search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி எம்.பி."

    • இன்று மாலை மூப்பன்பட்டியில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்கின்றனர்.
    • வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு கயத்தாறு கிழக்கு ஒன்றியம் கே.குப்பனாபுரத்தில் குறைகள் கேட்கின்றனர்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் ஆகியோர் இன்றும், வருகிற 23-ந்தேதியும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிகின்றனர்.

    அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு கோவில்பட்டி மத்திய ஒன்றியம் மூப்பன்பட்டியிலும், 6.30 மணிக்கு கோவில்பட்டி மேற்கு ஒன்றியம் தோனுகால், 7 மணிக்கு சத்திரப்பட்டி, 8 மணிக்கு ஊத்துப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெறும் மக்கள்களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்கின்றனர்.

    இதேபோல் வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு கயத்தாறு கிழக்கு ஒன்றியம் கே.குப்பனாபுரத்திலும், 5 மணிக்கு தெற்கு வண்டானத்திலும், 6 மணிக்கு வடக்கு வண்டானத்திலும், 7 மணிக்கு கொப்பம்பட்டியிலும் நடைபெறும் மக்கள்களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறை களை கேட்டறிகின்றனர்.

    • அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்திலும் இ-சேவை மையம் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார்.
    • விழாவில் நகராட்சி சேர்மன்கள் உமா மகேஸ்வரி சரவணன், விஜயா சவுந்திரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்திலும் இ-சேவை மையம் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி சங்கரன்கோவிலில் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இ-சேவை மையம் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு இ-சேவை மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணைச்செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, கடற்கரை, சேர்மத்துரை, ராமச்சந்திரன், வெற்றிவிஜயன், மதிமாரிமுத்து, பூசை பாண்டியன், கிறிஸ்டோபர், நகர செயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி, நகராட்சி சேர்மன்கள் உமா மகேஸ்வரி சரவணன், விஜயா சவுந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மு.க.ஸ்டாலினின் ஆட்சி என்பது கலைஞர் ஆட்சியின் நீட்சி என்றே சொல்லலாம்.
    • தி.மு.க.வை பா.ஜ.க. ஒரு போதும் அச்சுறுத்த முடியாது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் கரிவலம் வந்த நல்லூர் வடக்குரத வீதியில் நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் மதி மாரிமுத்து தலைமை தாங்கினார்.

    மோகன்குமார், அழ கையா ரவி, ஸ்தோவான், சண்முகத்தாய், ஈஸ்வரன், தங்கவேல், முருகேசன், மாரியப்பன், கனகசபை , கருணாநிதி முத்துக்குமார வேல் , பத்மநாபன், பஞ்சாயத்து தலைவர்கள் தினேஷ் சரவண பெருமாள் மற்றும் கார்த்தி, மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் தேவா என்ற தேவதாஸ் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் யூ.எஸ்.டி. சீனிவாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., முன்னாள் அமை ச்சர் தங்கவேலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தனது வாழ்நாள் முழுவதும் பொது மக்களுக்காகவே வாழ்ந்தவர் கலைஞர். தமிழ்நாட்டில் மக்களுக்காக வாழ்ந்த தலைவர் கலைஞர். 2 தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கல்வியில் சாதனை புரிந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 மாணவர்களை அழைத்து பாராட்டும் பொழுது அவர்கள் கலைஞரால்தான் எங்கள் பெற்றோர்கள் படித்தார்கள். அதனால் தான் நாங்களும் படிக்கும் வாய்ப்பினை பெற்று இருக்கிறோம் என பெரு மிதத்துடன் தெரிவித்தனர். பள்ளிகளில் கணினி பாடத்தை அறிமுகப் படுத்தியவர் கலைஞர். அதனால் பல மாணவர்கள் கலைஞரால் உருவாக்கப்பட்ட டைட்டில் பார்க்கில் பணிபுரிந்து வாழ்க்கையில் முன்னேறி உள்ளனர். இன்றைய தலைமுறை இளைஞர்களும் கலைஞரால் பயன் பெற்றுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

    அதே வழியில் திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சி என்பது கலைஞர் ஆட்சியின் நீட்சி என்றே சொல்லலாம்.

    பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநில அரசுகளை அவர்கள் முடிந்தவரை தங்களிடம் உள்ள துறை களை ஏவி மாநில அரசுகளை விரட்டி யும், மிரட்டியும் வருகிறது. தி.மு.க.வை பா.ஜ.க. ஒரு போதும் அச்சுறுத்த முடியாது. 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிபவர்களுக்கு ஊதியம் முறை யாக வழங்கப்பட வில்லை. மேலும் தற்போது மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிரதமர் வெளிநாடு பயணங்கள் சென்று வருகின்றார்.

    மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளார்கள் என்பது உண்மை. தற்போது இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கட்சிகளை ஒருங்கி ணைத்து செயல்பட்டு வருகின்றார். சில தினங்க ளுக்கு முன்பு பாட்னாவில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தின் பலனாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதானி மற்றும் அம்பானிகள் போன்றவர்களுக்கு மட்டும் உள்ள பா.ஜ.க. ஆட்சியை அகற்றி சாதாரண மக்களுக்கும் பல்வேறு திட்டங்கள் கிடைக்க கூடிய மக்களாட்சியாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

    தமிழ்நாட்டின் துணை யோடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஒருங்கி ணைப்பில் கண்டி ப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும். இப்போதைய பா.ஜ.க. அரசு மாநிலங்களில் மக்களை பிரித்து வன்முறை களை தூண்டி விட்டு குளிர் காய நினைக்கின்றது . வரும் நாடாளுமன்ற தேர்தலில் சாதி, மதத்தால் அரசியல் செய்துவரும் பா.ஜ.க.வை அகற்றிவிட்டு மக்களுக்கான ஆட்சி அமைய அனைவரும் இதற் கான பணியை இப்பொ ழுதே தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து பயனாளி களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு,மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட அவை தலைவர் பத்மநாதன்,மாவட்ட துணை செயலாளர்கள் புனிதா, ராஜதுரை ,பொது க்குழு உறுப்பி னர்கள் பராசக்தி, வேல்சாமி பாண்டியன், மாரிச்சாமி, மகேஸ்வரி ,ஒன்றிய செயலாளர்கள்

    பூசைபாண்டியன் , கடற்கரை, கிறிஸ்டோபர், பெரிய துரை, பொன் முத்தையா பாண்டியன், ராமச்சந்திரன், சேர்ம துரை,நகர செயலாளர்கள் அந்தோணிராஜ், பிரகாஷ், மாவட்ட மகளிர் அணி தலைவர் அன்புமணி கணேசன்,மாவட்ட அணி அமைப்பா ளர்கள் காசி ராஜன், கிப்ட்சன்,சந்திரன் மற்றும் தொ.மு.ச. மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல் நெல்சன், மின்வாரிய தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன், வாழைக்காய் துரைப்பாண்டியன், ஒன்றிய இளைஞர் அணி யோகேஷ் குமார் ,டாஸ்மாக் நிர்வாகி கள் பெர்ணா ன்டோ ,மனோகரன், மணி, சிவாஜி, பிரகாஷ் , அன்சாரி, கணேஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மகளிர் அணி செயலாளர் சிவசங்கரி நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கல்வித் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
    • சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு, கனிமொழி எம்.பி. சான்றிதழ், கேடயங்கள் வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் மாணவ, மாணவிகளுடன் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

    கனிமொழி எம்.பி.

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஹரிகெங்காரம், ஆங்கிலத்துறைத் தலைவர் ராமபாரதி, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் யூ.எஸ்.டி. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இயற்பியல் துறை தலைவர் சிவக்குமார் வரவேற்றார். இதில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கும் இந்த வேளையில் இங்கு வந்து பேச வாய்ப்பளித்தது மிக மகிழ்ச்சியாக உள்ளது. கலைஞர் வாழ்க்கை என்பது மாணவ, மாணவிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது. திருவாரூர் மாவட்டம் திருக்குவளை என்ற கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக 5 முறையும், இந்தியா முழுவதும் அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைவராகவும் திகழ்ந்தவர் கலைஞர்.

    தனது கருத்துக்களை கையெழுத்து ஏடுகள் மூலம் தொடங்கி அனைவருக்கும் தெரியப்படுத்தியவர் கலைஞர். இன்று நமக்கெல்லாம் சமூக வலைத்தளங்கள் அதிகமாக வளர்ந்து விட்ட நிலையில், கலைஞரின் இளமைக் காலத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லாத நிலையில் கையெழுத்து மூலம் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் கலைஞர்.

    இதன் மூலமும், நாடகங்கள் மூலமும் தனது கருத்துக்களை தெரிவித்தும், ஜாதியால், பொருளாதாரத்தால் பின்தங்கி இருந்தவர்களை தன்னம்பிக்கை, உழைப்பு, பணி மூன்றும் இருந்தால் வெற்றி பெறலாம் என அனைவரும் அறியச் செய்தவர் கலைஞர். எனவே மாணவ, மாணவிகள் கலைஞரின் வரலாற்றை படித்துப் பார்த்தாலே தங்களுக்குள் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் தாமாகவே வந்து விடும்.

    மேலும் மாணவ, மாணவிகள் உயர்கல்வி துறையில் முன்னேற வேண்டும் என கல்வித்துறையில் பெரும் புரட்சி செய்தவர் கலைஞர். இன்று இந்தியாவிலேயே மருத்துவக் கல்லூரிகள், கலை கல்லூரிகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்பதை உருவாக்கியவர் கலைஞர். தனது கடைசி காலம் வரை நாட்டுக்காக உழைத்தவர் கலைஞர்.

    திராவிட மாடல்

    அவரது வழியில் தற்போது திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கல்வித் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார் என்பது உண்மை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு மாணவி, கனிமொழி எம்.பி.யிடம் உங்களுக்கு பிடித்த பெண் ஆளுமை யார் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி., பெண் ஆளுமை உள்ளவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். பெண்களுக்காக பெண்கள் மட்டும் தான் குரல் கொடுக்க வேண்டும் என்று இல்லாமல் பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமை கிடைக்க பாடுபட்ட தந்தை பெரியார் தான் பெண்களுக்கான ஆளுமையை உருவாக்கித் தந்தவர் என பதில் அளித்தார்.

    கல்லூரி வளர்ச்சி நிதி

    தொடர்ந்து மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். பின்னர் படிப்பில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயங்கள் வழங்கினார். அதனை தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, மாணவர்களுக்கு ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, மாணவிகளுக்கு புத்தகபை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதனைத் தொடர்ந்து மேல்நீதிநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை ஏற்பாட்டில் கல்லூரி வளர்ச்சி நிதியாக ரூ. 50,001 வழங்கப்பட்டது. முடிவில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை நன்றி கூறினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை துணை பொதுச்செயலாளர் கனிமொழி வழங்கினார்.
    • மாற்று கட்சியினை சார்ந்தவர்கள் கனிமொழி எம்.பி., முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் கழக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் பழங்குடியினர் பெண்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை துணை பொதுச்செயலாளர் கனிமொழி வழங்கினார்.

    மேலும் பல்வேறு மாற்று கட்சியினை சார்ந்தவர்கள் கனிமொழி எம்.பி., முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கனிமொழி எம்.பி., கூறுகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தை அச்சுறுத்தலாம் என எதிர்க் கட்சிகளின் கனவு பலிக்காது. மேலும் தமிழக ஆளுநருக்கு தமிழ்நாடு என்று அழைப்பதில் பயம். ஏனென்றால் தமிழ்நாடு என்று அழைப்பதால் தனித்துவம் பெற்றுவிடும் .எனவே தமிழகம் என்று அழைக்க வேண்டும் என கூறுகிறார். மேலும் தமிழ்நாடு அமைச்சரவையில் யார் யார் எல்லாம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஆளுநர் இல்லை. முடிவு செய்யும் அதிகாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மட்டும் தான் உள்ளது. அவ்வாறு ஆளுநர் முடிவு செய்ய நினைத்தால் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்யட்டும் என தெரிவித்தார்.

    நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், வெளிநாடு வாழ் தமிழ் நல உரிமை சங்க தலைவர் கார்த்திகேய சிவ சேனாதிபதி, மாநில மகளிர் அணி துணை செயலாளர் நாமக்கல் ராணி, தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர்,மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி, தாராபுரம் நகர அவைத்தலைவர் கதிரவன், தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகர் மன்ற தலைவரும் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளருமான கு. பாப்பு கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.வி.செந்தில் குமார், சந்திரசேகர், பழனிச்சாமி,சிவ செந்தில், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், நகர துணை செயலாளர்கள் கமலக்கண்ணன், தவ செல்வன், பேரூர் செயலாளர்கள் மக்கள் தண்டபாணி, கொளத்துப்பாளையம் துரைசாமி, கன்னிவாடி சுரேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அமுதா, துணை அமைப்பாளர்கள் ஹைடெக் அன்பழகன், ஆனந்தி,கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி மற்றும் ஸ்ரீதர், ராசாத்தி பாண்டியன்,கபடி சக்தி வேல் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதி அய்யப்பன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
    • திறப்பு விழாவிற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.

    கடையம்:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கடையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, கடையம் தெற்கு ஒன்றியம் சார்பாக அமைக்கப்பட்டிருந்த தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    விழாவிற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். விழாவில் கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன், கடையம் ஒன்றிய நிர்வாகிகள் சசிகுமார், புகாரி மீரா சாகிப், வின்சென்ட் பால், முல்லையப்பன் சுரேஷ், கோபி, கமல், முருகன், தமிழரசி, ரம்யா, ஆவுடை கோமதி, பிரமு, பிரபா, அந்தோணிசாமி,சதாம் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தோரணமலை விலக்கு அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.

    கடையம்:

    கடையம் வடக்கு ஒன்றியம் பெரும்பத்து ஊராட்சி மாதாபுரம் சோதனைசாவடி தோரணமலை விலக்கு அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது.

    கனிமொழி எம்.பி.

    மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளரும் கடையம் யூனியன் துணை சேர்மனுமான மகேஷ்மாயவன் வரவேற்றார். இதில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி, ஒன்றிய அவைத்தலைவர் ரவி, ஒன்றிய துணைசெயலாளர்கள் பிரமநாயகம், கஸ்தூரி சுடலைமணி, ஸ்டெல்லா முருகன், பொருளாளர் அஜிஸ், மாவட்ட பிரதிநிதிகள் மதிவாணன், ரவி சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர்கள் அற்புதராஜ், ஆதம் சுபைர், விவசாய அணி துணை அமைப்பாளர்கள் குமார், கருணாநிதி, விளையாட்டு மேம்பாட்டு அணி முத்தரசி, காளித்துரை, ஹிலால் பள்ளி செயலாளர் அகமது ஈசாக், ஒன்றிய கவுன்சிலர் பாலக செல்வி பாலமுருகன் மற்றும் ஊராட்சி தலைவர்கள் மதியழகன், ஜீனத்பர்வின் யாகூப், கிளை செயலாளர்கள் லெட்சுமணன், நவாஸ்கான், நிர்வாகிகள் ரவிசங்கர், பாலாஜி, அலி, முகம்மது நூர், ஆறுமுகம், குணா, கபடி மகேஷ், ராம்ராஜ், தளபதி மணி, காமாட்சி, ராஜசிவகணேஷ், முத்துகிருஷ்ணன், சங்கர்ராம், அஸ்லிம், சைமன்ஜோ, கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை கனிமொழி எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி உரையாற்றினார்.
    • நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்மாந்தை, வடக்கு செவல், கே.குமரெட்டி யாபுரம், எட்டயபுரம் உள்ளிட்ட இடங்களில் சமு தாய நலக்கூடம், அங்கன் வாடி மையம் மற்றும் பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

    தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி வளர்ச்சி திட்ட த்தின் கீழ் தலா ரூ. 5.50 லட்சம் மதிப்பீட்டில் மேல்மாந்தை, கே. குமரெட்டி யாபுரம் கிரா மத்தில் பயணியர் நிழற்குடை, கீழ விளாத்தி குளம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியம் 2021-22 திட்டத்தில் ரூ. 6 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை மற்றும் எட்டயபுரம் பேரூ ராட்சி 3, 15-வது வார்டு பகுதிகளில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மே ம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்ட ப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம், கனிமொழி எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி உரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி, மார்க் கண்டேயன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ், தாசில் தார்கள் ராமகிருஷ்ணன், மல்லிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், தங்கவேல், மாநில நெச வாளர் அணி செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, சின்னமாரிமுத்து, அன்புராஜன், நவநீத கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா கண்ணு, விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் நவநீத கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் நடராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளை ஞரணி துணை அமை ப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய குழு உறுப்பினர் முனியசாமி, மாவட்ட பிரதிநிதி பாண்டியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 10 பேருக்கு சைக்கிள், 500 பேருக்கு வேஷ்டி, 500 பேருக்கு சேலை வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. முன்னாள் செய லாளர் என். பெரியசாமியின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் பெரியசாமியின் மனைவி எபனேசர், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, அசோக் பெரியசாமி, அவரது மருமகன்கள் ஜீவன்ஜேக்கப், சுதன்கீலர், மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    பின்னர் 10 பேருக்கு சைக்கிள், 500 பேருக்கு வேஷ்டி, 500 பேருக்கு சேலை, மற்றும் அசைவ உணவு பொதுமக்களுக்கு வழங்கி மரக்கன்று நட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

    மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், துணை மேயர் ஜெனிட்டா, முன்னாள் எம்.எல்.ஏ ராதா கிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பால குருசாமி, நிர்மல்ராஜ், அன்ன லட்சுமி, கலைச்செல்வி, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோ ரன்ஸ், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்;சலா, பொருளாளர் ரவீந்திரன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணைச்செய லாளர்கள் கீதா முருகேசன், கனக ராஜ், பிரமிளா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் ராமர், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சித்திரை செல்வன், நெசவாளர் அணி அமைப்பாளர் சங்கர நாராயணன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், துணை அமைப்பாளர் சுபேந்திரன், பகுதி செய லாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ஓன்றிய செயலாளர்கள் முருகேசன், காசி விஸ்வநாதன், சின்ன மாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதி கண்ணன், சின்ன பாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, இராஜா, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன்,

    தெற்கு மாவட்ட சார்பில் தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பா ளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணி,

    உள்பட பலர் மரியாதை செலுத்தி னார்கள்.

    தொழிலதிபர்கள் ராமசாமி, முருகேசன், டேவிட், வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன், நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோர் மரியாதை செய்தனர்.

    • மக்களை அதிகமாக சந்திக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    • பொதுமக்கள் வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கனிமொழி எம்.பி பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. மாப்பிளையூரணி ஊராட்சி ராம்தாஸ் நகரில் ஊராட்சி தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    கிராமங்களில் மக்களை அதிகமாக சந்திக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பே கிராம சபை கூட்டங்களை நடத்தி மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊராட்சி தலைவர் சரவணக்குமார், ஊராட்சி வளர்ச்சிக்காக தீவிரமாக செயல்படுகிறார். அரசின் திட்டங்களை ஊராட்சிக்கு பெறுவதில் முழு கவனமுடன் உழைக்கிறார். என்னை சந்திக்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு திட்டங்களை கோரிக்கைகளாக வைப்பார். கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

    கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ்ராவ், வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, ஊராட்சி உதவி இயக்குனர் உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா மற்றும் அதிகாரிகள் ,அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜெயகுமார் நன்றி கூறினார். கூட்டுடன்காடு ஊராட்சி தலைவர் மாங்கனி தலைமையில்

    கீழ கூட்டுடன்காட்டு ஆலமரத்தடியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலர் கோமதி வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றினார். முள்ளக்காடு ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக ஊராட்சித் தலைவர் கோபிநாத்நிர்மல் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலர் சங்கர ராமசுப்பிரமணியன் வரவேற்று வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றினார்.

    கோரம்பள்ளம் ஊராட்சி பெரியநாயகிபுரத்தில் ஊராட்சித் தலைவர் செல்வபிரபா அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவர் பொன்மாரி செல்வராஜ் , ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் .ஊராட்சி செயலர் சீனிராசு வரவேற்று வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றினார்.

    இதேபோல் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டங்கள் குமரகிரி ஊராட்சித்தலைவர் ஜாக்சன் துரைமணி, மறவன்மடம் ஊராட்சித்தலைவர் லில்லிமலர், குலையன்கரிசல் ஊராட்சித்தலைவர் முக்கனி, கீழதட்டப்பாறை ஊராட்சித்தலைவர் பத்மா பொன்னுச்சாமி, அய்யனடப்பு ஊராட்சித்தலைவர் அதிஷ்ட கணபதி ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்கள் வாசித்து நிறைவேற்றபட்டது.

    • தூத்துக்குடியின் மாரத்தான், வாக்கத்தான் போட்டிகள் நடைபெற்றது.
    • போட்டியில் நிபந்தனைகளுக்கு உட்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பன்னாட்டு ஜூனியர் சேம்பர், தூத்துக்குடி ஹெர்குலேனியம் எலைட் இணைந்து 'போதைப் பொருள் எனக்கும் வேண்டாம் நமக்கும் வேண்டாம்' என்ற தலைப்பில் நம்ம தூத்துக்குடியின் பெருநடை என்ற பெயரில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் இன்று நடை பெற்றது. இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு போட்டிகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போட்டியில் நிபந்தனை களுக்கு உட்பட்ட ரூ. ஒரு லட்சம் அளவிலான பரிசுகளும், பதிவு செய்த அனைவருக்கும் டீ சர்ட், பதக்கம், சான்றிதழ், கிட்பேக் மற்றும் குளிர் பானங்கள் வழங்கப்பட்டன.

    • அடிக்கல் நாட்டு விழாவிற்கு கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
    • கனிமொழி எம்.பி. தன்னையும் நூலகத்தில் ஒரு புரவலராக இணைத்துக் கொண்டார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முழுநேர நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., சதன்திருமலை குமார் எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் வரவே ற்றார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நட்டு விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நூலகத்தில் தன்னையும் ஒரு புரவலராக இணைத்துக் கொண்டார்.

    இதில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யூ.எஸ்.டி. சீனிவாசன், பரமகுரு, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி சரவணன், புளியங்குடி விஜயா, தமிழ்நாடு அரசு கால மாற்ற குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபீர், லயன்ஸ் கிளப் ஆளுநர் அய்யாதுரை, பாரதி வாசகர் வட்டம் கவுரவ தலைவர் வெள்ளைச் சாமி என்ற செல்வம், பள்ளி மேலா ண்மை குழு உறுப்பினர் கவுன்சிலர் முத்துமாரி பிரகாஷ், பாரதி வாசகர் வட்டம் தலைவர் ஆசிரியர் சங்கர்ராம், வட்டார நூலகர் கணேசன், மாவட்ட துணை செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர் பெரிய துரை, நகர செய லாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணி சாமி, இளைஞர் அணி சரவணன் ஆசிரியர் நாரா யணன், நூலகர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார நூலகர் முருகன் நன்றி கூறினார்.

    ×