search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "avinashi lingeswarar temple"

    • கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெறவேண்டியும் அவினாசி பதிகம் பாடப்பட்டது
    • இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது நம்பி ஆரூர் அருளிய அவினாசிபதிகத்தை 10,008 முறை பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

    இதுகுறித்து அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் சுப்பிரமணிய சிவாச்சாரியார் கூறும்போது:-

    "சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், அதனைத் தொடர்ந்து அவினாசிபதிகத்தை 10 ஆயிரத்து 8 முறை பாராயணம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. புண்ணிய கைங்கரியத்தில் அனைத்து பக்தர்களும் சிவனடியார்களும் பங்கேற்று அனைத்து வித இன்னல்கள் நீங்கவும் விரைவில் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெறவேண்டியும் அவினாசி பதிகம் பாடப்பட்டது'' என்றார்.

    இதில் அவினாசி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • உண்டியல்களின் சீல்களை சேதப்படுத்தி இருந்தது.
    • உண்டியலை உடைத்து திருடலாம் என்று திட்டமிட்டு கோபுரத்துக்குள் ஏறி மறைந்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் காலை நடை திறந்தபோது அங்கு உள்ள 63 நாயன்மார் சாமி சிலைகளின் துணிகளை அகற்றியும், அதன் மேலிருந்த சிமெண்டால் கட்டப்பட்ட கலசம் போன்ற அமைப்புகளை உடைத்தும், உண்டியல்களின் சீல்களை சேதப்படுத்தியும் இருந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக கோவில் செயல் அதிகாரி மருதுபாண்டியன் அளித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் ராஜகோபுரத்தில் பதுங்கி இருந்த சேவூர் அருகே சாவக்காட்டுப்பாளையம் அரவங்காடு தத்தனூரை சேர்ந்த தையல் தொழிலாளி சரவணபாரதி (வயது 32) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவருக்கு பணம் தேவைப்பட்டதால் குறுக்கு வழியில் திருடலாம் என நினைத்து அவினாசி வந்த அவர், கடந்த 22-ந் தேதி மாலை கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டுவிட்டு, அங்கேயே அமர்ந்து அவர் உண்டியலை உடைத்து திருடலாம் என்று திட்டமிட்டு கோபுரத்துக்குள் ஏறி மறைந்துள்ளார்.

    பின்னர் இரவு 11 மணிக்கு கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி கோவிலுக்குள் இருந்த பித்தளை வேலை எடுத்து உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளார். இரவு முழுவதும் கோவிலுக்குள் இருந்தவர் அவ்வப்போது மனநிலைக்கு ஏற்ப இவ்வாறு செய்துள்ளார். கோவிலில் சாமி சிலைகள் எதுவும் சேதப்படுத்தப்படவில்லை. எந்த அரசியல் அமைப்பையும் சேர்ந்தவர் இல்லை. இந்த வழக்கை துரிதமான முறையில் விசாரித்து சம்பவம் நடந்த அன்றே வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நடராஜப்பெருமான் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு 16 திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது.
    • திருவாசகப் பாடல்களை சிவனடியார்கள் பாராயணம் செய்ய, மங்கள வாத்தியங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்றது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோவில் நாயன்மார்களால் பாடல் பெற்ற பெருமைக்குரிய தளமாகும். காசியில் வாசி அவிநாசி என்று காசிக்கு நிகராக போற்றப்படும் இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடல்வல்லானான நடராஜப்பெருமான் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் செய்து ஆனி திருமஞ்சன விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன விழா அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் இன்று காலை 10 மணி முதல் நடராஜப்பெருமான் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு விபூதி, நல்லெண்ணெய், சந்தனாதி தைலம், திருமஞ்சனம், மஞ்சள் பொடி, வில்வப்பொடி, பஞசாமிர்தம்,பால்,மஞ்சள் உள்ளிட்ட 16 திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் திருவாசகப் பாடல்களை சிவனடியார்கள் பாராயணம் செய்ய, மங்கள வாத்தியங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடராஜருக்கும்,சிவகாமி அம்மையாருக்கும் பல்வேறு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது. ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.

    • சண்டிகேசுவரர் சுவாமிக்கு ஆகம மற்றும் சிற்ப சாஸ்திரப்படி அழகிய சிற்ப வேலைப்பாடு களுடன் புதிய திருத்தேர் செய்யப்பட்டது.
    • இரண்டு மாதங்களுக்கு முன் வெள்ளோட்டம் நடைபெற்றது.

    அவினாசி :

    அவினாசி பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார்கள் வழிபாட்டுக்கு குழு அறக்கட்டளை சார்பாக, அவினாசி கோவில் சண்டிகேசுவரர் சுவாமிக்கு ஆகம மற்றும் சிற்ப சாஸ்திரப்படி அழகிய சிற்ப வேலைப்பாடு களுடன் புதிய திருத்தேர் செய்யப்பட்டது.

    இத்திருத்தேர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெள்ளோட்டம் நடைபெற்றது.இதையடுத்து திருத்தேர் அவினாசிலி ங்கேசுவரர் கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்றுச்சிறப்பு மிக்க கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு நேற்றுகாலை கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது கொடிமரத்திற்கு மெருகேற்றப்பட்டு புதுப்பொலிவு பெற்றது. நேற்று காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை மற்றும் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    பின்னர் கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வேதபாராயணம் நடந்தது. சிவாச்சாரியார்கள் முன்னிலையில் பக்தர்கள் கோவில் பிரகாரத்தை வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பெங்களூரு ஆகம பாடசாலை மாணவர்கள் வேத மந்திரங்களுடன் காலை 9 மணியளவில் அதிர்வேட்டுகள் முழங்க நாதஸ்வர இன்னிசையுடன் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா அடுத்த மாதம் 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    அவினாசியில் புகழ்பெற்ற அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கருணாம்பிகையுடன் அவினாசிலிங்கேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு திருமுருகநாதர் வருகை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 11-ந்தேதி சூரிய, சந்திர மண்டல காட்சிகள், 12-ந் தேதி பூத வாகனத்தில் சாமி எழுந்தருளல், அன்ன வாகன காட்சிகள், அதிகார நந்தி, கிளிவாகனம் காட்சிகள் ஆகியன நடக்கிறது. 13-ந் தேதி புஷ்ப பல்லக்கு, கைலாச வாகன காட்சியும் நடக்கிறது.

    பின்னர் 14 -ந் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடக்கிறது. 15-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 16-ந் தேதி அதிகாலை பூர நட்சத்திரத்தில் சாமிகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. 17-ந் தேதி காலை 7 மணிக்கு பெரிய தேர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டம் நடக்கிறது.

    18-ந் தேதி மாலை 4 மணிக்கு அம்மன் தேரோட்டமும், 19-ந் தேதி இரவு தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது. 20-ந் தேதி நடராஜர் தரிசனம், 21-ந் தேதி மஞ்சள் நீர் அபிஷேகம் நடக்கிறது. தேர்த்திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் செய்து வருகிறார். தேரோட்டத்தை முன்னிட்டு தேர்களை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    முன்னதாக தேர்த்திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்து அவினாசி தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாள் தலைமை தாங்கினார். அவினாசி போலீஸ் துணை சூப்பிரண்டு பரமசாமி, கோவில் செயல் அலுவலர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ராயம்பாளையம், புதுப்பாளையம், சன்னைமிராசுகள், பொதுப்பணித்துறை, மின் வாரியத் துறை, பேரூராட்சினர், சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

    தேரோட்டம் நடைபெறும் நான்கு ரதவீதிகளில் வைத்து பக்தர்களுக்கு சாப்பாடு கொடுக்கக் கூடாது. பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள் உபயோகப்படுத்தக் கூடாது. நான்கு ரதவீதிகளிலும் விளம்பர பதாகைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்னதானம் வழங்க நினைப்பவர்கள் தாசில்தாரிடமும், உணவு பாதுகாப்பு தூய்மை அலுவலரிடமும் முன்னதாகவே அனுமதி பெற வேண்டும்.

    தேர் வலம் வரும் வீதிகளில் சிறிது நேரம் கடைகளை அடைக்க கடை உரிமையாளர்களிடம் வேண்டுகோள் வைப்பது, அவினாசியில் தேர்த்திருவிழாவை அனைவரும் அமைதி காத்து ஒற்றுமையுடன் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
    ×