search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் கீதாஜீவன்"

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
    • ஒருமித்த கருத்துகளுடன் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலை மையில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரிய சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    அனைத்து தரப்பினரின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு இருந்து வருகிறது. செய்த சாதனைகள் ஏராளம். இதை அனைத்து தரப்பினர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். ஒருமித்த கருத்துகளுடன் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைக்க ப்பட்டு உள்ளது. அந்த கூட்டணி அமைவதற்கு காரணமாக இருந்த நமது முதல்- அமைச்ச ரை, பா. ஜனதா கட்சியினரும், பிரதமர் மோடியும் தேவையி ல்லாத கருத்துக்களை எல்லாம் கூறி வருகின்றனர். என வே பாராளுமன்ற தேர்த லில் பா.ஜனதா அரசை வீழ்த்தும் வரை அனைவரும் தீவிர மாக பணியாற்ற வேண்டும்.

    உதயநிதிக்கு வரவேற்பு

    வருகிற 4-ந்தேதி (திங்கட்கி ழமை) தூத்துக்குடி மாவட்ட த்திற்கு வருகை தரும் மாநில இளைஞர் அணி செயலா ளரும், விளையாட்டு மேம்பா ட்டுத்துறை அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இதில் அனைத்து அணியை சார்ந்த நிர்வாகி களும், ஒன்றிய,நகர,பேரூர் கிளை வட்டச்செயலாளர்கள் அதிக அளவில் கலந்து கொ ள்வது மட்டுமின்றி, இளைஞர் அணியி னர் ஒவ்வொரு பகுதி யில் இருந்து அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறு முகம், ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்தி ரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பி னர்கள் கோட்டு ராஜா, கஸ்தூரிதங்கம், ராஜா, தலைமை செயற்குழு உறுப்பி னர் ராதா கிருஷ்ணன், கோவி ல்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய செய லாளர்கள், முருகேசன், சின்னப்பாண்டியன், ராதா கிருஷ்ணன், காசிவி ஸ்வநாதன், மாவட்ட அணி அமைப்பா ளர்கள் அந்தோணி ஸ்டாலின், மதியழகன், அன்பழகன், குபேர் இளம்பரிதி, வக்கீல் பால குருசாமி, துணை அமைப்பா ளர்கள் பிரதீப், நாகராஜன், ஜோசப் அமல்ராஜ், பிரபு, அந்தோணி கண்ணன், மாவட்ட பிரதிநிதி கள் சேர்ம பாண்டி யன், செந்தில்குமார், நாரா யணன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர் மற்றும் கருணா, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று மாலை மூப்பன்பட்டியில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்கின்றனர்.
    • வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு கயத்தாறு கிழக்கு ஒன்றியம் கே.குப்பனாபுரத்தில் குறைகள் கேட்கின்றனர்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் ஆகியோர் இன்றும், வருகிற 23-ந்தேதியும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிகின்றனர்.

    அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு கோவில்பட்டி மத்திய ஒன்றியம் மூப்பன்பட்டியிலும், 6.30 மணிக்கு கோவில்பட்டி மேற்கு ஒன்றியம் தோனுகால், 7 மணிக்கு சத்திரப்பட்டி, 8 மணிக்கு ஊத்துப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெறும் மக்கள்களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்கின்றனர்.

    இதேபோல் வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு கயத்தாறு கிழக்கு ஒன்றியம் கே.குப்பனாபுரத்திலும், 5 மணிக்கு தெற்கு வண்டானத்திலும், 6 மணிக்கு வடக்கு வண்டானத்திலும், 7 மணிக்கு கொப்பம்பட்டியிலும் நடைபெறும் மக்கள்களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறை களை கேட்டறிகின்றனர்.

    • 10 பேருக்கு சைக்கிள், 500 பேருக்கு வேஷ்டி, 500 பேருக்கு சேலை வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. முன்னாள் செய லாளர் என். பெரியசாமியின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் பெரியசாமியின் மனைவி எபனேசர், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, அசோக் பெரியசாமி, அவரது மருமகன்கள் ஜீவன்ஜேக்கப், சுதன்கீலர், மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    பின்னர் 10 பேருக்கு சைக்கிள், 500 பேருக்கு வேஷ்டி, 500 பேருக்கு சேலை, மற்றும் அசைவ உணவு பொதுமக்களுக்கு வழங்கி மரக்கன்று நட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

    மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், துணை மேயர் ஜெனிட்டா, முன்னாள் எம்.எல்.ஏ ராதா கிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பால குருசாமி, நிர்மல்ராஜ், அன்ன லட்சுமி, கலைச்செல்வி, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோ ரன்ஸ், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்;சலா, பொருளாளர் ரவீந்திரன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணைச்செய லாளர்கள் கீதா முருகேசன், கனக ராஜ், பிரமிளா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் ராமர், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சித்திரை செல்வன், நெசவாளர் அணி அமைப்பாளர் சங்கர நாராயணன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், துணை அமைப்பாளர் சுபேந்திரன், பகுதி செய லாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ஓன்றிய செயலாளர்கள் முருகேசன், காசி விஸ்வநாதன், சின்ன மாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதி கண்ணன், சின்ன பாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, இராஜா, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன்,

    தெற்கு மாவட்ட சார்பில் தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பா ளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணி,

    உள்பட பலர் மரியாதை செலுத்தி னார்கள்.

    தொழிலதிபர்கள் ராமசாமி, முருகேசன், டேவிட், வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன், நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோர் மரியாதை செய்தனர்.

    • தமிழகத்தில் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளனர்.
    • தமிழகத்தில் ஆளுநராக இருக்கக்கூடிய ரவி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர முத்தையாபுரம் பகுதி தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் முத்தையாபுரம் பஜாரில் நடைபெற்றது. பகுதி செயலாளர் மேகநாதன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் தங்கசேகர், மனோகர், தமிழ்ச் செல்வி, முத்துராஜா, கமாலுதீன், தீபக்ராஜா, ஸ்டாலின், ஆரோக்கியராபின், அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும், மாநகராட்சி தெற்கு மண்டல சேர்மனுமான பாலகுருசாமி வரவேற்றார்.

    அமைச்சர் கீதாஜீவன்

    கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தலைமைக் கழக பேச்சாளர் போலீஸ் ஆல்பர்ட் தாஸ், மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினர். தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    ரூ. 2 லட்சம் கோடி முதலீடு

    தமிழகத்தில் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளனர். அந்த நிறுவனங்கள் உற்பத்திகளை தொடங்கும் போது தமிழ்நாட்டில் உள்ள படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

    நான் முதல்வன் திட்டத்தில் ஒரு மாணவன் என்ன படிக்க விரும்புகிறானோ? அதற்கு ஏற்ற தகுதியை உருவாக்க வழி செய்கிறது. தமிழகத்தில் ஆளுநராக இருக்கக்கூடிய ரவி குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அவர் பா.ஜ.க.வின் நிர்வாகி போல செயல்படுகிறார். சாதி, மதத்தின் பெயரால் ஓட்டுக்களை பெற பா.ஜ.க. திட்டம் போட்டுகிறது.

    தமிழகத்தில் அனைவரும் அனைத்து மதத்தையும் வழிபட உரிமை இருக்கிறது. இந்தியாவின் அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் சனாதன தர்மம் புதைக்கப்பட்டு விட்டது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டானின் தலைமையில் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தை சின்னா பின்னமாக ஆக்கி வைத்திருந்தனர். அதனை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராகிய பின்னர் சீராக்கி 2 ஆண்டுகள் முடிந்து 3-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிருக்கிறார்.

    மாதம் ரூ. 1000

    படித்த மகளிருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமைதொகை செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் ஏழை- எளிய மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படு கிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் 2,617 பேர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் சிறப்பான முறையில் அனைத்து வகையான வளர்ச்சிபணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, சிங்கப்பூரைப் போல தூத்துக்குடியையும் மிகச்சிறந்த நகரங்கமாக உருவாக்க திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றார்.

    கூட்டத்தில் மாநகர தி.மு.க. கவுன்சிலர்கள் முத்துவேல், விஜயகுமார், ராஜதுரை, சுயம்பு, பச்சிராஜ், மற்றும் மாவட்ட பிரதிநிதி சுரேஷ், வட்ட செயலாளர்கள் செல்வராஜ், நடேசன் டேனியல், கந்தசாமி, விஜயகுமார், பிரசாந்த், சக்திவேல், முள்ளக்காடு கிளை செயலாளர் பக்கிள்துரை, சில்வர் சிவா, பொட்டல்காடு கிளைச் செயலாளர் சந்தனராஜ், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர மகளிர் அணி அமைப்பா ளர் ஜெயக்கனி விஜயகுமார் நன்றி கூறினார்.

    • நிகழ்ச்சிக்கு மாநகர துணைச் செயலாளர் கீதாமுருகேசன் தலைமை தாங்கினார்.
    • கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பொது மக்களுக்கு இளநீர், தர்பூசணி வழங்கினர்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என்று உத்தர விட்டிருந்தார். அதன்படி வடக்கு மாவட்ட தி.மு.க.விற்குட்பட்ட பகுதி முழுவதும் தண்ணீர் பந்தல் தொடர்ந்து திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்,மோர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் 14-வது வார்டுக்குட்பட்ட சின்னக்கண்ணுபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர துணைச் செயலாளரும், மாநகராட்சி பணிக்குழு தலைவருமான கீதாமுருகேசன் தலைமை தாங்கினார். தண்ணீர் பந்தலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலா ளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்து பொது மக்க ளுக்கு இளநீர், தர்பூசணி, நுங்கு, அன்னாசி பழம், மோர் மற்றும் பல்வேறு வகையான குளிர்பா னங்களை வழங்கி னார்கள்.

    நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, காசிராஜன், அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சிக்கு மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • அமைச்சர் கீதாஜீவன், மார்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் பொதுமக்களுக்கு மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்த லின்படி, கோடைகாலத்தில் இருந்து மக்களை காக்கும் பொருட்டில் நீர், மோர் பந்தலை விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மேற்கு ஒன்றிய செய லாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மேற்கு ஒன்றிய செய லாளர் அன்புராஜன், புதூர் நகர செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞான குருசாமி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட வார்டு செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பஸ் நிலையம்

    விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கும் விழா நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதாஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மோர், பழ ரசம், இளநீர், தண்ணீர் பழம் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், பேரூராட்சி தலைவர் அயன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, சமூக வலைத்தள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராள மான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • கயத்தாறு பேரூராட்சி பகுதியில் 100 நாள் வேலைத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
    • நீர் -மோர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    கயத்தாறு:

    தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். அதற்காக தொகுதி வாரியாக பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது.

    அதன்படி தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளரும், மாநில நெசவாளர் அணி செயலாருமான சொ. பெருமாள் ஏற்பாட்டில் கயத்தாறு ஒன்றிய பா.ஜ.க. அமைப்பு சாரா தொழிற் பிரிவுதுணைத் தலைவர் மாரியப்பன், அ.தி.மு.க. வக்கீல் பிரிவு மாநகர் மாவட்ட அவை தலைவரும், நெல்லை முன்னாள் அரசு குற்றவியல் கூடுதல் வக்கீலும், கயத்தாறு முஸ்லிம் ஜமாத் தலைவருமான பீர்முகைதீன், தொழிலதிபர்கள் இளங்கோவன், சீனிவாசன், செல்வராஜ் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 200 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். தொடர்ந்து அனைவரையும் அமைச்சர் கீதாஜீவன் சால்லை அணிவித்து வரவேற்றார்.

    தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படுகிறது. கயத்தாறு பேரூராட்சி பகுதியில் 100 நாள் வேலைத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

    இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நடைபெற உள்ள பாராளு மன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நாம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் தீவிர மாக பணியாற்ற வேண்டும்.

    நாம் அனைவரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினினுக்கு பக்கபல மாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செய லாளர் ஆனந்த சேகரன், வடக்கு மாவட்ட விளை யாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வக்கீல் பால குருசாமி, ஒன்றிய செய லாளர் சின்ன பாண்டியன், பகுதி செயலாளர் ராம கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி பிரபாகரன், சி.எஸ். ராஜா, மருத்துவ அணி அருண்குமார், முன்னாள் கவுன்சிலர் செந்தில் குமார் மற்றும் நிர்வாகிகள் கருணா, ஆல்பர்ட், மணி, ரவி உள்பட தி.மு.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கயத்தாறு

    கயத்தாறில் பேரூராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் நீர் -மோர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செய லாளர் சின்ன பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை அமைப் பாளர் ராஜதுரை, பேரூராட்சிமன்ற கவுன் சிலர்கள் நயினார் பாண்டி யன், செல்வகுமார், ஆதி லட்சுமி அந்தோணி, தேவி கண்ணன் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் சந்தனமணி, சேக் தாவீது கட்சி பிரமுகர்கள் கொம்பையா பாண்டியன், ராஜாபுதுக்குடி சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திராவிட மாடல் ஆட்சியில் எல்லா நன்மைகளும் மக்களுக்கு கிடைக்கின்றன.
    • ஜூன் 3-ந் தேதிக்குள் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை முடிக்க வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ் தலைமையில், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தூத்துக்குடி தொகுதியில் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். அதற்கு அனைவரும் தங்களது பகுதியில் வீடு, வீடாக சென்று தினமும் 1மணி நேரமாவது கட்சிக்கு உழைக்க வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் உறுப்பினர்களை சேர்க்க லாம்.

    தி.மு.க. ஆட்சி வந்த பின்பு முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை வைத்து பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்களும் பல்வேறு தரப்பினரும் முன் வைக்கின்றனர். செய்து கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் அதில் உள்ள குறைகளையும், கோரிக்கைகளையும் என்னிடமோ அல்லது மேயரி டமோ தெரியப்படுத்துங்கள்.

    திராவிட மாடல் ஆட்சியில் எல்லா நன்மைகளும் மக்களுக்கு கிடைக்கின்றன. சாதி, மதம் கிடையாது. சட்டமன்றத்தில் கவர்னர் தெரிவித்த கருத்துக்கு உடனே எதிர்ப்பு தெரிவித்து நம்முடைய உரிமையை முதல்-அமைச்சர் பாது காத்தார். மற்ற கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் கவர்னருக்கு கண்டனம் தெரிவித்தனர்.கொள்கை உணர்வோடு நாம் இருக்க வேண்டும்.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஜூன் 3-ந் தேதிக்குள் நமது மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை முடித்துகொடுக்க வேண்டும். பூத் கமிட்டியை வரும் 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

    அதில் இளைஞர்கள் பெண்கள் இடம் பெற வேண்டும். வட்டச் செயலாளர்கள் வட்டப்பிரதி நிதிகள் தான் அந்த பகுதியில் தி.மு.க. வளர்ச்சிக்கு துணையாக இருந்து செயல் படக்கூடியவர்கள்.

    தி.மு.க.வில் 23 அணிகள் உள்ளன. அதற்கு தகுந்த நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து தரவேண்டும். அதை முறையாக தலைமை கழகம் அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவத்தை வழங்கினார்.

    கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளரும், மாநில நெசவாளர் அணி செயலாளருமான பெருமாள், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைசெயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜான் அலெக்சாண்டர், மாநகர துணை செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட அணி நிர்வாகிகள் மதியழகன், அந்தோணி ஸ்டாலின், அபிராமிநாதன், அன்பழகன், கஸ்தூரிதங்கம், மோகன் தாஸ் சாமுவேல், ஜெபசிங், பிரதீப், பிரபு, ஜேசையா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வக்குமார், சேர்மபாண்டி, சக்திவேல், செந்தில்குமார், மாநகர அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் கீதாஜீவனிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
    • கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்று அமைச்சர் கீதாஜீவன் உறுதியளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே வாட்ச்அப் எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் பலர் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உள்ளிட்ட அலுவலர்கள் அதன் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கும் உடனுக்குடன் தெரிவித்து தீர்த்து வைக்கின்றனர்.

    இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல மாவட்டங் களை உள்ளடக்கிய ஆய்வு கூட்டம் நடத்தி மக்களின் கோரிக்கை மனுக்களை காகிதமாக எண்ணாமல் அவர்களின் வாழ்வா தாரத்தை முன்னேற்றும் ஆவணமாக கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில் மாநகராட்சி 38-வது வார்டுக்குட்பட்ட மீகா தெரு, ஜெயலானிதெரு, கோழி முடுக்கு சந்து, மற்றும் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டார்.

    அப்போது அவரிடம், வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

    அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஜெயலானி தெருவில் புதிய சாலை அமைக்க வேண்டும். கோழி முடுக்கு சந்து பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுத்து கழிநீர் செல்வதற்கு கால்வாய் வசதிகள் முறையாக செய்து கொடுக்க வேண்டும். புதிய தார்சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் போது பழைய சாலையை தூர்வாரி, பழைய சாலை அளவுபடியே அமைக்க வேண்டும். என்று கோரிக்கை வைத்தனர். முழுமையாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உங்களது கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்று உறுதியளித்தார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர மருத்துவ அணி அமைப் பாளர் அருண்குமார், கவுன்சிலர் மும்தாஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்ட செயலாளர்கள் கங்கா ராஜேஷ், சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாராயணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நாகராஜன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், வட்ட பிரதிநிதி பாஸ்கர், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, ஜெயராமன், கணேசன், திலகர், வைரமுத்து, மாரியப்பன், மற்றும் மணி, அரபி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதியோர் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு இந்த பணம் கிடைக்க வாய்ப்பு இல்லை.
    • லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் பெண்கள் இந்த உதவித்தொகையை எதிர்பார்க்க மாட்டார்கள்.

    சென்னை:

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த திட்டம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த திட்டம் குறித்து முதலமைச்சரின் தலைமையில் அவரது நேரடி கட்டுப்பாட்டில் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இந்த அரசாணை வெளியாகும் போது யார்-யாருக்கு, எத்தனை பேருக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என்பது தெரியவரும்.

    ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால் எவ்வளவு பேருக்கு கிடைக்கும் என்று சிலர் கணக்கு எல்லாம் போட்டு பார்க்கிறார்கள். எப்போதும் ஒரு திட்டத்தை தொடங்கும்போது தோராயமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பின்னர் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எனவே ரூ.7 ஆயிரம் கோடியை வைத்து இவ்வளவு பேருக்குதான் கிடைக்கும் என்று முடிவு செய்ய முடியாது.

    அரசாணை வெளியிட்ட பின்னர் ஒவ்வொருவரிடம் விண்ணப்பம் வாங்கி இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது தெளிவாக தெரியும். தேவை உள்ள இந்த ரூ.1,000 பணத்தால் பலன் பெறும் அனைத்து பெண்களும் இந்த திட்டத்தில் பயனடைவார்கள்.

    முதியோர் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு இந்த பணம் கிடைக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அவர்கள் ஒரு திட்டத்தில் பயன் அடைந்து வருகிறார்கள்.

    நான் எனக்கு இந்த உரிமைத்தொகையை கேட்க முடியுமா?. அதுபோன்று பெரிய பெண் தொழில் அதிபர்கள் கேட்க மாட்டார்கள். லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் பெண்கள் இந்த உதவித்தொகையை எதிர்பார்க்க மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. எனவே தகுதி உடைய பெண்களுக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளிர் தின விழாவிற்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.
    • நரிக்குறவர்களின் குழந்தைகள் பள்ளி செல்லும் நிலை தற்போது உருவாகியுள்ளது என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கீதா பள்ளியில் மாநகர தி.மு.க. மகளிர் அணி சார்பில் முதலாம் ஆண்டு மகளிர் தின விழா நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் பேச்சு போட்டி, கேள்வி- பதில், அறிவுத்திறன் போட்டி, மியூசிக்கல் சேர், பலூன் உடைத்தல், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு கள் வழங்கி பேசியதாவது:-

    கல்வி வேலைவாய்ப்பு களில் 30 சதவீதம் ஒதுக்கீடு, 8 மற்றும் பிளஸ்-2 வகுப்பு படித்தவர்களுக்கு திருமண உதவி, இப்போது பிளஸ்-2 வகுப்பிற்கு பின் கல்லூரி படிப்பை தொடர்வதற்கு புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது கட்டமாக தொடங்கி வைத்துள்ளார்.

    இதனால் 2 ஆண்டு காலம் கல்லூரி படிப்பை ஓதுக்கி வைத்தவர்கள் 13 ஆயிரம் பேர் கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளனர். கிராமப் புறங்களை சார்ந்தவர்களும் வளர்ச்சியடையும் வகையில் வங்கியில் வாங்கியுள்ள மகளிர் சுயஉதவி கடன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நரிக் குறவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதன் மூலம் அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.

    வாழ்க்கையில் தோல்வி வரத்தான் செய்யும். அதையும் கடந்து சாதனை படைக்க வேண்டும். ஜாதி, மதம், ஏழை- பணக்காரன் பாகுபாடு இல்லாமல் ஒன்றே குலம் ஓருவனே தேவன் என்ற கோட்பாடோடு பணியாற்றி நாம் பெற்ற ஆண், பெண் குழந்தைகளை பாரபட்சமின்றி நல்ல அறிவுரைகளை வழங்கி வளர்க்க வேண்டும். சத்தான உணவுகள் கொடுக்க வேண்டும் ஆடம்பரம் இல்லா மல் நாமும் அறிவுத்திறனை வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பா ளர் உமாதேவி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாநகர துணைச் செயலாளர் பிரமிளா, கவுன்சிலர்கள் ஜான்சி ராணி, கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் தனலட்சுமி, முத்துமாரி, ம.தி.மு.க. கவுன்சிலர் ராமுஅம்மாள், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் கவுன்சிலர் மும்தாஜ், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பார்வதி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணா தேவி, மகளிர் அணி நிர்வாகிகள் கவிதா தேவி, இந்திரா, பெல்லா, ரேவதி, சத்யா, கன்னிமரியாள், சந்தனமாரி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • காலை சிற்றுண்டி திட்டத்துக்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.
    • 18 வயதைக் கடந்து சிலர் காதல் திருமணம் செய்து கொள்வதும் குழந்தை திருமணம் என்றே கருதப்படுகிறது.

    சென்னை:

    செ‌ன்னை‌யி‌ல் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    1 முதல் 5-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார். மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

    முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன், ரூ.1,000 உறுதித்தொகை நேரடியாக மாணவியரின் வங்கிக்கணக்குக்கு செலுத்தப்படும். முதியோர் உதவித்தொகை வழங்கும் பணி இனி விரைவுபடுத்தப்படும். தாமதம் இருக்காது.

    காலை சிற்றுண்டி திட்டத்துக்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திட்டம் தொடங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் வழங்கப்படும்.

    18 வயதைக் கடந்து சிலர் காதல் திருமணம் செய்து கொள்வதும் குழந்தை திருமணம் என்றே கருதப்படுகிறது. குழந்தைத் திருமணத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    சத்துணவு முட்டை டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான தரவுகள், புகார்கள் ஏதும் அரசிடம் இல்லை.

    தொடர்ந்து டெண்டர் கோரும் நிறுவனங்கள் பட்டியலில் கிறிஸ்டி நிறுவனமும் உள்ளது.

    விலைப்பட்டியலை பொறுத்து டெண்டர் ஒதுக்கப்படும். சத்துணவு பணியாளர் நியமனம் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்.

    முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. முதியோர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதியோர்களுக்கான தனி கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது விரைவில் வெளியிடப்படும்.

    அடுத்த 5 ஆண்டுகளில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் தொலைநோக்குடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதியோர் இல்லங்களே கூடாது என்பதே அரசின் எண்ணம். ஆனால் சூழல் அப்படி இல்லை.

    தனியாக இருப்பது முதியோர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால், முதியோர் இல்லங்களைத் தேடி பலர் வருகின்றனர்.

    இவ்வாறு கீதாஜீவன் தெரிவித்தார்.

    ×