search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறில் இறைச்சி கடைக்காரரை வெட்டிய 3 பேர் கைது
    X

    கயத்தாறில் இறைச்சி கடைக்காரரை வெட்டிய 3 பேர் கைது

    • ரஞ்சித் அவரது கடையில் தூங்கிக்கொண்டு இருந்தார்.
    • ரஞ்சித்தை முன்விரோதம் காரணமாக வெட்டியது விசாரணையில் தெரியவந்தது.

    கயத்தாறு:

    கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரத்தில் புதுக்கோட்டை செல்லும் சாலையில் மாட்டு இறைச்சிக்கடை நடத்தி வருபவர் ரஞ்சித்(வயது 40).

    இவர் நேற்று மாலை 4 மணி அளவில் அவரது கடையில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 3 பேர் வந்து ரஞ்சித்தை அரிவாளால் கழுத்தில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் லலிதா ஓடி வந்து கூச்சலிட்டார்.

    உடனே அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    3 பேர் கைது

    அதில் ரஞ்சித்தை முன்விரோதம் காரணமாக தூத்துக்குடி ராஜபாண்டிநகர் 7-வது தெருவை சேர்ந்த முருகன்(29), இசக்கி(37), கயத்தாறு அருகே உள்ள தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த கணேசன்(32) ஆகியோர் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×