search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறு பேரூராட்சியில் புதிய கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை
    X

    பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை பணிகளை தொடங்கி வைத்த காட்சி.

    கயத்தாறு பேரூராட்சியில் புதிய கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை

    • அசனார் நகரில் பம்ப் அறை கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    கயத்தாறு:

    கயத்தாறு பேரூராட்சி பகுதியில் உள்ள கன்னியம்மன் கோவில் தெருவில் மின் மோட்டார் இணைப்புடன் கூடிய புதிய பம்ப் அறை கட்டி சின்டெக்ஸ் டேங்க் அமைக்கவும், அசனார் நகரில் பம்ப் அறை கட்டுவதற்கும், அரசங்குளம் வார்டில் சுடுகாடு பகுதியில் புதிய கொட்டகை அமைப்பதற்கும் பூமி பூஜை நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னப்பாண்டியன், வழக்கறிஞர் மாரியப்பன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் நயினார் பாண்டியன், வெயிலாட்சி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் ராஜதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×