேடு வார்டு பகுதியான செயின்தெரேசா வீதி, குளத்துமேடு வீதி, நீடராஜப்பையர் வீதி ஆகிய பகுதிகளில் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது.

    தகவல் அறிந்த நேரு எம்.எல்.ஏ. அந்த பகுதிகளில் அரசு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். மழை நீர் எளிதாக வெளி யேறும் வகையில் வாய்க்கால்களை தூர்வாரி பாதாள கழிவுநீர் தொட்டி குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய கேட்டு கொண்டார். அதிகாரிகள் உடனடியாக சீரமைப்பதாக உறுதி அளித்தனர்.

    ஆய்வின்போது உள்ளாட்சித் துறை இயக்கு னர் சக்திவேல், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் உமாபதி, நகராட்சி ஆணையர் சிவகுமார், நகராட்சி செயற்பொறி யாளர் சிவபாலன், உதவி பொறியாளர்கள் பன்னீர் செல்வம், நமச்சிவாயம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    மதில் சுவர் பல ஆண்டுகளாக சேதமடைந்து ஆங் காங்கே விரிசல் விட்டு உடைந்த நிலையில் இருந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட ரோடியார்பேட்டில் உள்ள ஏ.எப்.டி. மைதானத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மதில் சுவர் பல ஆண்டுகளாக சேதமடைந்து ஆங் காங்கே விரிசல் விட்டு உடைந்த நிலையில் இருந்தது.

    இதனை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென் னடியிடம் கோரிக்கை வைத்தனர். அதனை பார்வையிட்ட எம்.எல்.ஏ., உடனே பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலகத்திற் கும், நகராட்சி ஆணையர் அலுவலகத்திற்கும் சென்று கோரிக்கை வைத்தார். பின்னர் அதிகாரிகளை அழைத்து ஏ.எப்.டி மைதானத்தை ஆய்வு மேற்கொண் டார்.

    அப்போது சுற்றுமதில் சுவர்களை சீரமைத்து பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக கட்டிதர வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து மதில் சுவரை விரைவில் சீர மைத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர், ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் சாம்பசிவம், தி.மு.க. அவைத் தலைவர் அரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் செயலாளர் ராஜி, மாணவர் அணி நிசார், மீனவர் அணி விநாயகம், கிளை செயலாளர்கள் ஆறுமுகம், மாயவன், ராகேஷ், நிர்வாகிகள் ரகுராமன், பஸ்கள், மரி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு தொட்டி பாலம் வாய்க்கால் பகுதியில் சமீபத்தில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது.
    • தற்போது இந்த பாலம் சேதம் அடைந்து இருப்பதால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

    நெல்லை:

    நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு தொட்டி பாலம் வாய்க்கால் பகுதியில் சமீபத்தில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது.

    இந்த பாலத்தில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. தென்காசி மற்றும் கடையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும், ஏராளமான சரக்கு வாகனங்களும் இந்த சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும்.

    தற்போது இந்த பாலம் சேதம் அடைந்து இருப்பதால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள் சிரமத்தை போக்கும் விதமாக பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகமது அயூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • ஏலமன்னா-பந்தலூர் இடையே உள்ள சாலை ஏற்கனவே குண்டும், குழியுமாக காணப்பட்டது.
    • பழங்குடியின மக்கள், பொதுமக்கள் ரேஷன் கடைகளில் வாங்கும் அத்தியாவசிய பொருட்களை தலையில் சுமந்தவாறு நடந்து செல்கிறார்கள்.

    ஊட்டி:

    பந்தலூர் அருகே ஏலமன்னாவில் இருந்து ேமங்கோரேஞ்ச் வழியாக பந்தலூருக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமான தனியார் வாகனங்கள், பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், ஆட்டோக்கள் சென்று வருகின்றன.

    ஏலமன்னா-பந்தலூர் இடையே உள்ள சாலை ஏற்கனவே குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை சீரமைக்கப்பட்டது. பின்னர் நாளடைவில் சாலை மீண்டும் பழுதடைய தொடங்கியது. மேலும் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் சென்றால், சாலை குண்டும், குழியுமாக மாறியது. இதனால் கற்கள் பெயர்ந்து கரடு முரடாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அவசர சிகிக்சைக்கு நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. பழுதடைந்த சாலையில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் காட்டு யானைகள் நடமாட்டம் சாலையில் உள்ளது. எனவே, சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, சாலை பழுதடைந்து உள்ளதால், ஏலமன்னா அரசு உண்டு உறைவிட பள்ளிக்கு அரிசி, காய்கறிகளை ஏற்றி செல்லும் சரக்கு வாகனம் செல்ல முடியவில்லை. இதனால் சுமந்தபடி கொண்டு செல்கின்றனர்.

    பழங்குடியின மக்கள், பொதுமக்கள் ரேஷன் கடைகளில் வாங்கும் அத்தியாவசிய பொருட்களை தலையில் சுமந்தவாறு நடந்து செல்கிறார்கள். அந்த சமயத்தில் காட்டு யானைகள் விரட்டும் போது, சிலர் தவறி விழுந்து காயமடைகின்றனர். தற்போது பெய்து வரும் மழையால் சாலை அடித்து செல்லப்பட்டு, கால்வாய் போல் காணப்படுகிறது. எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட சின்னகடை மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.
    • இங்குள்ள மேற்கூரைகள் சேதமடைந்தும், மின்சார பலகை பாதுகாப்பாக இல்லாமலும் உள்ளது.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட சின்னகடை மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இங்குள்ள மேற்கூரைகள் சேதமடைந்தும், மின்சார பலகை பாதுகாப்பாக இல்லாமலும் உள்ளது. 

    இதனால் மீன் வியாபாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதையடுத்து இப்பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியை மீன் வியாபாரிகள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

    இதையடுத்து சின்னக்கடை மீன் வியாபாரிகளை அனிபால் கென்னடி அழைத்து சென்று புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார். செயற்பொறியாளர் சிவபாலன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது சின்னக்கடை மீன் மார்க்கெட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் முழுமையாக புதுப்பித்து நடவடிக்கை எடுக்க அரசு தவறவிட்டதால், நகராட்சி தான் இதை செய்து கொடுக்க வேண்டும் என்று ஆணையர் மற்றும் செயற்பொறியாளரை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

    அதற்கு நகராட்சியில் போதுமான நிதி இல்லாததால் இதை செய்து கொடுக்க காலதாமதம் ஆகிவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதும், சட்டமன்ற நிதியின் கீழ் இதை செய்து கொடுங்கள் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து இந்த முயற்சிக்கு ஆவண செய்யலாம் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    இதில் தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞரண் துணை அமைப்பாளர் ஆரோக்கியராஜ், தி.மு.க. பிரமுகர் அஷ்ரப், காந்தி, கணேசன், நிசார், பீட்டர், ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தென்காசி - இலஞ்சி சாலையில் புதியப்பாலம் கட்டப்பட்ட சாலையில் தார்ச்சாலை பெயர்ந்து உள்ளது.
    • தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செங்கோட்டை:

    தென்காசியில் இருந்து இலஞ்சி செல்லும் சாலையில் அரிகரா நதியும், சிற்றாறும் இணையும் இடமான ஆற்றின் குறுக்கே ரூ. 3 கோடி செலவில் புதியபாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு வங்கி நிதி திட்டத்தின் கீழ் புதிய பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.பாலப் பணிகள் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    இதனால் செங்கோட்டையில் இருந்து இலஞ்சி வழியாக தென்காசிக்கு 8 கி.மீ. தூரத்தில் செல்ல வேண்டியதை குற்றாலம் வழியாகவோ அல்லது இலஞ்சி, குத்துக்கல்வலசை வழியாகவோ கூடுதலாக 5 கி.மீ., சுற்றி சென்றன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்துள்ளனர்.

    பாலப்பணிகளை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இந்த பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டது.சுமார் 13 மாதங்களுக்கு பின்னர் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் தென்காசி - இலஞ்சி சாலையில் புதியப்பாலம் கட்டப்பட்ட சாலையில் தார்ச்சாலை பெயர்ந்து உள்ளது. இரவு நேரங்களில் பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்படாததால் வெளிச்சம் இல்லாமல் பழுதடைந்த சாலையில் ஒருவித அச்சத்துடனே வாகனம் ஓட்டிகள் சென்று வருகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலப்பணிகளை முடித்து விரைவில் தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    • சாலையடியூர் வழியாக செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமான நிலையில் காணப்படுகிறது.
    • சாலை மிகவும் பள்ளங்கள் நிறைந்து உருக்குலைந்து காணப்படுகிறது.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஒன்றியம் ஆவுடையானூரில் இருந்து மருதடியூர், சாலையடியூர் வழியாக செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமான நிலையில் காணப்படுகிறது.

    பள்ளி மாணவர்கள், பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட் செல்லும் விவசாயிகள், வாகன ஓட்டிகள் என பலரும் இந்த சாலையில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல் திப்பணம்பட்டி முதல் அரியப்பபுரம் ரெயில்வே கேட் வரை செல்லும் சாலையும் மிகவும் பள்ளங்கள் நிறைந்து உருக்குலைந்து காணப்படுகிறது.

    எனவே இந்த இரு சாலைகளையும் செப்பனிட்டு தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×