என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கயத்தாறில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
- முருகன் நேற்று தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டு மாலையில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
- முருகன் உடலை போலீசார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கயத்தாறு:
செய்துங்கநல்லூர் அருகே உள்ள கோவிலூத்து கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 38). கட்டிட தொழிலாளி.
விபத்து
இவர் நேற்று விருதுநகர் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டு மாலையில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
கயத்தாறு அருகே நான்குவழிச்சாலையில் கரிசல்குளம் விலக்கு பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளை அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இடித்துவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த முருகனுக்கு பிச்சம்மாள் என்ற மனைவியும், முனீஸ்வரி(12), பேச்சியம்மாள்(16) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்