search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல்- அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்
    X

    தண்ணீர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்த காட்சி. அருகில் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் உள்ளனர்.

    தூத்துக்குடியில் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல்- அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

    • நிகழ்ச்சிக்கு மாநகர துணைச் செயலாளர் கீதாமுருகேசன் தலைமை தாங்கினார்.
    • கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பொது மக்களுக்கு இளநீர், தர்பூசணி வழங்கினர்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என்று உத்தர விட்டிருந்தார். அதன்படி வடக்கு மாவட்ட தி.மு.க.விற்குட்பட்ட பகுதி முழுவதும் தண்ணீர் பந்தல் தொடர்ந்து திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்,மோர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் 14-வது வார்டுக்குட்பட்ட சின்னக்கண்ணுபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர துணைச் செயலாளரும், மாநகராட்சி பணிக்குழு தலைவருமான கீதாமுருகேசன் தலைமை தாங்கினார். தண்ணீர் பந்தலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலா ளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்து பொது மக்க ளுக்கு இளநீர், தர்பூசணி, நுங்கு, அன்னாசி பழம், மோர் மற்றும் பல்வேறு வகையான குளிர்பா னங்களை வழங்கி னார்கள்.

    நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, காசிராஜன், அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×