search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல்துறை"

    • ஆர்.எஸ்.மங்கலத்தில் நீர், மோர் பந்தல் நடத்தி வரும் காவல்துறையினருக்கு குவியும் பாராட்டு குவிந்தன.
    • ஆர்.எஸ். மங்கலத் தில் சனிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுகிறது வழக்கம்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆர்.எஸ். மங்கலத் தில் சனிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுகிறது வழக்கம். இங்கு நடைபெறும் வார சந்தைக்கு ஆர்.எஸ்.மங் கலத்தை சுற்றியுள்ள கிராமத்திலிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் சந்தையில் தங்களது வீட்டில் உள்ள நெல், மிளகாய், நவதானிய பொருட்களை விற்று விட்டு அதில் வரும் பணத்தைக் கொண்டு வீட்டுக்கு தேவை யான சாமான்களை வாங்கிச் செல்வது வழக்கம்.

    இந்த ஆண்டு தற்போது கோடை காலத்தில் வழக்கத்துக்கு மாறாக கடுமை யான வெயில் சுட்டெரிப்ப தால் சந்தைக்கு வரும் பொதுமக்களின் தாகத்தை போக்கும் வகை யில் நீண்ட விடுமுறையில் சென்று வந்த ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையம் இன்ஸ் பெக்டர் பாஸ்கரன் முயற்சியால் அவர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்தன் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் இணைந்து சந்தை அருகே சனிக்கிழமை தோறும் நீர், மோர்பந்தல் நடத்தி வருவது குறிப் பிடத்தக்கது.

    காவல் துறையினரின் இச்செயலை கண்டு சமூக ஆர்வலர்களும், தன்னார்வ தொண்டர்களும், பொதுமக்களும் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலவரக்காரர்கள் உடன் நடைபெற்ற மோதலில் சுமார் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • பயங்கரவாதிகள் M-16 மற்றும் AK-47 ரக அசால்ட் ரைஃபிள் மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கிகளை பயன்படுத்தினர்.

    மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி போலீசார் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் பலத்த காயமுற்றனர். கடந்த மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டு வருகிறது.

    முன்னதாக கலவரக்காரர்கள் உடன் நடைபெற்ற மோதலில் சுமார் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்தார். இது பற்றி மேலும் பேசிய அவர் கூறியதாவது,

    "பயங்கரவாதிகள் M-16 மற்றும் AK-47 ரக அசால்ட் ரைஃபிள் மற்றும் ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை பயன்படுத்தினர். அவர்கள் ஏராளமான கிராமங்களுக்குள் புகுந்து, வீடுகளுக்கு தீ வைத்தனர். ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் மூலம், அவர்களுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கை எடுக்க துவங்கி விட்டோம். கிட்டத்தட்ட 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டஎனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன," என்று தெரிவித்தார்.

    கலவரம் ஏற்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று பயணம் செய்கிறார். அமைதியை நிலைநாட்ட சமூகங்கள் அமைதி காக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தி உள்ளார். முன்னதாக ராணுவ தளபதி மனோஜ் பாண்டே மணிப்பூருக்கு விரைந்து, அங்குள்ள சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்தார்.

    • உண்டியல்களின் சீல்களை சேதப்படுத்தி இருந்தது.
    • உண்டியலை உடைத்து திருடலாம் என்று திட்டமிட்டு கோபுரத்துக்குள் ஏறி மறைந்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் காலை நடை திறந்தபோது அங்கு உள்ள 63 நாயன்மார் சாமி சிலைகளின் துணிகளை அகற்றியும், அதன் மேலிருந்த சிமெண்டால் கட்டப்பட்ட கலசம் போன்ற அமைப்புகளை உடைத்தும், உண்டியல்களின் சீல்களை சேதப்படுத்தியும் இருந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக கோவில் செயல் அதிகாரி மருதுபாண்டியன் அளித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் ராஜகோபுரத்தில் பதுங்கி இருந்த சேவூர் அருகே சாவக்காட்டுப்பாளையம் அரவங்காடு தத்தனூரை சேர்ந்த தையல் தொழிலாளி சரவணபாரதி (வயது 32) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவருக்கு பணம் தேவைப்பட்டதால் குறுக்கு வழியில் திருடலாம் என நினைத்து அவினாசி வந்த அவர், கடந்த 22-ந் தேதி மாலை கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டுவிட்டு, அங்கேயே அமர்ந்து அவர் உண்டியலை உடைத்து திருடலாம் என்று திட்டமிட்டு கோபுரத்துக்குள் ஏறி மறைந்துள்ளார்.

    பின்னர் இரவு 11 மணிக்கு கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி கோவிலுக்குள் இருந்த பித்தளை வேலை எடுத்து உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளார். இரவு முழுவதும் கோவிலுக்குள் இருந்தவர் அவ்வப்போது மனநிலைக்கு ஏற்ப இவ்வாறு செய்துள்ளார். கோவிலில் சாமி சிலைகள் எதுவும் சேதப்படுத்தப்படவில்லை. எந்த அரசியல் அமைப்பையும் சேர்ந்தவர் இல்லை. இந்த வழக்கை துரிதமான முறையில் விசாரித்து சம்பவம் நடந்த அன்றே வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
    • எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஸ்ரீநகர்:

    உலகின் வளர்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.

    இதையொட்டி பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 கூட்டம் இன்று தொடங்கியது. சுற்றுலா தொடர்பான ஜி20 பணிக் குழுவின் 3-வது கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சர்வதேச கூட்டமாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.

    ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த கூட்டத்தின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு படை, கடற்படை, கமாண்டோக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஜபர்வன் மலைப்பகுதி முதல் எழில்மிக்கதால் ஏரி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தால் ஏரியில் கடற்படை காமாண்டோக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் பரவலாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆசியாவின் சுவிட்சர்லாந்து என அறியப்படும் குல்மார்க் மற்றும் இதர சுற்றுலா தலங்களுக்கு சர்வதேச பிரதிநிதிகள் வருகை புரிவதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சுற்றுலா தொடர்பான முதல் கூட்டம் குஜராத்தின் கட்ச் பகுதியிலும், 2-வது கூட்டம் மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியிலும் நடைபெற்றது.

    • போக்குவரத்து விதிமீறலுக்கு காவல்துறை விதிக்கும் அபராத கட்டணத்தையும் பாடலுடன் கூறி அசத்தி வருகிறார்.
    • கடும் வெயிலில் பணிபுரிந்து வரும் போலீசாருக்கு பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    விருத்தாசலம்:

    போக்குவரத்து போலீஸ்காரர்கள் என்றால் ரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாக வரும் வாகனங்களை போக்குவரத்து நெரில் இன்றி அனுப்புவது தான் வழக்கம். ஆனால் ஒரு போக்குவரத்து போலீஸ்காரர் பாட்டு பாடி சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரப் பகுதியில் சென்னை-கன்னியாகுமரி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் அதிசிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் விருத்தாசலம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வரும் சிவபெருமாள் பணியில் ஈடுபட்டு இருக்கும்போது சாலை விழிப்புணர்வு பற்றி பாடல்கள் மூலம் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். பஸ்நிலையம், பாலக்கரை, கடைவீதி ஆகிய பகுதிகளில் பணியில் ஈடுபட்டு இருக்கும்போது சிவபெருமாள் ஒலி பெருக்கி மூலம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்க கூடாது. பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டகூடாது. இன்சூரன்ஸ், லைசன்ஸ் உள்ளிட்ட வாகன ஆவணங்களை வாகனங்களில் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும், நகர பகுதியில் வாகனத்தில் அதிவேகமாக செல்லக் கூடாது உள்ளிட்ட சாலை விழிப்புணர்வு பாடல் மூலம் அறிவுறுத்தி வருகிறார்.

    மேலும் போக்குவரத்து விதிமீறலுக்கு காவல்துறை விதிக்கும் அபராத கட்டணத்தையும் பாடலுடன் கூறி அசத்தி வருகிறார். அதோடு கடும் வெயிலில் பணிபுரிந்து வரும் போலீசாருக்கு பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறார்.

    கோடைகாலத்தில் கடும் வெயிலிலும், வாகன ஓட்டிகளுக்கு பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் போலீஸ்காரர் சிவ பெருமாளை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    • புகாரை ஏற்றுக் கொண்டு வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடும் பணிகளில் ஈடுபட்டனர்.
    • சிறுமியை காவல் துறையினர் அவரது குடும்பத்தாருடன் சேர்த்து வைத்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 2019 ஆண்டு வீட்டில் இருந்து மாயமாகி போனார். சிறுமியின் தந்தை தனது மகள் காணவில்லை என்று டோம்பிவிலியை அடுத்த மன்படா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரை ஏற்றுக் கொண்டு வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடும் பணிகளில் ஈடுபட்டனர். எனினும், சிறுமியின் இருப்பிடம் தெரியவில்லை. இந்த நிலையில், முடிக்கப்படாத வழக்குகளை விசாரிக்கும் பணிகளை மன்படா காவல் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டனர்.

    அதன்படி 2019-ம் ஆண்டு காணாமல் போன சிறுமியை அவரது ஆதார் எண் கொண்டு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். காணாமல் போன சிறுமி ஒடிசாவில் மீட்கப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமி தனது காதலருடன் ஓடியது தெரியவந்துள்ளது.

    வீட்டை விட்டு 28 வயதான காதலருடன் ஓடி வந்த சிறுமி அவரை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது மேஜர் ஆன நிலையில், சிறுமியை காவல் துறையினர் அவரது குடும்பத்தாருடன் சேர்த்து வைத்தனர்.

    சிறுமியை திருமணம் செய்து கொண்ட நபர் கைது செய்யப்பட்டு, மன்படா காவல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    • சிவகங்கை அருகே காவல்துறை சார்பில் மக்கள்குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • முகாமில் 105 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நகர், வட்டத்தை சேர்ந்த 7காவல் நிலையங்கள் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் திருப்பத்தூர் கலைவாணி, எஸ்.எஸ்.கோட்டை அந்தோணி செல்லத்துரை, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வி முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் டவுன், நாச்சியாபுரம், கண்டவராயன்பட்டி திருக்கோஷ்டியூர் கீழச்சிவல்பட்டி எஸ்.எஸ்.கோட்டை மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார் மனுகளுக்கு, புகார்தாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களுக்கு கடந்த 3தினங்களுக்கு முன்பு அழைப்பு விடுக்கப்பட்டு அந்த மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருப்பத்தூர் செல்வபிரபு, பாலகிருஷ்ணன், சிவாஜி பாண்டியன், விஜய்,பெரியசாமி, கலையரசன், சாமுண்டீசுவரி, சேதுபாமா மற்றும் போலீசார் பங்கேற்று விசாரணை மேற்கொண்டனர். முகாமில் 300 மனுக்கள் விசாரணை மேற்கொண்டதில் 105 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    • சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்படுத்தப்படும்.
    • குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு காவல்துறை சார்பில் 4 தலைப்புகளில் ஓவியப்போட்டி கடந்த ஆண்டு நடந்தது. அப்போது சுமார் 3 ஆயிரம் ஓவியங்கள் கிடைக்க பெற்று 12-7-2022 அன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பான முறையில் ஓவியங்கள் வரைந்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேபோல இந்த ஆண்டும் போட்டிகள் நடக்கின்றன.

    கல்வியின் நோக்கம் ஒருவரின் சொந்த வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்ல மற்றவர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதும் ஆகும். சமூகமும், உலகமும் தற்போது இருப்பதை விட சிறந்த இடத்தில் இருப்பதை உறுதி செய்வதும் ஆகும். எனவே காவல்துறை தொடர்பான பல்வேறு அம்சங்களை பொறுத்து மாணவர்களிடையே பங்கேற்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு வரைதல், ஓவியம், சுவரொட்டி ஆகிய போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    "போதை பொருட்கள் நமக்கு வேண்டாம், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள், மூத்த குடிமக்கள்-நமது பொக்கிஷம் மற்றும் நமது பெருமை, சைபர் கிரைம் குற்றங்களில் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள், காவல்துறை வழங்கும் சேவைகள் பற்றிய எனது பார்வை" ஆகிய தலைப்புகளில் போட்டியானது நடக்கும். 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஒரு பிரிவாகவும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் என 3 பிரிவுகளாக போட்டி நடக்கும். ஒரு மாணவர் அதிகபட்சம் 3 தலைப்புகளில் பங்கேற்கலாம்.

    மாணவர்கள் அவரவர் விருப்பப்படி ஒன்றுக்கு மேற்பட்ட கருப்பொ ருள்களில் பங்கேற்கலாம். மாணவர்களின் படைப்பு களை பெறுவதற்கான கடைசி தேதி வருகிற 20-ந்தேதி ஆகும். மாணவர்களின் படைப்புகளை ஒவ்வொரு கல்லூரியும், பள்ளியும் அனைத்து ஓவியங்களையும் சேகரித்து அதனை ஒரு கவர் கடிதத்துடன் அனுப்ப வேண்டும். நேரடி யாகவோ அல்லது தபால் மூலமாகவோ நாகர்கோவி லில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்துக்கு அனுப்ப வேண்டும். 3 உறுப்பி னர்களை கொண்ட குழு மாண வர்களிடம் பெறப்பட்ட அனைத்து படைப்பு களையும் ஆய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்படும்.

    முடிவுகள் 25-ந்தேதி அறிவிக்கப்படும். சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்பு கள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும்.லும் சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்பு கள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும். மேலும் சந்தேங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 94981 03903 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் திறந்து வைத்தார்

    கன்னியாகுமரி:

    பள்ளி மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது போதை பொருள் சம்பந்தப்பட்ட ஏதேனும் தகவல் தெரிந்தாலோ, தகவல் அளிக்க குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

    அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் திறந்து வைத்தார். பின்னர் அவர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற் படுத்தினார்.

    அப்போது அவர் கூறுகையில், போதைப் பொருட்களை விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் 70103 63173 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டும், புகார் பெட்டி மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். மேலும் தகவல் அளிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றார்.

    • நம் சமூகம் போதைப் பழக்கம் இல்லாத சமூகமாக உருவாக வேண்டும். அதற்கு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
    • மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்கள் போல் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மற்றும் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மகளிர் கலைக்கல்லூரி இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சீர்காழி மணிகூண்டு பகுதியில் தொடங்கிய பேரணிக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அனிதாராதாகிருஷ்ணன், பள்ளி இயக்குனர் பிரவீன்வசந்த்ஜாபேஸ், டி.எஸ்.பி லாமெக், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங், கல்லூரி முதல்வர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கொடியசைத்து துவக்கி வைத்தார். 2000 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட பேரணி போதை பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து பதாகைகள் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் முக்கிய வீதிகள் வழியே பள்ளியை வந்தடைந்தனர். அங்கு நடைபெற்ற விழாவில் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் நிஷை, நம் சமூகம் போதைப் பழக்கம் இல்லாத சமூகமாக உருவாக வேண்டும் அதற்கு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்கள் போல் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் எனவும், தங்கள் வீடுகளை சேர்ந்தவர்களையும் சுற்றத்தாரையும் போதைப்பொருளிருந்து விடுவித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.இதில் பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள், கல்லூரி பேராசிரியைகள் பங்கேற்றனர்.

    ×