search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர்"

    • அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
    • பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்து வர் அணி சார்பில் நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசையும், கவர்ன ரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்ட த்தை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழி லாளர் நலத்துறை சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். 

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் இள. புகழேந்தி, சரவணன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, பொதுக்குழு உறுப்பி னர் குறிஞ்சிப்பாடி பால முருகன், ஒன்றிய செய லாளர்கள் பொறியாளர் சிவக்குமார், காசிராஜன், சுப்பிரமணியன், நாராயண சாமி, வெங்கட்ராமன், தனஞ்ஜெயன், விஜய சுந்தரம், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்கள் கார்த்திகேயன், கணேஷ் குமார், மருத்துவர் அணி டாக்டர் கலைக்கோவன், நகர மன்ற தலைவர்கள் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், சிவகுமார், சங்கவி முருகதாஸ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், பகுதி செய லாளர்கள் சலீம், நடராஜன், இளையராஜா, வெங்கடேசன், மாநகர துணை செயலாளர் சுந்தர மூர்த்தி , மண்டல குழு தலை வர்கள் பிரசன்னா, சங்கீதா செந்தில் முருகன், சங்கீதா, பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா குமார், துணை தலைவர் ராமர், பகுதி துணை செயலாளர்கள் லெனின், ஜெயசீலன், கார் வெங்கடேசன், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி நிர்வாகிகள் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கிளை, பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முன்னதாக காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கப்பட்டு இன்று மாலை 5 மணி வரை நடை பெற உள்ளது.

    • செல்போனில் சமூக வலைதளங்களை பார்ப்பதற்கு பலமணி நேரம் செலவிடுகிறோம்.
    • மனஅமைதி இல்லையென்றால் மற்றவர்களிடம் உள்ள தவறு மட்டுமே கண்ணுக்கு தெரியும்.

    திருப்பூர்:

    திருப்பூர் கணக்கம்பாளையம் வாஷிங்டன்நகரில் 300-வது கிராமிய சேவைத் திட்டம் தொடக்கவிழா நடைபெற்றது. விழாவில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    செல்போனில் சமூக வலைதளங்களை பார்ப்பதற்கு பலமணி நேரம் செலவிடுகிறோம். ஆனால் ஒரு அரைமணி நேரம் யோகாவுக்கு செலவிட நாம் தயாராக இல்லை. எந்த சூழ்நிலையிலும் மனதை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பதுதான் மனவளம். அதுவே மனநலம். மனஅமைதி இல்லையென்றால் மற்றவர்களிடம் உள்ள தவறு மட்டுமே கண்ணுக்கு தெரியும்.பணமும், பதவியும் வரும்போது இருக்க வேண்டியது பணிவு மட்டும்தான். பணிவுடன் இருப்பவர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் நன்மை கிடைக்கும் என்பதற்கு புதுவை அரசு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
    • பெண் குழந்தைகள் ரூ.50 ஆயிரத்துடன் பிறக்கிறது என்ற புரட்சியை புதுவை அரசு செய்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் சமையல் கியாஸ் மானியம், பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் வைப்பு தொகை, முதல் அமைச்சரின் விபத்து உதவி காப்பீடு திட்டம், ஏழை குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி என 4 புதிய திட்டங்கள் தொடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சபா நாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலை வகித்தார். கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திட்டங்களை தொடங்கி வைத்தனர்.

    பெண் குழந்தைகளுக்கான நிதி உதவித் திட்டம் பெருமை சேர்க்கும் திட்டமாகும். குடும்பத் தலைவிகளுக்கான நிதி உதவித் திட்டம் அறிவித்த பிற மாநிலங்கள் அதனை செயல்படுத்த முடியாத நிலையில் புதுவையில் அந்த திட்டத்தை செயல்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. அதுபோலத்தான் சமையல் கியாஸ் மானிய திட்டத்தை யும் அறிவித்த பிற மாநிலங்கள் முழுமையாகச் செயல்படுத்தவில்லை. ஆனால், புதுவையில் செயல் படுத்தப்பட்டுவிட்டது.

    புதுவை முதலமைச்சர், அமைச்சர்கள் எந்த புகழையும் எதிர்பாராமல் மக்களுக்கான சேவையை ஆற்றிவருவது பாராட்டுக்குரியது.

    மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் நன்மை கிடைக்கும் என்பதற்கு புதுவை அரசு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

    ஆகவே, புதுவையை சிறந்த மாநிலமாக மட்டுமல்லாது, அரசுத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தும் மாநிலமாகவும் மாற்றி வருகிறோம். ஆனால், சிலர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது சரியல்ல.

    மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதியாக ரூ.1400 கோடியும், ஜி.எஸ்.டி. வருவாயில் ரூ.3 ஆயிரம் கோடியும் கிடைத்திருப்பது நிர்வாகம் சிறப்பாக நடந்து வருவதையே காட்டுகிறது.

    பெண் குழந்தை பிறக்கிறது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலை மாறி புதுச்சேரியில் பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பமும் இறைவனை வேண்டிக் கொள்ளும் சூழ்நிலை புதுச்சேரியில் உருவாகி இருக்கிறது.

    ஒரு பெண்ணுக்கு உதவி செய்தோம் என்றால் அது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சென்று சேரும். அந்த அடிப்படையில் தான் முதலமைச்சர் ரங்கசாமி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

    அந்த காலத்தில் பெண் குழந்தைகளை பாரமாக நினைத்தனர். ஆனால் புதுவையில் தற்போது பெண் குழந்தைகள் ரூ.50 ஆயிரத்துடன் பிறக்கிறது என்ற புரட்சியை புதுவை அரசு செய்துள்ளது. அவர்களின் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுகிறது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி மேல் பெண் குழந்தை என்றால் தலை நிமிர்ந்து நடக்கலாம். பெண்களுக்கான திட்டங்கள் என்றால் நான் நிச்சயம் உறுதுணையாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
    • 2 நாள் சுற்றுப்பயணம்

    கன்னியாகுமரி,ஜூலை.24-

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கன்னியாகுமரிக்கு வருகிறார். அவர் இன்று (திங்கட்கிழமை) மதியம் விமானம் மூலம் தூத்துக் குடிக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தி னர் மாளிகைக்கு வருகிறார்.

    அங்கு கவர்னர் ஆர்.என். ரவிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் கவர்னர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்பு சன்செட் பாயிண்ட் கடற் கரைக்கு சென்று சூரியன் மறையும் காட்சியை கண்டு ரசிக்கிறார்.

    இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், நாளை (25-ந்தேதி) காலையில் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசிக்கிறார். அதன்பிறகு கடல் நடுவில் அமைந்துள்ள விவே கானந்தர் நினைவு மண்ட பத்துக்கு தனிப்படகில் சென்று தியானம் செய்கிறார்.

    பின்னர் விவேகானந்தபு ரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்லும் கவர்னர், அங்கு பாரத மாதா கோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை பார்வையிடுகிறார். தொடர்ந்து அவர் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவி லுக்கு சென்று தரிசனம் செய்கிறார். அதன்பிறகு அவர் கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி செல்கிறார்.

    கவர்னர் வருகையை யொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியா குமரி நகரப்பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர காண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரிக்கு வரக்கூ டிய அனைத்து வாகனங்களை யும் போலீசார் தீவிர சோதனை செய்தபிறகே அனுமதிக்கி றார்கள். கவர்னர் பயணிக்கக் கூடிய அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    கவர்னர் தங்கக்கூடிய அரசு விருந்தினர் மாளிகை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம், விவேகானந்தர் மண்டபம், விவேகானந்தா கேந்திரா, சுசீந்திரம் கோவில் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் முழுவது மாக போலீஸ் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டு உள்ளது.

    கன்னியாகுமரியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு களை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • கவர்னர் தமிழிசை, கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.
    • அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் 70 பேர் தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது அறிவித்தார்.

    அதன்மூலம் ஆண்டு தோறும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக் கல்லுரிகளில் அதிக அளவில் இடங்களை பெற்று வருகின்றனர்.

    இதேபோல் புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.) படிப்பதற்கு உள் இடஒதுக்கீடு வழங்க முதலமைச்சர் ரங்கசாமியிடம் அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

    இதைத்தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். மேலும் முதலமைச்சர் ரங்கசாமியிடமும் அவர் ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கிடு வழங்க அனுமதிக்குமாறு முதலமைச்சர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பரிந்துரை செய்து அதற்கான கோப்பை அனுப்பி வைத்துள்ளார்.

    அதே போல் 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி, அதை உடனடியாக நடைமுறைப்படுத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் இந்த கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இந்த இடஒதுக்கீட்டு முறை அமலுக்கு வந்தால் இந்த ஆண்டில் இருந்தே அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 37 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பிலும், 14 பேர் பல் மருத்துவ படிப்பிலும் சேர்ந்து பயனடையும் வாய்ப்பு உள்ளது. அரசுப்பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் 70 பேர் தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கவர்னர் ரவிக்கு தமிழக அரசு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
    • பசும்பொன் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக் கறிஞர் பசும்பொன் பாண்டி யன் கூறியதாவது:-

    பேரறிஞர் அண்ணா ஆட்டுக்கு தாடியும், நாட் டுக்கு கவர்னரும் தேவை யில்லை என்று தீர்க்கதரிசன மாக அன்றே உரைத்தார். அவரது கருத்துக்கு சான்றாக தமிழக கவர்னர் ரவியின் செயல்பாடு உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கவர்னர் எந்த சட்டப் பிரிவை பயன்படுத்தி நட வடிக்கை எடுத்துள்ளார் என்பதை தெளிவுபடுத்த அவர் தயாராக இல்லை.

    தமிழகத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆளுநர் மாளி கையில் அரசியல் நடத்தி குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று கவர்னர் ரவி நினைக்கிறார். அவரது இந்த மக்கள் விரோத செயல் பாடுகளுக்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆளுநர் மாளிகை அரசின் கட்டுப் பாட்டில் உள்ளது. எனவே தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் மாளிகைக்கு மின்சாரம், தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.போலீஸ் பாதுகாப்பையும் திரும்ப பெற வேண்டும்.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறும் கவர்னர் ரவிக்கு உடனடியாக தமிழக அரசு சரியான பாடம் புகட்ட வேண்டும். என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • கவர்னர் மாளிகையில் உள்ள பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த கவர்னர் தமிழிசை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மத்தியில் கேக் வெட்டினார்.
    • கவர்னருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது உருவம் கோலத்தில் வரையப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    புதுச்சேரி:

    கவர்னர் தமிழிசை பிறந்த நாள் விழா புதுவை கவர்னர் மாளிகையில் கொண்டாடப்பட்டது.

    கவர்னர் மாளிகையில் உள்ள பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த கவர்னர் தமிழிசை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மத்தியில் கேக் வெட்டினார். கவர்னருக்கு புதுவை தலைமை செயலாளர் ராஜுவர்மா மற்றும் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து தெலுங்கானா மாநிலம் உதய நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்ற கண்கவர் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை கவர்னர் தமிழிசை ரசித்து பார்த்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னுடைய செல்போன் காலர் டியூன் பாடலான ''எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு'' என்ற பாடலை எடுத்து தெலுங்கானா மாணவர்கள் நடனமாடினர்.

    ''ஆடுவோமே பள்ளு பாடுவோமே'' என்ற பாரதியார் பாடலை எடுத்தும் பாடினர்.

    தெலுங்கானா ராஜ்பவனில் தமிழ் ஒலித்தது. இதனைத்தான் பிரதமர் விரும்புகிறார். தெலுங்கானா மாநில உதய தினம் எல்லா மாநிலங்களிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது.

    எல்லா மாநில கவர்னர்களும் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எப்படி தெலங்கானா உதய தினமும், உங்களுடைய பிறந்த தினமும் ஒன்றாக அமைந்தது என்று கேட்டனர். அது இறைவனின் சித்தம் என்று நான் சொன்னேன்.

    தெலுங்கானாவில் இன்னும் அரசியல் இருக்கிறது. அங்கு உதய தினத்தை பெரிய விழாவாக கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்கள் கவர்னரை அழைப்பதில்லை. அதைப்பற்றி நானும் கவலைப்படுவதில்லை.

    கவர்னரை அழைக்கமாட்டார்கள், ஆனால் அதே கட்சி தான் ஜனாதிபதியை ஏன் அழைப்பதில்லை என்று கேள்வி கேட்பார்கள்.

    அப்படியானால் இதில் எவ்வளவு மாறுபாடுகள், அரசியல் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவுக்கு அரசியலமைப்பு தலைவரை அழைக்கவில்லை. ஆகவே விழாவுக்கு வரவில்லை என்பார்கள். ஆனால் அவர்கள் அரசியலமைப்பு தலைவரை எந்த நிகழ்வுக்கும் அழைக்கமாட்டார்கள்.

    இதில் அரசியல் இருக்க கூடாது. எல்லாவற்றிலும் பரந்த மனப்பான்மை இருக்க வேண்டும். அதில் எனக்கு ஒரு சதவீதம் கூட கவலையில்லை. தெலுங்கானாவில் 2 அரசு நடைபெறவில்லை.

    மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசு எவ்வாறு எதிர்கொள்ள போகிறது என்பதை நாம் பார்க்கின்றோம். புதுவையை பொருத்தவரையில் நமக்கான தண்ணீர் எந்தவித்திலும் குறைய கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். எதிர்கட்சியாக இருக்கும்போது ஒருவகையாகவும், ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு வகையாகவும் அவர்கள் பணியாற்றுகின்றனர்.

    ஒருவேலை மாற்று கட்சியினரிடம் இருந்து அணை கட்டுவது தொடர்பான அறிவிப்பு வந்திருந்தால் தமிழக அரசு பெரிய எதிர்ப்பை தெரிவித்திருப்பார்கள்.

    ஆனால் அதைப்பற்றி இப்போது வெளிக்காட்டாமல் இருக்கின்றனர். நமக்கென்று வரும்போது ஒரு அரசியலும், பிறருக்கென்று வரும்போது ஒரு அரசியலும் இல்லாமல் எப்போதும் ஒரே தன்மையான நிலைபாட்டில் இருக்க வேண்டும்.

    தெலுங்கானா முதலமைச்சருக்கு நான் கருத்து சொல்லும் அளவுக்கு இல்லை. மக்களுக்கு, நான் சொல்வது உங்களுக்கு நான், எனக்காக நீங்கள் என்று ஏற்கனவே பேசியுள்ளேன். ஆகவே அவர்கள் என்னோடு அன்போடு பயணிக்கிறார்கள். அவர்களின் மேம்பாட்டில் என்னுடைய பயணம் எப்போதும் தொடரும்.

    இவ்வாறு தமிழிசை கூறினார்.

    கவர்னருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது உருவம் கோலத்தில் வரையப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரும் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
    • வாழ்க்கைப் பணி மற்றும் கடலோர விழிப்புணர்வை மேம்படுத்தும் தெரு நாடகம் நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மாசுக்கட்டுப்பாடு குழும நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்துடன் இணைந்து கடற்கரையை தூய்மை படுத்தி, தரத்தை மேம்படுத்தவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    புதுவை காந்தி திடலில் ஜி20 கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியை கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அவர்களுடன் இணைந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரும் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில் வாழ்க்கை நோக்கம் குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை, மற்றும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் விழிப்புணர்வு நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர் .

    வாழ்க்கைப் பணி மற்றும் கடலோர விழிப்புணர்வை மேம்படுத்தும் தெரு நாடகம் நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் முத்தம்மா, உள்ளாட்சி துறை, நகராட்சி மற்றும் இத்துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தேசிய சேவை திட்டம், தேசிய மாணவர் படை பள்ளி கல்லூரி மாணவர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் தூய்மை நிகழ்ச்சி நடந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளச்சாராயம் உடம்புக்கு எவ்வளவு கேடு என்பதை, தயாரிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
    • புதுவையில் போதை பொருட்களாக இருந்தாலும், கள்ளச்சாராயமாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் சிக்கிம் மாநில விழா நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருத்தம் தரக்கூடிய விஷயம். இது விழுப்புரத்தில் நடந்த ஒரு கரும்புள்ளி என்றே சொல்ல வேண்டும். முதலில் இத்தகைய கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

    கள்ளச்சாராயம் உடம்புக்கு எவ்வளவு கேடு என்பதை, தயாரிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உயிர்வாழ்ந்தால்கூட கண்பார்வை போய்விடும். எவ்வளவு உயர்தர சிகிச்சை கொடுத்தாலும் சிலரை காப்பாற்ற முடியாத சூழ்நிலை மனதுக்கு வருத்தமான ஒன்று. எனவே கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    புதுவையில் போதை பொருட்களாக இருந்தாலும், கள்ளச்சாராயமாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இங்கிருந்து சென்றது, அங்கிருந்து சென்றது என சொல்லி நமது கடமை, பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது. கள்ளச்சாராயம் எந்த பகுதியிலிருந்து வந்தாலும், அதை கட்டுப்படுத்த வேண்டும்.

    கள்ளச்சாராயம் புதுவையில் இருந்து வந்தது என்று சொல்லி, சில பொறுப்புகள் எங்களுக்கு இல்லை என எந்த பகுதியை சேர்ந்தவர்களும் சொல்லிவிட முடியாது.

    இந்த நிகழ்வுக்கு அப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தாலும், அது கட்டுப்படுத்தப்படும். தவறான வழியில் தயாரிக்கப்படும் இத்தகைய போதை பொருட்கள் புதுவையில் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கொடைக்கானல் செல்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மதுரை வந்தார்.
    • பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று கொடைக்கானல் செல்கிறார். இதற்காக சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் இன்று மதியம் வருகிறார். பின்பு மதுரை விமான நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு கார் மூலம் புறப்பட்டு செல்கிறார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி வத்தலக் குண்டு வழியாக கொடைக்கா னலுக்கு மாலை 4.30 மணிக்கு செல்கிறார். எனவே மதியம் 2 மணி முதல் மாலை 4.30 வரை வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

    இன்று இரவு கொடை க்கானல் கோகினூர் மாளிகையில் தங்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை காலை 11 மணிக்கு அன்னைதெரசா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.மாலை 3 மணிக்கு பல்வேறு சுற்றுலா இடங்களை பார்வையிடுகிறார்.

    பின்னர் 16-ந்தேதி கொடைக்கானலில் இருந்து கார்மூலம் புறப்பட்டு மதுரை வரும் கவர்னர், இங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் வேறு எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அனைத்து வாகனங்களும் பழனி-பெருமாள்மலை வழியாக கொடைக்கா னலுக்கு செல்ல அறிவுறுத்த ப்பட்டுள்ளது. கவர்னர் வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளன. மதுரை வி மான நிலையம் மற்றும் கவர்னர் செல்லக்கூடிய சாலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    கொடைக்கானலில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன் (திண்டுக்கல்), பிரவீன்உமேஷ் ேடாங்கரே (தேனி), 2 ஏ.எஸ்.பி.க்கள், 10 டி.எஸ்.பிக்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கவர்னர் தங்கும் கோகினூர் மாளிகை, அன்னை தெரசா மகளிர்பல்கலைக்கழகம், சுற்றுலா இடங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளனர்.
    • தமிழகத்தில் ஆளுநராக இருக்கக்கூடிய ரவி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர முத்தையாபுரம் பகுதி தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் முத்தையாபுரம் பஜாரில் நடைபெற்றது. பகுதி செயலாளர் மேகநாதன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் தங்கசேகர், மனோகர், தமிழ்ச் செல்வி, முத்துராஜா, கமாலுதீன், தீபக்ராஜா, ஸ்டாலின், ஆரோக்கியராபின், அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும், மாநகராட்சி தெற்கு மண்டல சேர்மனுமான பாலகுருசாமி வரவேற்றார்.

    அமைச்சர் கீதாஜீவன்

    கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தலைமைக் கழக பேச்சாளர் போலீஸ் ஆல்பர்ட் தாஸ், மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினர். தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    ரூ. 2 லட்சம் கோடி முதலீடு

    தமிழகத்தில் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளனர். அந்த நிறுவனங்கள் உற்பத்திகளை தொடங்கும் போது தமிழ்நாட்டில் உள்ள படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

    நான் முதல்வன் திட்டத்தில் ஒரு மாணவன் என்ன படிக்க விரும்புகிறானோ? அதற்கு ஏற்ற தகுதியை உருவாக்க வழி செய்கிறது. தமிழகத்தில் ஆளுநராக இருக்கக்கூடிய ரவி குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அவர் பா.ஜ.க.வின் நிர்வாகி போல செயல்படுகிறார். சாதி, மதத்தின் பெயரால் ஓட்டுக்களை பெற பா.ஜ.க. திட்டம் போட்டுகிறது.

    தமிழகத்தில் அனைவரும் அனைத்து மதத்தையும் வழிபட உரிமை இருக்கிறது. இந்தியாவின் அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் சனாதன தர்மம் புதைக்கப்பட்டு விட்டது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டானின் தலைமையில் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தை சின்னா பின்னமாக ஆக்கி வைத்திருந்தனர். அதனை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராகிய பின்னர் சீராக்கி 2 ஆண்டுகள் முடிந்து 3-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிருக்கிறார்.

    மாதம் ரூ. 1000

    படித்த மகளிருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமைதொகை செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் ஏழை- எளிய மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படு கிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் 2,617 பேர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் சிறப்பான முறையில் அனைத்து வகையான வளர்ச்சிபணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, சிங்கப்பூரைப் போல தூத்துக்குடியையும் மிகச்சிறந்த நகரங்கமாக உருவாக்க திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றார்.

    கூட்டத்தில் மாநகர தி.மு.க. கவுன்சிலர்கள் முத்துவேல், விஜயகுமார், ராஜதுரை, சுயம்பு, பச்சிராஜ், மற்றும் மாவட்ட பிரதிநிதி சுரேஷ், வட்ட செயலாளர்கள் செல்வராஜ், நடேசன் டேனியல், கந்தசாமி, விஜயகுமார், பிரசாந்த், சக்திவேல், முள்ளக்காடு கிளை செயலாளர் பக்கிள்துரை, சில்வர் சிவா, பொட்டல்காடு கிளைச் செயலாளர் சந்தனராஜ், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர மகளிர் அணி அமைப்பா ளர் ஜெயக்கனி விஜயகுமார் நன்றி கூறினார்.

    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
    • திருஆரூரான் சர்க்கரை ஆலையை கண்டித்து கரும்பு விவசாயிகள் 140 நாட்களை தாண்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அரசியல்வாதி போல் செயல்படுகிறார்.

    மரபை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தஞ்சைக்கு வருகிற 24-ந் தேதி வரும் கவர்னரை கண்டித்து கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவோம்.

    திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையை கண்டித்து கரும்பு விவசாயிகள் 140 நாட்களை தாண்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்.

    வருகிற ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். எனவே உடனடியாக நீர் நிலைகளை தூர்வார வேண்டும். ரேஷன் கடைகளில் மண்எண்ணெய் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். தொழிலாளர் சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், கண்ணன், செந்தில், தமிழ்செல்வி, சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஜெயபால், மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    ×