search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் -அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்
    X

    விளாத்திகுளம் அருகே புதூரில் நீர், மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொது மக்களுக்கு வழங்கிய காட்சி. அருகில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

    விளாத்திகுளம் அருகே தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் -அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

    • நிகழ்ச்சிக்கு மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • அமைச்சர் கீதாஜீவன், மார்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் பொதுமக்களுக்கு மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்த லின்படி, கோடைகாலத்தில் இருந்து மக்களை காக்கும் பொருட்டில் நீர், மோர் பந்தலை விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மேற்கு ஒன்றிய செய லாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மேற்கு ஒன்றிய செய லாளர் அன்புராஜன், புதூர் நகர செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞான குருசாமி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட வார்டு செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பஸ் நிலையம்

    விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கும் விழா நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதாஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மோர், பழ ரசம், இளநீர், தண்ணீர் பழம் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், பேரூராட்சி தலைவர் அயன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, சமூக வலைத்தள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராள மான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×