என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வக்ஃபு வாரிய திருத்த மசோதா: விவாதம் நடைபெற்றால், பங்கேற்று உறுதியாக எதிர்ப்போம்- கனிமொழி எம்.பி.
- வக்ஃபு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றால் அதில் பங்கேற்று எதிர்ப்பு தெரிவிப்போம்.
வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற பாஜக அரசு உறுதியாக உள்ளது. நாளை இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றால், நிச்சயம் அதை எதிர்ப்போம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கனிமொழி எம்.பி. கூறியதாவது:-
எங்களுடைய தலைவர் (மு.க. ஸ்டாலின்) தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். ஆகவே, இந்த மசோதாவை திமுக எதிர்த்துக் கொண்டு வருகிறது. இப்போதைக்கு பாராளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றால், அதில் பங்கேற்று, நிச்சயமாக மசோதாவை எதிர்ப்போம்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
மக்களவையில் முன்மொழியப்பட்ட வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா, பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.






