என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதுக்கடை அருகே கழிவறையில் விழுந்த வாலிபர் சாவு
- தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
- புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே வண்ணான்விளை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் ரெத்தினம் (வயது 30). இன்னும் திருமணம் ஆகவில்லை. சென்னையில் பொறியியல் பட்ட படிப்பை முடித்த அனிஷ் வேலைக்கு செல்லாமல் மதுவுக்கு அடிமையாகி உள்ளார்.
இதற்காக அவருக்கு உறவினர்கள் பல இடங்களில் சிகிச்சை யளித்தும் நோய் குணமாகாத நிலையில் தற்போது தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத் தன்று வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற போது கழிவறையின் உள்ளே கால் வழுக்கியதில் பின்பக்கமாக விழுந்துள்ளார். இதில் அனிஷ் பின் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
உறவினர்கள் உடனடியாக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள் அனிஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்