search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழப்பம்"

    • பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி பெறுவது எளிது என கட்சித்தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர்.
    • தன்னை விலக்க கட்சியில் ஒரு சிலர் திட்டமிட்டு செயல்படுவதாக நமச்சிவாயம் கருதுகிறார்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழாவில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதல்- அமைச்சருமான ரங்கசாமி, இதனை அறிவித்தார். ஆனால் பா.ஜனதா வேட்பாளர் யார்? என்பதில் தொடர்ந்து இழுபறியாக உள்ளது.

    புதுச்சேரி பா.ஜனதா நிர்வாகிகள், பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி பெறுவது எளிது என கட்சித்தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர்.

    அதேநேரத்தில் புதுச்சேரி அரசியலில் இருந்து தன்னை விலக்க கட்சியில் ஒரு சிலர் திட்டமிட்டு செயல்படுவதாக நமச்சிவாயம் கருதுகிறார்.

    அதோடு புதுச்சேரி அரசியலில் தொடரவும் அவர் விரும்புகிறார். இதனை கட்சித்தலைமையிடமும் தெரிவித்து, தான்போட்டியிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

    அதேநேரத்தில் கட்சி யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவரை வெற்றி பெறச்செய்வது தனது பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், புதுச்சேரி கவர்னர் தமிழிசை, பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ., மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ. ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏற்கும் வேட்பாளரை அறிவிப்பது என பா.ஜனதா கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

    இதற்காக முதலமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளனர். தற்போது பரிசீலனையில் உள்ள 4 பேரும் புதுச்சேரியில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை. அதேநேரத்தில் வெளிமாநில வேட்பாளரை நிறுத்துவதற்கு முதல்-அமைச்சர் ரங்க சாமியும், புதுச்சேரி பா.ஜனதாவினரும் சம்மதிப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இதனால் பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் தொடர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    • மின் தடை அறிவிப்பால் தொழிலாளர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • மின்தடை ரத்து செய்த விபரத்தை முறையாக பொது மக்களுக்கு தெரிவிக்கவில்லை.

    புளியங்குடி:

    புளியங்குடி பகுதியில் நேற்று (2-ந்தேதி) மின்வினியோகம் ரத்து செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி தொழிற் கூடங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்பினரும் மின்தடைக்கு ஏற்ப தங்களது பணிகளை மாற்றி அமைத்துக் கொண்டனர். மேலும் தொழிலாளர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று புளியங்குடி பகுதியில் மின் தடை செய்யப்படவில்லை. இதனால் தொழிலாளிகளுக்கு விடுமுறை அளித்திருந்த தொழிற் கூடங்கள், தங்களது பணிகளை மாற்றி அமைத்திருந்த தொழிலாளிகள், விவசாய நிலத்தில் நீர் பாசனத்தை மாற்றி அமைத்து இருந்த விவசாயிகள் மற்றும் இல்லத்தரசிகள் கடும் குழப்பத்திற்கு ஆளா னார்கள். மின்தடை குறித்து அறிவிப்பு வெளியிட்ட மின்வாரியம், அதனை ரத்து செய்த விபரத்தை முறையாக பொது மக்களுக்கு தெரிவிக்கவில்லை. மேலும் ஒரு சில தொழிற்கூடங்களுக்கும் தொழிலாளிகளுக்கு மட்டும் மின் தடை இல்லை என்ற தகவலை தெரியப்படுத்தி மின்வாரிய ஊழியர்கள் பாரபட்சம் காட்டியுள்ளதாக பெரும்பாலானோர் புகார் கூறினர்.

    இதேபோல் இதற்கு முன்பும் மின்வாரியத்தின் மின்தடை அறிவிப்பில் குளறுபடி நடந்துள்ளது. மின்தடை அறிவிப்பு வெளியிடுவதும், பின்னர்

    ரத்து செய்வதும் புளிய ங்குடி பகுதியில் வாடி க்கையான ஒன்றாகி விட்டது. எனவே இனிவரும் நாட்களில் மின்தடை குறித்து அறிவிக்கும் முன்னரே, மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் மற்றும் நிர்வாக காரணங்களை ஆராய்ந்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழகத்தில் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளனர்.
    • தமிழகத்தில் ஆளுநராக இருக்கக்கூடிய ரவி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர முத்தையாபுரம் பகுதி தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் முத்தையாபுரம் பஜாரில் நடைபெற்றது. பகுதி செயலாளர் மேகநாதன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் தங்கசேகர், மனோகர், தமிழ்ச் செல்வி, முத்துராஜா, கமாலுதீன், தீபக்ராஜா, ஸ்டாலின், ஆரோக்கியராபின், அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும், மாநகராட்சி தெற்கு மண்டல சேர்மனுமான பாலகுருசாமி வரவேற்றார்.

    அமைச்சர் கீதாஜீவன்

    கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தலைமைக் கழக பேச்சாளர் போலீஸ் ஆல்பர்ட் தாஸ், மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினர். தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    ரூ. 2 லட்சம் கோடி முதலீடு

    தமிழகத்தில் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளனர். அந்த நிறுவனங்கள் உற்பத்திகளை தொடங்கும் போது தமிழ்நாட்டில் உள்ள படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

    நான் முதல்வன் திட்டத்தில் ஒரு மாணவன் என்ன படிக்க விரும்புகிறானோ? அதற்கு ஏற்ற தகுதியை உருவாக்க வழி செய்கிறது. தமிழகத்தில் ஆளுநராக இருக்கக்கூடிய ரவி குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அவர் பா.ஜ.க.வின் நிர்வாகி போல செயல்படுகிறார். சாதி, மதத்தின் பெயரால் ஓட்டுக்களை பெற பா.ஜ.க. திட்டம் போட்டுகிறது.

    தமிழகத்தில் அனைவரும் அனைத்து மதத்தையும் வழிபட உரிமை இருக்கிறது. இந்தியாவின் அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் சனாதன தர்மம் புதைக்கப்பட்டு விட்டது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டானின் தலைமையில் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தை சின்னா பின்னமாக ஆக்கி வைத்திருந்தனர். அதனை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராகிய பின்னர் சீராக்கி 2 ஆண்டுகள் முடிந்து 3-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிருக்கிறார்.

    மாதம் ரூ. 1000

    படித்த மகளிருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமைதொகை செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் ஏழை- எளிய மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படு கிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் 2,617 பேர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் சிறப்பான முறையில் அனைத்து வகையான வளர்ச்சிபணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, சிங்கப்பூரைப் போல தூத்துக்குடியையும் மிகச்சிறந்த நகரங்கமாக உருவாக்க திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றார்.

    கூட்டத்தில் மாநகர தி.மு.க. கவுன்சிலர்கள் முத்துவேல், விஜயகுமார், ராஜதுரை, சுயம்பு, பச்சிராஜ், மற்றும் மாவட்ட பிரதிநிதி சுரேஷ், வட்ட செயலாளர்கள் செல்வராஜ், நடேசன் டேனியல், கந்தசாமி, விஜயகுமார், பிரசாந்த், சக்திவேல், முள்ளக்காடு கிளை செயலாளர் பக்கிள்துரை, சில்வர் சிவா, பொட்டல்காடு கிளைச் செயலாளர் சந்தனராஜ், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர மகளிர் அணி அமைப்பா ளர் ஜெயக்கனி விஜயகுமார் நன்றி கூறினார்.

    • பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் கூறுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
    • எங்கள் கூட்டணியின் நோக்கமே தமிழகத்தில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான்.

    சிவகாசி

    விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் சிவகாசி அருகே நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தில் சிவகாசி, திருத்தங்கல் ெரயில் நிலையங்களை சேர்க்கவில்லை. சென்னை- கொல்லம் ெரயில் சிவகா சியில் நிற்பதில்லை. தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.

    ராகுல்காந்தி பிரதமர் ஆனால் சிவகாசி முன்னேற்றம் அடையும். சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.

    சிவகாசிக்கு பல சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த தயாராக இருந்தாலும், மத்திய அரசு நிதி அளித்தால் மட்டுமே சாத்தியமாகும். மாநகராட்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும்படியும் இது குறித்து மத்திய மந்திரிக்கு ரூ.250 கோடி நிதி கேட்டு மனு அளித்து 3 மாதங்களாகியும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    நிலம் எடுப்புப் பணி முடிந்தும் சிவகாசி ெரயில்வே மேம்பால பணிகள் தொடங்கும். 2019 தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முதலில் முன்மொழிந்தவர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். எங்கள் கூட்டணியின் நோக்கமே தமிழகத்தில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் கூறி மக்களை குழப்பி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. சிவகாசி ஒன்றியத்திற்குட்பட்ட ஏ.துலுக்கப்பட்டி கிராமத்தில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு வரும் கலையரங்க கட்டிடப் பணிகளைஆய்வு செய்தார்.

    ஊராம்பட்டியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எம்.பி. நிதியில் அமைக்கப் பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் மாணிக்கம்தாகூர் எம்.பி கேட்டறிந்தார்.

    விளாம்பட்டி ஊராட்சி காமராஜர்புரம் காலனியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளை ஆய்வு செய்த எம்.பி. பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.அப்போது ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் விவேகன்ராஜ், வக்கீல் குப்பையாண்டி, வட்டார தலைவர் தர்மராஜ், விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ×