பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அரசை வீழ்த்தும் வரை தீவிரமாக பணியாற்ற வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. ஒருமித்த கருத்துகளுடன் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய போது எடுத்த படம்.
கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய போது எடுத்த படம்.
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலை மையில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரிய சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்துகொண்டு பேசியதாவது:-

அனைத்து தரப்பினரின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு இருந்து வருகிறது. செய்த சாதனைகள் ஏராளம். இதை அனைத்து தரப்பினர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். ஒருமித்த கருத்துகளுடன் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைக்க ப்பட்டு உள்ளது. அந்த கூட்டணி அமைவதற்கு காரணமாக இருந்த நமது முதல்- அமைச்ச ரை, பா. ஜனதா கட்சியினரும், பிரதமர் மோடியும் தேவையி ல்லாத கருத்துக்களை எல்லாம் கூறி வருகின்றனர். என வே பாராளுமன்ற தேர்த லில் பா.ஜனதா அரசை வீழ்த்தும் வரை அனைவரும் தீவிர மாக பணியாற்ற வேண்டும்.

உதயநிதிக்கு வரவேற்பு

வருகிற 4-ந்தேதி (திங்கட்கி ழமை) தூத்துக்குடி மாவட்ட த்திற்கு வருகை தரும் மாநில இளைஞர் அணி செயலா ளரும், விளையாட்டு மேம்பா ட்டுத்துறை அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இதில் அனைத்து அணியை சார்ந்த நிர்வாகி களும், ஒன்றிய,நகர,பேரூர் கிளை வட்டச்செயலாளர்கள் அதிக அளவில் கலந்து கொ ள்வது மட்டுமின்றி, இளைஞர் அணியி னர் ஒவ்வொரு பகுதி யில் இருந்து அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறு முகம், ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்தி ரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பி னர்கள் கோட்டு ராஜா, கஸ்தூரிதங்கம், ராஜா, தலைமை செயற்குழு உறுப்பி னர் ராதா கிருஷ்ணன், கோவி ல்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய செய லாளர்கள், முருகேசன், சின்னப்பாண்டியன், ராதா கிருஷ்ணன், காசிவி ஸ்வநாதன், மாவட்ட அணி அமைப்பா ளர்கள் அந்தோணி ஸ்டாலின், மதியழகன், அன்பழகன், குபேர் இளம்பரிதி, வக்கீல் பால குருசாமி, துணை அமைப்பா ளர்கள் பிரதீப், நாகராஜன், ஜோசப் அமல்ராஜ், பிரபு, அந்தோணி கண்ணன், மாவட்ட பிரதிநிதி கள் சேர்ம பாண்டி யன், செந்தில்குமார், நாரா யணன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர் மற்றும் கருணா, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com