search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் அலுவலகம்"

    • யாராவது உயிரிழந்தால் அவர் அவரது வீடுகளி லேயே புதைத்து கொள்ளுங்கள், இங்கே வரக்கூடாது என தனி நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
    • சுடுகாட்டு நிலத்தை மீட்டு தரக்கோரி சம்மந்த பட்ட துறை அதிகாரிகள், கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் இருமத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட தோக்கம்பட்டி கிராமத்தில் காலம் காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு நிலத்தினை அதே ஊரை சேர்ந்த ஒருவர் அபகரித்து கொண்டதாக புகார் கொடுக்க வந்த கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஊருக்கே பொதுவான சுடுகாட்டு நிலத்தை இப்படி அபகரித்து கொள்வது நியாயம் தானா? என தனி நபரிடம் முறையிட்ட போது யாராவது உயிரிழந்தால் அவர் அவரது வீடுகளி லேயே புதைத்து கொள்ளுங்கள், இங்கே வரக்கூடாது என மிரட்டல் விடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் மனுவில் தெரிவித்தனர்.

    சுடுகாட்டு நிலத்தை மீட்டு தரக்கோரி சம்மந்த பட்ட துறை அதிகாரிகள், கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்தே வேறு வழியின்றி இன்று பாடை கட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்தனர்.

    இதைத்தொடர்ந்து மனு கொடுக்க வந்த கிராம மக்கள் கூறுகையில்,

    தங்களது மனு மீது மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசு கொடுத்த ஆவணங்களான ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அரசிடமே திரும்ப ஒப்படைக்க போவதாகவும் வேதனை யுடன் தெரிவித்தனர்.

    • மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ள தினக்கூலி ஊதியம் ரூ.690 வழங்க வேண்டும்.
    • சாலை மறியல் போராட்டத்தில் கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    நாகர்கோவில் :

    மாநகராட்சி, நகராட்சி கள், பேரூராட்சிகளில் நிரந்தர பணியாளர்களை நீக்கி தனியாரிடம் தாரை வார்க்கும் அரசாணையை கைவிட வேண்டும். டெங்கு பணியாளர்கள் அனைவரையும் முழு நேர பணியாளர்களாக அறிவித்து மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ள தினக்கூலி ஊதியம் ரூ.690 வழங்க வேண்டும்.

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தினக்கூலி, சுய உதவிக்குழு, ஒப்பந்த தொழிலாளி என பல்வேறு பெயர்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பேரூராட்சிகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு குமரி மாவட்ட கிளை சார்பில் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.

    இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத் திற்கு குமரி மாவட்ட உள்ளாட்சி ஊழியர் சங்க செயலாளர் ஸ்டாலின் தாஸ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் சுடலை மற்றும் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரம், மாநில குழு உறுப்பினர்கள் அந்தோணி, இந்திரா, சித்ரா, பெருமாள் உள்பட ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முற்றுகையிட வந்த போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்தபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    சாலை மறியல் போராட்டத்தில் கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் பஸ்களில் ஏற்றி அந்த பகுதியில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகத்தின் ஒரு பகுதிஇடம் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுகிறார்கள்.
    • ஆவணங்களை பாதுகாப்பதிலும் தினசரி பணிக்கும் ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப்பிரித்து, செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கோரி கடந்த 25 ஆண்டுகளாக பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.

    அதன்படி 2019-ம் ஆண்டு நவம்பர் முதல் செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து தமிழகத்தின் 37-வது மாவட்ட மாக உதயமானது.

    புதிய மாவட்டத்திற்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு பல புதிய துறைகள் கொண்டு வரப்பட்டன.

    இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள பழைய கோட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்க தொடங்கியது.

    அங்கு செயல்பட்ட கோட்டாட்சியர் அலுவலகம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பழைய தபால் நிலைய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகமாக தற்போது செயல்பட்டு வரும் இடத்தில் போதிய இடவசதி இல்லை. கடும் இடநெருக்கடி காரணமாக இப்போது உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் துறைகள் அனைத்தும் ஒன்றாக செயல்பட முடியவில்லை.

    இதனால் புதிய துறைகள் மற்றும் அதன் அதிகாரிகள், வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். சில இடங்களில் வாடகை கட்டிடத்தில் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

    இதையடுத்து ஒரே கட்டிடத்துக்குள் ஒருங்கிணைந்து அலுவலகங்கள் இயங்குவதற்காக, புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    அனைத்து அரசுத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி செங்கல்பட்டு நகரை ஒட்டிய ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள வெண்பாக்கம் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் இடத்தை தேர்வு செய்து 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அந்த இடத்தில் கட்டுமான பணிகள் தொடங்கின. தரை தளத்துடன் கூடிய 4 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்ட ரூ.120-கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு 2022-ஆண்டு நவம்பர் மாதம் பணிகள் முழுவதும் நிறைவு பெற்றது.

    கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தில் பொதுப்பணி துறை, வருவாய் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை, சுகாதாரத் துறை, சுற்று சூழல் துறை, பேரிடர் மேலாண்மை துறை,நீர் வளத் துறை, விவசாயத் துறை, வேளாண்மை துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை, சமூக நலத்துறை, கால் நடைகள் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தீயணைப்பு துறை, கல்வி துறை, தொழிலாளிகள் நலத்துறை, விஞ்ஞானத்துறை, தமிழ் இலக்கிய துறை, நிதித்துறை உள்பட 35 துறையின் அலுவலகங்கள் அனைத்து வசதிகளுடன் செயல்படும் வகையில் தயார் நிலையில் இருந்தன.

    இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் மக்கள் பயன் பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது.

    இதனால் புதிய கட்டிடத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் பூட்டப்பட்டு தனியார் காவலர்கள் பாதுகாப்புக்காக பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

    இப்போது இயங்கி வரும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடும் இட நெருக்கடி நிலவுகிறது. ஆவணங்களை பாதுகாப்பதிலும் தினசரி பணிக்கும் ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.

    அனைத்து துறை அலுவலகமும் ஒரே இடத்தில் செயல்பட முடியாமல் வெவ்வேறு இடங்களில் செயல்படுவதால் பொதுமக்களும் சிரமம் அடைந்துள்ளனர்.

    எந்தத் துறை அலுவலகம் எந்த இடத்தில் செயல்படுகிறது என்று தெரியாமல் தினந்தோறும் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மாவட்ட மாற்று திறனாளி அலுவலகம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, நீர் வளத்துறை, மின்சாரத் துறை, சுகாதாரத் துறை, கனிமவளத்துறை விவசாயம் மற்றும் வேளாண்மை துறை உள்ளிட்டவை செங்கல்பட்டு நகரத்தில் வெவ்வேறு இடங்களில் இயங்குவதால் பல்வேறு ஊர்களில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகின்றனர்.

    இதனால் செங்கல்பட்டு நகரத்திற்குள் பிரம்மாண்டமாக 4 மாடிகளில் எழுந்து நிற்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.

    இவ்வளவு பெரிய கட்டிடம் பணிகள் முடிந்தும் ஏன் திறக்கப்படாமல் உள்ளது? என்ற கேள்வி அவர்கள் எண்ணத்தில் எழுந்து வருகிறது. ஆனால் இது பற்றி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்கும்போது சரி வர எந்த பதிலும் கூறாமல் உள்ளனர்.

    இதனால் புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பது எப்போது என்ற கேள்விகளுடனேயே அவர்கள் காத்து இருக்கிறார்கள்.

    இது குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 2019 -ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் தனியாக பிரிந்தது. இதனால் அரசுத்துறை அலுவலகங்களுக்கு மக்கள் எளிதில் சென்று வரலாம் என்று நினைத்தோம். செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் 4 மாடியில் பிரம்மாண்டமாக கட்டி முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் அங்கு எந்தத் துறைகளும் செயல்படவில்லை. கட்டிடம் மூடியே கிடக்கிறது.

    அதில் செயல்பட வேண்டிய அனைத்து துறைகளும் வெவ்வேறு இடத்தில் தனித்தனியாக செயல்படுகின்றன .இதன் காரணமாக பல்வேறு பணிகளுக்காக வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் ஒவ்வொரு துறை அலுவலகமும் என்று உள்ளது எங்கு தேடி கண்டுபிடித்து செல்வதற்கு பெரும்பாடு பட்டு வருகிறார்கள்.

    புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகத்தின் ஒரு பகுதிஇடம் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுகிறார்கள். தொல்லியல் துறையிடம் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதால் திறக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    எனவே தொல்லியல் துறையுடன் மாநில அரசு பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் கலெக்டர் அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இந்த கட்டிடப் பணிக்காக ரூ.120 கோடி முடங்கி உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, செங்கல்பட்டு மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு திறப்புக்கு தயார் நிலையில் உள்ளது. சில சிக்கல்கள் இருப்பதால் தாமதம் ஏற்படுகிறது. இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே புதிதாக கட்டப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் விரைவில் திறக்கப்படும் என்றனர்

    • கடந்த சில மாதங்களாக வாட்ஸ்-அப் புகார் எண், தொலைபேசி புகார் எண் இரண்டும் சரிவர செயல்படவில்லை.
    • கலெக்டருக்கு புகார்களை தெரிவிக்கும் வகையில் மீண்டும் புகார் எண்களை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களின் புகார்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தெரிவிப்பதற்கு பதிலாக தனியாக தொலைபேசி மற்றும் வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிப்பதற்காக தனியாக புகார் எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.

    பொதுமக்கள் புகார்

    அதில் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவித்தவுடன் அதற்கான உரிய பதில் சம்பந்தப்பட்ட நபருக்கு குறுஞ்செய்தியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வாட்ஸ்-அப் புகார் எண் மற்றும் தொலைபேசி புகார் எண் இரண்டும் சரிவர செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கலெக்டருக்கு புகார்களை தெரிவிக்கும் வகையில் ஏற்கனவே செயல்பட்ட வாட்ஸ்-அப் புகார் மற்றும் தொலைபேசி புகார் எண்களை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பெங்களூரில் இருந்து வந்த என்ஜினீயர் குழுவினர் சோதனை
    • மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையின் சீலை அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்ப ட்டது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சட்டமன்ற மற்றும் பாராளு மன்ற தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு எந்திரங்கள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

    5,204 மின்னணு எந்திரங்கள், 3,760 கட்டுப்பாட்டு கருவிகள், 2,612 வி.வி. பேட் என மொத்தம் 11 ஆயிரத்து 582 கருவிகள் 3 தளங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்திற்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி இன்று தொடங்கியது. இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையின் சீலை அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டது.

    இதில் தி.மு.க. சார்பில் வர்கீஸ், பாரதிய ஜனதா சார்பில் ஜெகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் இசக்கி முத்து மற்றும் அரசியல் கட்சியினர், கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்ரமணியம், ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், தேர்தல் தாசில்தார் சுசீலா உட்பட பலர் கலந்துகொ ண்டனர்.

    அரசியல் கட்சியினர் அங்கு வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்களை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து பெங்களூரில் இருந்து வந்த என்ஜினீயர் குழுவினர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரி பார்க்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இன்று தொடங்கிய சரி பார்க்கும் பணி ஒரு மாத காலம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

    • திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் அபகரிப்பு செய்யப்பட்டது.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி சார்பதிவாளர் சிவசாமி உட்பட 16 பேரை கைது செய்தனர். கோவில் இடத்தை தனது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜான்குமார், மாவட்ட பதிவாளர் ரமேஷ், தாசில்தார்கள் பாலாஜி, ரமேஷ்கண்ணா ஆகியோர் மீதும் சட்டப்படி எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்படி இன்று காலை வழுதாவூர் சாலையில் திராவிடர் விடுதலைக்கழகம் லோகு அய்யப்பன் தலைமையில் பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகள் ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

    போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஜான்குமார் எம்.எல்.ஏ., வருவாய்த்துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகத்தை தடையை மீறி முற்றுகையிட முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். 

    • கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
    • கடலை மிட்டாய் கம்பெனியில் இருந்து வருகிறது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

    சலவன்பேட்டை சாது கார மடத் தெருவை சேர்ந்த ஜெயபால் என்பவர் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது பக்கத்து வீட்டில் கடலை பர்பி, கடலை மிட்டாய், பொரி உருண்டை உள்ளிட்ட குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் தயாரித்து வருகின்றனர்.

    இந்த திண்பண்டங்களில் மிகப்பெரிய கட்டெறும்புகள் மொய்த்து வருகிறது.

    அந்த கம்பெனியிலிருந்து எங்கள் வீட்டிற்குள் கட்டெறும்புகள் மற்றும் எலிகள் அதிக அளவில் வந்து தூக்கத்தை கலைக்கிறது.

    கட்டெறும்பு கடித்ததில் எனது கை கட்டைவிரல் பாதிக்கப்பட்டுள்ளது.

    எங்கள் வீடு முழுவதும் நாளுக்கு நாள் கட்டெறும்பு பெருகிக்கொண்டே வருகிறது. அங்கிருந்து வெளிவரும் புகை கண் எரிச்சலை ஏற்படுத்துகிறது. என்னுடைய தாயார் ஆஸ்துமா நோயால் அவதிப்படுகிறார்.

    எனக்கும் சர்க்கரை, ரத்த அழுத்த நோய் உள்ளது. பக்கத்து வீட்டில் மிட்டாய் கம்பெனி இருப்பதால் நாங்கள் மிகவும் அவதிப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நூதன புகார்

    மேலும் கட்டெறும்புகளால் தனது விரல் பாதிக்கப்பட்டதாக கூறி அதிகாரியிடம் விரலை காண்பித்தார்.

    இந்த நூதன புகாரால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கே.வி.குப்பம் அருகே உள்ள மேல் காவனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் எங்கள் பகுதியில் 88 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கி அதில் வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி பேரில் கலைஞர் நகர் என்று பெயர் வைக்க வேண்டும்.

    இதற்கு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே கலைஞர் நகர் என்று பெயர் பலகைவைக்க அனுமதி வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    மிரட்டல்

    ஊசூர் அடுத்த தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர் அளித்த மனுவில்,

    `எனது மகன் கடன் வாங்கியதால் கும்பல் ஒன்று என்னையும், எனது மனைவியையும் மிரட்டி வருகின்றனர்.

    இதனால் நானும், என் மனைவியும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
    • குழந்தைகளுக்கு செறியூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

    மாவட்ட திட்ட அலுவலர் அப்போது குடியாத்தம் அடுத்த செதுக்கரையை சேர்ந்த லில்லி என்பவர் தனது கணவர் கடந்த மாதம் இறந்து விட்டதால் இறப்புச் சான்று கேட்டு மனு அளித்தார். அப்போது திடீரென லில்லி மயங்கி கீழே விழுந்தார்.

    அங்கு இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் லில்லியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து குழந்தை வளர்ச்சி திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 1157 குழந்தைகளுக்கு செறியூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    • மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.
    • தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    ஜூன் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ந்தேதி வெள்ளிக் கிழமை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10.05 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம். இக்குறைகளுக்கு சம்மந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரி யபதில் அளிக்கவும் மேலும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பினை கடலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

    • கலெக்டர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் மாணவ-மாணவிகள் வந்தனர்.
    • ஆதிதிராவிடர் பள்ளி என பெயர் மாற்றப்பட்டுள்ளது

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை மாணவ-மாணவிகள் கலெக்டர் சங்கீதாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுைர மாவட்டம் பேரையூர் வட்டம் சாப்டூர் ஊராட்சி சங்கரலிங்காபுரத்தில் உள்ள பழமையான சங்கராலிங்கபுரம் அரசு பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளிக்கு தற்போது அரசு ஆதிதிராவிடர் பள்ளி என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த பெயரை மாற்றவும் கூடாது, பழைய பெயரிலேயே செயல்பட வேண்டும். அதேபோல இந்த பள்ளியின் கட்டிடம் மிகவும் ேமாசமான நிலையில் உள்ளது.

    அதனை சரிசெய்து தரும்படியும் மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். பெற்றோர்களுடன் மாணவ-மாணவிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • இந்து அறநிலையத்துறை சார்பில் மேற்கு ரத வீதியில் இரும்பு கதவு அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
    • மேற்குரத வீதியில் 50-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன.

    நெல்லை:

    பிரசித்தி பெற்ற பாபநாச சுவாமி கோவிலில் மேற்கு ரத வீதியில் உள்ள ஆன்மீக மண்டபங்களில் வழிபாடு நடத்த தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

    இதனால் மேற்கு ரத வீதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். இந்த பகுதியில் விக்கிரமசிங்கபுரம் சுற்று வட்டார பகுதி மக்கள் நடைபாதை கடைகள் வைத்துள்ளனர்.

    இந்நிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் மேற்கு ரத வீதியில் இரும்பு கதவு அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இதற்கு விக்கிரமசிங்கபுரம் ஊர் போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட உள்ள இந்த இரும்பு கதவு அமைக்கும் பணியை ரத்து செய்யக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விக்ரமசிங்கப்புரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மனு சென்றனர்.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்ததால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின் ஊர் பொதுமக்கள் சார்பாக 5 பேர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பாபநாச சுவாமி கோவிலின் மேற்கு ரத வீதியை பல நூற்றாண்டு காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். திடீரென நிர்வாக காரணங்கள் கூறி இந்து அறநிலையத்துறை இரும்பு கதவு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

    23 சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் கோவிலின் பூஜைகள் தவறாமல் செய்து வந்தும், கோவிலை தூய்மையாகவும் பராமரித்து வருகிறோம். மேற்குரத வீதியில் இரும்பு கதவு பொதுமக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாவார்கள். அதனை ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும்.

    இவர் அந்த மனுவில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக விக்கிர மசிங்கபுரம் பொதுமக்கள் கூறியதாவது:

    மேற்குரத வீதியில் 50க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன. தினசரி இந்த வீதி வழியாக இரு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. திடீரென இரும்பு கதவு அமைப்பதில் உள்நோக்கம் உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    முன்னதாக அவர்கள் கொண்டு வந்த பாதாகைளை கலெக்டர் அலுவலக்திற்குள் கொண்டு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. அவற்றை பறிமுதல் செய்தனர்.



    போலீசார் பறிமுதல் செய்த பதாகைகள்.

    போலீசார் பறிமுதல் செய்த பதாகைகள்.


     


    • தமிழ்நாடு அரசின் தகவல் ஆற்றுப்படை எனும் இணைய தளத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    • பொது மக்கள் 200க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், காவுத்தம்பாளையம் கிராமத்தில் உள்ள குமரிக்கல்பாளையம் பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, உயரமான ஒரே கல்லால் ஆன நடுகல் உள்ளது. இந்தக் கல் இங்கு குமரிக்கல் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த நடு கல் தரைக்கு மேல் 30 அடி உயரத்திலும் தரைக்கு கீழ் 15 அடி ஆழத்திலும் உள்ளது. இந்த நடு கல்லை சுற்றியுள்ள கிராமங்களில் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவிற்கு பல்வேறு தொல்லியல் எச்சங்கள் காணப்படுகிறது. பாறை குழிகள், கல்வெட்டுக்கள், பானை ஓடுகள் காணப்படுகின்றன. இந்த ஊரில் உள்ள குளத்தில் ஆய்வு செய்தால் பல்வேறு தொல் பொருள் ஆய்வுகள் கிடைக்கும். என தெரிய வருகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் ஆற்றுப்படை எனும் இணைய தளத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கீழடி தொல்பொருள் கண்காட்சியில் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வு செய்யப்பட வேண்டிய 32 இடங்களில் இந்த இடமும் ஒரு இடம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காவுத்தம்பாளையம் வருவாய் கிராமம் மற்றும் குமரிக்கல்பாளையம் ஆகிய ஊர்களில் தற்போது தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் 142.95 ஏக்கரில், மிகப்பெரிய துணை மின் நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுப்பு பணிகளை செய்து வருகிறது. துணை மின் நிலையம் அமைய உள்ள இடம் குமரிக்கல்லுக்கு மிக மிக அருகிலேயே இதன் எல்லை அமைகிறது.

    எதிர்காலத்தில் மின்மாற்றிகள் வெடித்து விபத்து ஏற்பட்டால், இந்த கல் அழிவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. அதோடு தொல்லியல் ஆய்வு செய்யவும் மிகப்பெரிய சிரமத்தை இந்த துணை மின் நிலையம் ஏற்படுத்தி விடும். உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு மின்சாரம் கொண்டு செல்லப்படும் போது மழைக்காலங்களில் இடி, மின்னல் அதிகமாக இருக்கும் சூழல்களில் உயர்மின் கோபுர பாதை களை நோக்கி மின்னல் இடிகளும் ஈர்க்கப்படும். அவ்வாறான சமயத்தில் இந்த கல்லுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு கல் அழிந்து விடும்.

    எனவே துணை மின் நிலைய திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்றி அமைக்க வலியுறுத்தி காவுத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் 200க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை மின் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்றி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ×