search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவறை"

    • பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. வரை எந்தவித பொது சுகாதார கழிவறையும் இல்லை.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளுக்கு திருமருகல் தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது.

    இங்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,வட்டார வேளாண்மை அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், தபால் நிலையம், வங்கி, கடைத்தெரு, இரத்தினகிரீஸ்வரர் கோவில் என நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் திருமருகல் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் சுற்றளவில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக எந்த வித பொது சுகாதார கழிவறையும் இல்லை.

    இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

    மேலும் சாலை மற்றும் பொது இடங்களில் சிறுநீர் உள்ளிட்ட இயற்கை உபாதைகளை கழிப்பதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்படுத்த ஏதுவாக பொது சுகாதார கழிவறை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரியலூர் பஸ் நிலையத்தில் தற்காலிக கழிவறை ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அரியலூர் பழைய பஸ் நிலையத்தில் தற்போது கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    அரியலூர்:

    அரியலூர் பழைய பஸ் நிலையத்தில் தற்போது கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அண்ணா சிலை அருகே பயணிகள் காத்திருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பஸ்களில் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் இப்பகுதியில் கழிப்பிட வசதி இல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் தற்காலிக கழிப்பறை ஏற்படுத்தி பயணிகளுக்கு உதவ வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    • குழந்தை பெற்ற பெண்களுக்கு துணையாக இருந்து வரும் உறவினர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லை.
    • குடிநீர் தொட்டிகளில் போதிய அளவு குடிநீர் இல்லாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட த்திற்கு முதன்மை மருத்துவமனையாக இயங்கி வரும் தென்காசி அரசு மருத்துவ மனைக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அதிகம் பேர் பிரசவத்திற்காக தென்காசி அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர். இங்கு குழந்தை பெற்ற பெண்களுக்கு துணையாக இருந்து வரும் உறவினர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லை எனவும், அவர்க ளுக்கான அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் போதுமான அளவில் இல்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளது.

    தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் மருத்துவமனையில் உள்ள குடிநீர் தொட்டிகளில் போதிய அளவு குடிநீர் இல்லாமல், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், நோயாளிகள் பயன்படுத்தி வரும் கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர்.

    எனவே தினமும் ஆயிர க்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் தென்காசி அரசு மருத்துவ மனையில் நோயாளிகளின் அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் கழிப்பிட அறைகளில் தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட நிர்வா கம் முன்வர வேண்டும் என சமூக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடம் இல்லாததால் கழிவறையில் நின்று பயணம் செய்ய அனுமதிக்கின்றனர்.
    • புதுச்சேரியில் இருந்து தாம்பரம் வரை இந்த அவலநிலை நீடிக்கிறது.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு நேரடி ரெயில் சேவை காலை மற்றும் மாலையில் உள்ளது.

    முன்பதிவு இல்லாத இந்த ரெயிலில் சாதாரண டிக்கெட் பெற்று பயணிகள் எளிதில் பயணம் செய்ய முடியும் ரெயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வந்தால் இருக்கை கிடைத்துவிடும்.

    ஆனால் புறப்படும் நிலையத்தை தவிர இடையில் உள்ள நிலையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏறுவதால் இருக்கைகள் மட்டுமின்றி உடமைகள் வைக்கக் கூடிய பகுதி, நடைபாதையில் எல்லாம் மக்கள் அமர்ந்து பயணம் செய்கின்றனர்.

    குறிப்பாக புதுச்சேரியில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு காலை 9 மணிக்கு வந்து சேரும் பாசஞ்சர் ரெயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது.

    அந்த ரெயில் விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் போன்ற நிலையங்கள் தவிர சிறிய நிலையங்களிலும் நின்று செல்வதால் வழி நெடுக மக்கள் ஏறுகிறார்கள். இதனால் படிக்கட்டில் நின்று பயணம் செய்கின்ற நிலை காணப்படுகிறது.

    பெண்கள், வயதானவர்கள் ரெயில் பெட்டியில் இடம் இல்லாததால் வழியில் அமர்ந்து பயணிக்கின்றனர். சிலர் கழிவறையில் நின்று பயணம் செய்கின்றனர். பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடம் இல்லாததால் கழிவறையில் நின்று பயணம் செய்ய அனுமதிக்கின்றனர். கழிவறையில் நின்றால் யாருக்கும் இடையூறாக இருக்காது எனக் கருதி அங்கே விட்டு விடுகின்றனர்.

    பாதுகாப்பு இல்லாத சுகாதாரமில்லாத அந்த இடத்தில் சிறுவர்கள் மட்டுமின்றி பெண்களும் நிற்கின்றனர். இதனால் அவசரமாக கழிவறையை பயன்படுத்த நினைப்பவர்கள் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. புதுச்சேரியில் இருந்து தாம்பரம் வரை இந்த அவலநிலை நீடிக்கிறது.

    எனவே புதுச்சேரி - சென்னை இடையே ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

    • வ.உ.சி. மைதானத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வ.உ.சி. மைதானம் புதுப்பிக்கப்பட்டு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக பாளை வ.உ.சி. மைதானம் விளங்கி வருகிறது. இந்த மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இங்கு ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் சிறுவர்-சிறுமிகள் விளையாடி மகிழும் வகையில் அம்ருத் திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இதில் மாலை நேரங்களில் பாளை பகுதியில் உள்ள முதியவர்கள், சிறியவர்கள் மற்றும் பெரும்பாலானோர் குடும்பத்துடன் வந்து பொழுது போக்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இங்குள்ள சறுக்குகள், ஊஞ்சல்கள் உள்ளிட்டவற்றில் அவர்கள் விளையாடி மகிழ்கின்றனர்.

    ரூ. 14 கோடியில்....

    இதுதவிர ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 14 கோடியில் வ.உ.சி. மைதானம் புதுப்பிக்கப்பட்டு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கும் ஏராளமானவர்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் விளையாட்டு வீரர்களும் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு இந்த இடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறாக தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்லும் நிலையில் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படுகிறது.

    கழிப்பிட வசதி

    இவ்வாறு வருபவர்களின் அத்தியாவசிய தேவையான கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதிக்காக மைதானத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு குழாய்கள் உள்ளன. மேலும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சோலார் மின் உற்பத்தி விளக்கு, விளையாட்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க முதலுதவி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்குள்ள கழிப்பறைகள் பெரும்பாலும் பூட்டிக் கிடப்பதாகவும், இதனால் மைதானத்திற்கு வரும் அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமம் அடைவதாகவும் ஏராளமானோர் புகார் கூறி வருகின்றனர். இதேபோல் சிலநேரங்களில் அங்குள்ள குடிநீர் தொட்டியில் குழாயை திறந்தால் தண்ணீர் வருவதில்லை என்றும், இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறுகையில், இது தொடர்பாக விசாரணை நடத்தி உடனடியாக வ. உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    • வேளாண்மை துறை சார்பில் விவசாயிகள் மற்றும் நலிந்த ஏழைப் பயனாளிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வரவழைக்கப்பட்டுள்ளது.
    • அதிகாரிகள் அலட்சியமாக தென்னங்கன்றுகளை வைத்து இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    திருவள்ளூர்:

    பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 43 ஊராட்சிகள் உள்ளது. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகள் மற்றும் நலிந்த ஏழைப் பயனாளிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வரவழைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தென்னை கன்றுகளை முறையாக பாதுகாக்காமல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில் வைத்து உள்ளனர்.

    இதனை பார்க்கும் விவசாயிகளும், பயனாளிகளும் மிகவும் மனவேதனை அடைந்து வருகிறார்கள். அதிகாரிகள் அலட்சியமாக தென்னங்கன்றுகளை வைத்து இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நலத்திட்ட உதவிகளை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • துர்நாற்றம் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தபடியே நடந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.
    • ஒருபுறமிருக்க நடை பாதை உடைந்தும் காணப்படுகிறது.

    சென்னை:

    வடசென்னையின் முக்கிய பகுதியாக திகழ்வது பேசின் பாலம்.

    வடசென்னை பகுதி வாசிகள் மட்டுமின்றி, மாதவரம், புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருபவர்களும் இந்த பாலத்தை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

    வால்டாக்ஸ் ரோடு மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு செல்பவர்களும் பெரியமேடு, வேப்பேரி பகுதிக்கு வருபவர்களும் இந்த வழியாகவே வருகிறார்கள். பேசின் பாலம் அருகில் உள்ள நடைபாதை வழியாக சென்று அருகில் உள்ள பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்துக்கு பயணிகள் சென்று வருகிறார்கள்.

    இந்நிலையில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் நடை பாதையை திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

    அவசரத்துக்கு சாலையோரமாக வண்டியை நிறுத்தி விட்டு சிறுநீர் கழித்துவிட்டு செல்வதை பெரும்பாலானோர் வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.

    இதனால் நடைபாதையில் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. இதனை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சிறுநீர் கழிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்த போதிலும் சிறுநீர் கழிப்பவர்களை மட்டும் கட்டுப்படுத்துவது என்பது சவாலாகவே உள்ளது.

    இது தொடர்பாக பேசின் பால பகுதியை அதிகமாக பயன்படுத்தும் பொதுமக்கள் சிலர் கூறும்போது, நடை பாதையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க தடுப்பு வேலிகள் போன்று அமைத்தால் அது பலன் அளிக்கும்.

    அதே நேரத்தில் கழிவறை கட்டி கண்காணித்தாலும் சிறுநீர் கழிப்பதை தடுக்க முடியும் என்றனர். சிறுநீர் கழிப்பதால் வீசும் துர்நாற்றம் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தபடியே நடந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.

    இது ஒருபுறமிருக்க நடை பாதை உடைந்தும் காணப்படுகிறது. இதனை சரி செய்து மக்கள் சிரமமின்றி நடைபாதையில் நடந்து செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கழிவறை தொட்டிக்குள் விழுந்து தவித்த இளம்பெண்ணை மீட்டனர்.
    • இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாலன் நகரை சேர்ந்தவர் திருப்பதி. இவர் தனது வீட்டில் கழிப்பறை மற்றும் குளியலறை தனித்தனியாக அருகருகே கட்டியுள்ளார். இதில் கழிவறை தொட்டியின் மேற்பகுதியிலேயே கழிவறை இருக்கும்படி கட்டியுள்ளனர்.

    இந்தநிலையில் இன்று காலை திருப்பதியின் 21 வயது மகள் கழிவறைக்குச் சென்றார். அப்போது திடீரென்று எதிர்பாராதமாக கழிவறை தளம் கோப்பையோடு இடிந்து விழுந்துள்ளது. இதனால் அவர் செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு பெற்றோர் வந்து பார்த்தனர். அப்போது கழிப்பறை தளம் இடிந்து செப்டிக் டேங்க் தொட்டிக்குள் மகள் விழுந்து கிடப்பது தெரியவந்தது.

    இதைக்கண்டு அதிர்ச்சி யடைந்த அவர்கள் உடனடியாக வாடிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி சதக் அப்துல்லா தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து தவித்த இளம் பெண்ணை மீட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சிறுநீர் கழிப்பதற்காக நீண்ட வரிசையில் நின்று செல்ல வேண்டியுள்ளது.
    • ஒரு கழிவறையை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி

    புதுச்சேரி மாநிலத்தின் நெற்களஞ்சியமாகவும், 2-வது பெரிய நகரமாகவும் பாகூர் விளங்குகிறது. பாகூரின் முக்கிய பகுதியான மேரி வீதியில் தாலுகா, கொம்யூன், வங்கி, கருவூலம், பதிவு என பல முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதே பகுதியில் செயல்படும் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி பல ஆண்டுகளாக போதிய இடவசதியின்றி குறுகிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சுமார் 100 குழந்தைகள் படித்து வருகின்றனர். போதிய இடவசதி இல்லாததால் பள்ளியின் நுழைவாயில் பகுதியிலேயே 2 சிறிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒரு கழிவறையை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் பள்ளியின் இடைவேளை நேரத்தில் மாணவிகள் சிறுநீர் கழிக்கவும், தண்ணீர் குடிக்கசெய்வதும் வழக்கம். ஆனால் இப்பள்ளியில் மாணவிகள் சிறுநீர் கழிப்பதற்காக நீண்ட வரிசையில் நின்று செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. இதனால் மாணவிகள் வெகுநேரம் காத்திருந்து சிறுநீர் கழிக்க வேண்டியது உள்ளது.

    ஒரு சிறிய கழிவறையில் ஒரேநேரத்தில் 5 மாணவிகள் சென்று வருவதால் சுகாதாரம் என்பது அங்கு கேள்விக்குறியாக உள்ளது. இந்தநிலை தொடர்ந்து நீடிப்பதால் மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பு ஏற்படலாம் என்று பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.

    அங்குள்ள அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியிலும் இதேநிலைதான் இருப்பதாக பெற்றோர்கள் குமுறுகின்றனர். எனவே கல்வித்துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி கூடுதல் கழிவறை கட்டித் தருவதுடன் மாற்று இடத்தில் அடிப்படை வசதிகளுடன் பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பணியை ஆய்வு செய்து விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
    • நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே ரூ. 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பொது கழிவறை கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அருண்ராய் மற்றும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.

    மேலும், நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் பார்வையிட்டனர்.

    ஆய்வின் போது நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம், ஓவர்சீயர் குமரன், நகர வடிவமைப்பு மேற்பார்வையாளர் அருள் முருகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.

    • தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
    • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே வண்ணான்விளை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் ரெத்தினம் (வயது 30). இன்னும் திருமணம் ஆகவில்லை. சென்னையில் பொறியியல் பட்ட படிப்பை முடித்த அனிஷ் வேலைக்கு செல்லாமல் மதுவுக்கு அடிமையாகி உள்ளார்.

    இதற்காக அவருக்கு உறவினர்கள் பல இடங்களில் சிகிச்சை யளித்தும் நோய் குணமாகாத நிலையில் தற்போது தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற போது கழிவறையின் உள்ளே கால் வழுக்கியதில் பின்பக்கமாக விழுந்துள்ளார். இதில் அனிஷ் பின் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

    உறவினர்கள் உடனடியாக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள் அனிஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் பூங்கொடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உட்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், குப்பைமேடு பகுதியில் சுகாதார வளாகத்துடன் கூடிய சமுதாயக்கூடம், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நகரச் செயலாளர் சங்கர் தலைமையில் ஒன்றிய செயலாளர் முரளிதரன், மாவட்ட குழு உறுப்பினர் காதர் உசேன் முன்னிலையிலும் பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு, சமையல் பாத்திரங்களை கொண்டு வந்து சமைத்தவாறு, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் பூங்கொடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, இன்ஸ்பெக்டர் கலைவாணி போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உட்பட 43 பேரை கைது செய்தனர்.

    ×