search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கயத்தாறு"

    • கயத்தாறு பேரூராட்சி பகுதியில் 100 நாள் வேலைத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
    • நீர் -மோர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    கயத்தாறு:

    தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். அதற்காக தொகுதி வாரியாக பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது.

    அதன்படி தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளரும், மாநில நெசவாளர் அணி செயலாருமான சொ. பெருமாள் ஏற்பாட்டில் கயத்தாறு ஒன்றிய பா.ஜ.க. அமைப்பு சாரா தொழிற் பிரிவுதுணைத் தலைவர் மாரியப்பன், அ.தி.மு.க. வக்கீல் பிரிவு மாநகர் மாவட்ட அவை தலைவரும், நெல்லை முன்னாள் அரசு குற்றவியல் கூடுதல் வக்கீலும், கயத்தாறு முஸ்லிம் ஜமாத் தலைவருமான பீர்முகைதீன், தொழிலதிபர்கள் இளங்கோவன், சீனிவாசன், செல்வராஜ் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 200 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். தொடர்ந்து அனைவரையும் அமைச்சர் கீதாஜீவன் சால்லை அணிவித்து வரவேற்றார்.

    தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படுகிறது. கயத்தாறு பேரூராட்சி பகுதியில் 100 நாள் வேலைத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

    இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நடைபெற உள்ள பாராளு மன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நாம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் தீவிர மாக பணியாற்ற வேண்டும்.

    நாம் அனைவரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினினுக்கு பக்கபல மாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செய லாளர் ஆனந்த சேகரன், வடக்கு மாவட்ட விளை யாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வக்கீல் பால குருசாமி, ஒன்றிய செய லாளர் சின்ன பாண்டியன், பகுதி செயலாளர் ராம கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி பிரபாகரன், சி.எஸ். ராஜா, மருத்துவ அணி அருண்குமார், முன்னாள் கவுன்சிலர் செந்தில் குமார் மற்றும் நிர்வாகிகள் கருணா, ஆல்பர்ட், மணி, ரவி உள்பட தி.மு.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கயத்தாறு

    கயத்தாறில் பேரூராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் நீர் -மோர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செய லாளர் சின்ன பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை அமைப் பாளர் ராஜதுரை, பேரூராட்சிமன்ற கவுன் சிலர்கள் நயினார் பாண்டி யன், செல்வகுமார், ஆதி லட்சுமி அந்தோணி, தேவி கண்ணன் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் சந்தனமணி, சேக் தாவீது கட்சி பிரமுகர்கள் கொம்பையா பாண்டியன், ராஜாபுதுக்குடி சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெயக்குமார்-நித்தியா இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • வீட்டில் தனியாக இருந்த ஜெயக்குமார் விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள சன்னதுபுதுக்குடி கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 31). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி நித்தியா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் இதேபோல் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை யடுத்து கோபித்துக்கொண்டு வெளியே சென்று விட்டார்.

    வீட்டில் தனியாக இருந்த ஜெயக்குமார் விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சிறிது நேரம் கழித்து நித்தியா வீட்டிற்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கப்படாதால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நித்தியா கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜெயக்குமார் தூக்கில் தொங்கியவாறு பிணமாக கிடந்தார்.

    இதனையடுத்து கயத்தாறு போலீசாருக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சப்- இன்ஸ்பெக்டர் ஆண்டோணி தீலீப் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முகாமிற்கு பஞ்சாயத்து தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார்.
    • ஏப்ரல் மாதம் அய்யானார்ஊத்து கிராமத்தில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெறவுள்ளது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே அய்யனார்ஊத்து கிராமத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார்.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து, பொது சுகாதாரம் பற்றியும் வாழ்வில் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நெறிமுறைகள் பற்றி எடுத்துக் கூறினார். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசநோய் அறிகுறிகள், பரவும் தன்மை குறித்து எடுத்து கூறினார். மேலும் ஏப்ரல் மாதம் அய்யானார்ஊத்து கிராமத்தில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலமாக காசநோய் கண்டறியும் முகாம் நடைபெறவுள்ளது. ஆகவே பொதுமக்கள் காசநோய் முகாமில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.

    சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் குறித்து பேசினார். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன் கிராம சுகாதார செவிலியர் விஜயலட்சுமி, இடைநிலை சுகாதார பணியாளர் பிரேமா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன், பஞ்சாயத்து தலைவர் பால்பாண்டி ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

    • மருதராஜ், கன்னியம்மாளை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • ஆத்திரம் அடைந்த மருதராஜ், கன்னியம்மாளை தாக்கியதாக தெரிகிறது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மருதராஜ் (வயது 32). தொழிலாளி. இவர் அதே ஊரைச் சேர்ந்த கன்னியம்மாள் (25) என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    கருத்து வேறுபாடு

    இவர்களின் திரும ணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் மருதராஜும், கன்னியம்மா ளும் தனிக்குடித்தனம் சென்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    இதில் கன்னியம்மாள் கோபித்து கொண்டு அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மருதராஜ், கன்னியம்மாளை தாக்கியதாக தெரிகிறது.

    கைது

    இதுகுறித்து கன்னியம்மாள் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். இதுகுறித்து விசாரணை செய்வதற்காக மருதராஜை போலீசார் அழைத்துள்ளனர். அப்போது அவர் தனது மனைவியை தாக்கும் நோக்கில் கத்தியை மறைத்து வைத்திருந்தார்.

    இதையறிந்த கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் பால் துரிதமாக செயல்பட்டு மருதராஜை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த கத்தியை கைப்பற்றினார். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மருதராஜை கைது செய்தனர்.

    • கலெக்டர் செந்தில் ராஜ் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார்.
    • கோமாரி நோய் குறித்து பயனாளிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.

    கயத்தாறு:

    கயத்தாறு யூனியன் தெற்கு மயிலோடை பஞ்சாயத்திற்கு உட்பட்ட வடக்கு மயிலோடை கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக கால்நடை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். இதில் 70 -க்கும் மேற்பட்ட பசுமாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.முகாமில் கோமாரி நோய் பற்றியும் அந்த நோயின் அறிகுறிகள், நோயின் பராமரிப்பு, தடுக்கும் முறைகள் குறித்து பயனாளிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.

    இதில் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவராஜ், துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் மருத்துவர் சங்கரநாராயணன், கோவில்பட்டி கோட்ட உதவி இயக்குனர் விஜயஸ்ரீ, மருத்துவர்கள் மனோஜ், குமார் பெரியசாமி, தெற்கு மயிலோடை பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீ வள்ளி செந்தில் வேல், துணைத் தலைவர் முருகன், மருத்துவ குழுவினர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளையும் கயத்தாறு கால்நடை மருத்துவர் மனோஜ் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • ராதாகிருஷ்ணன் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.
    • படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை மீட்ட போலீசார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் ( வயது 45). இவர் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளராக தொகுப்பூதிய அடிப்படை யில் பணியாற்றி வந்தார்.

    இவர் திருமலாபுரம் ஜக்கம்மாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை மீட்ட போலீசார் அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலி

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ராதாகிருஷ்ணனுக்கு வளர்மதி என்ற மனை வியும், மது(8), நிகிதா (6), பவித்ரா (4) ஆகிய 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    • பவள விழாவினை முன்னிட்டு கயத்தாறு புதிய பஸ் நிலையத்தில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டது.
    • மாவட்ட துணை தலைவர் மைதீன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

    கயத்தாறு:

    கயத்தாறில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு பவள விழாவினை முன்னிட்டு கயத்தாறு புதிய பஸ் நிலையத்தில் மாநில பொது செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அபூபக்கர் கட்சிக்கொடியினை ஏற்றினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை தலைவர் மைதீன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் மீராசா மரைக்காயர், செயலாளர் மஹ்முதுல் ஹசன், பொருளாளர் மீராசா, துணை தலைவர்கள் நவுரங் சஹாப்தீன், இப்ராஹிம், துணை செயலாளர் முகம்மது உவைஸ், மாவட்ட பிரதிநிதி அரபி, ஒன்றிய தலைவர் கபூர், நகர தலைவர் செய்யது அலி, செயலாளர் தாஜ்தீன், பொருளாளர் கோஸ் முகமது, ஒன்றிய செயலாளர் காசிம், பொருளாளர் பக்ருதீன், ஒன்றிய துணை தலைவர் ஜாகீர் உசேன், நகர துணை தலைவர் மைதீன் பிச்சை, முகமது நாஜிப், முகமது நாசர், கமால்பீர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் ராஜதுரை, கயத்தாறு தி.மு.க. நகர செயலாளர் சுரேஷ் கண்ணன், பேரூராட்சி கவுன்சிலர் நயினார் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கயத்தாறு பேரூராட்சி உறுப்பினர் செய்யது அலி பாத்திமா செய்திருந்தார்.

    • ரஞ்சித் அவரது கடையில் தூங்கிக்கொண்டு இருந்தார்.
    • ரஞ்சித்தை முன்விரோதம் காரணமாக வெட்டியது விசாரணையில் தெரியவந்தது.

    கயத்தாறு:

    கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரத்தில் புதுக்கோட்டை செல்லும் சாலையில் மாட்டு இறைச்சிக்கடை நடத்தி வருபவர் ரஞ்சித்(வயது 40).

    இவர் நேற்று மாலை 4 மணி அளவில் அவரது கடையில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 3 பேர் வந்து ரஞ்சித்தை அரிவாளால் கழுத்தில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் லலிதா ஓடி வந்து கூச்சலிட்டார்.

    உடனே அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    3 பேர் கைது

    அதில் ரஞ்சித்தை முன்விரோதம் காரணமாக தூத்துக்குடி ராஜபாண்டிநகர் 7-வது தெருவை சேர்ந்த முருகன்(29), இசக்கி(37), கயத்தாறு அருகே உள்ள தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த கணேசன்(32) ஆகியோர் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கொம்பையா கேரளாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.
    • அதிர்ச்சி அடைந்த பால்மணி கதறி அழுது கூச்சலிட்டுள்ளார்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள அய்யனார்ஊத்து கிராமம் கிணற்று தெருவை சேர்ந்தவர் கொம்பையா (வயது 42). இவர் கேரளாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.

    கொம்பையாவிற்கு பால்மணி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். கொம்பை யாவிற்கு இவருக்கு குடி பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கொம்பையா கேரளாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    தினமும் மது குடித்து விட்டு சுற்றி வந்த கொம்பையா நேற்று இரவு வழக்கம் போல் தூங்கச்சென்றுள்ளார். இன்று அதிகாலையில் அவரது மனைவி பால்மணி எழுந்து பார்த்தபோது வீட்டில் உள்ள மற்றொரு அறையில் கொம்பையா தூக்கு போட்ட வாறு பிணமாக தொங்கினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பால்மணி கதறி அழுது கூச்சலிட்டுள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கயத்தார் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் கொம்பையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொம்பையாவின் தற்கொலை காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துக்கொண்ட கொம்பையாவிற்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    • வில்லிசேரி பஞ்சாயத்து துணை தலைவராக காசிராஜன் இருந்து வருகிறார்.
    • காசிராஜனுக்கு,வெங்கடாசலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடா சலம்(வயது 49). விவசாயி. அதே பகுதியில் வசித்து வருபவர் காசிராஜன். இவர் வில்லிசேரி பஞ்சாயத்து துணை தலைவராக இருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று காசிராஜன் வீட்டுக்கு அரிவாள்மனையுடன் சென்ற வெங்கடாசலம் அவரை அவதூறாக பேசி தாக்க முயன்றதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காசிராஜன் அளித்த புகாரின்பேரில் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மக்காச்சோள பயிர்விளைச்சல் போட்டியில் கிருஷ்ணசாமி என்ற விவசாயி முதல் இடத்தை பிடித்தார்.
    • 50 சதவிகித மானியத்தில் பண்ணை கருவிகளை வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

    கயத்தாறு:

    கயத்தாறு வட்டார பகுதியில் வேளாண்மை துறை மூலம் நடைபெற்ற மாவட்ட விவசாயிகளுக்கான மக்காச்சோள பயிர்விளைச்சல் போட்டியில் சவலாப்பேரியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற விவசாயி கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்தார். இவருக்கு பாராட்டு மற்றும் பரிசு வழங்கப்பட்டது.மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்காச்சோளப் பயிர்கள் அறுவடையை தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஜென்கின்பிரபாகர் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார்அம்மாள், கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜ் மற்றும் கயத்தாறு வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது கயத்தார் வட்டாரத்தில் 50 சதவிகித மானியத்தில் கடப்பாரை, மண்சட்டி, கலை கொத்தி, பண்ணருவாள், மண்வெட்டி ஆகிய பண்ணை கருவிகளை விவசாயிகள் வாங்கி பயனடையுமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை, வேளாண்மை விரிவாக்க மையங்களில் உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி பயனடைய வேண்டி வேளாண்மை உதவி இயக்குனர்சுரேஷ் வட்டார பகுதியில் உள்ள விவசாயிகளை கேட்டுக்கொண்டார். 

    • நாராயணசாமி கோவில் கொடைவிழா கொடி யேற்றத்துடன் நடைபெற்றது.
    • விழாவை முன்னிட்டு கோவிலில் 101 விளக்கு பூஜை நடைபெற்றது.

    கயத்தாறு:

    கயத்தாறில் தர்மபதி நாராயணசாமி கோவில் கொடைவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடி யேற்றத்துடன் நடைபெற்றது.அன்றுமுதல் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏடு வாசிப்பு, சொற்பொழிவு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதனை தொடர்ந்து தினமும் அன்னதானம் வழங்கினர். கோவிலில் 101 விளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் அய்யா வைகுண்டர் பூம்பல்லக்கில் பவனி வந்தார். வழிநெடுக பக்தர்கள் மாலை அணிவித்து வணங்கி சென்றனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    ×