என் மலர்
உள்ளூர் செய்திகள்

கயத்தாறு அருகே பஞ்சாயத்து துணை தலைவருக்கு கொலை மிரட்டல்
- வில்லிசேரி பஞ்சாயத்து துணை தலைவராக காசிராஜன் இருந்து வருகிறார்.
- காசிராஜனுக்கு,வெங்கடாசலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடா சலம்(வயது 49). விவசாயி. அதே பகுதியில் வசித்து வருபவர் காசிராஜன். இவர் வில்லிசேரி பஞ்சாயத்து துணை தலைவராக இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று காசிராஜன் வீட்டுக்கு அரிவாள்மனையுடன் சென்ற வெங்கடாசலம் அவரை அவதூறாக பேசி தாக்க முயன்றதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காசிராஜன் அளித்த புகாரின்பேரில் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






