search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் அலுவலகம்"

    • பல்வேறு பகுதிகளிலும் நாய்களை பிடிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
    • 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 45 போலீசார் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகள் மற்றும் கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கடந்த சில நாட்களாக நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்தன.

    இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மகேஷ் உறுதி அளித்தார். அதன்பேரில் மாநகராட்சி பகுதிகளில் நாய்களை பிடிக்கும் பணி தொடங்கியது.

    இன்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்தப் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். சுமார் 10 நாய்கள் அந்தப் பகுதியில் பிடிபட்டன. அவற்றை வேனில் ஏற்றி கருத்தடை செய்ய கொண்டு சென்றனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் நாய்களை பிடிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

    நாகர்கோவில் கணேசபுரத்தில் பூங்காவுடன் கூடிய போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு கோட்டார் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 45 போலீசார் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சமீப காலங்களில் பூங்காவில் சிறுவர்-சிறுமிகளை அச்சுறுத்தும் வகையில் மாடுகளும், நாய்களும் திரிந்து வருகின்றன. வழியை மறித்து படுத்திருக்கும் மாடுகள் எழுந்திருக்க மறுப்பதால், பூங்காவுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஓடி விளையாடும் சிறுவர்-சிறுமிகளை நாய்கள் விரட்டுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையை மாற்ற மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    • கலெக்டரின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று வருவாய்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • தமிழக அரசு இதனை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதி திராவிட நலத்துறை தாசில்தார் மனோஜ் முனியப்பன் தலைமையிலான அதிகாரிகள் உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு அந்த தொகுதி எம்.எல்.ஏ.,எதிர்ப்பு தெரிவித்தார். இதை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர், மனோஜ் முனியப்பனை சஸ்பெண்டு செய்தார். இதனால் வருவாய்துறை ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கலெக்டரின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று வருவாய்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நுழைவாயில் அருகே படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகாரியின் சஸ்பெண்டை ரத்து செய்து உடனடியாக மீண்டும் அவரை பணியில் சேர்க்க வேண்டும், தமிழக அரசு இதனை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்த்துறை ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி கூறுகையில்:-

    கள்ளக்குறிச்சி ஆதிதிரா விடர் நலத்துறை தாசில்தார் மனோஜ் முனியப்பன் பணியிடை நீக்கத்தினை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஏற்கனவே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிலையில் இன்று பணியை புறக்கணித்து தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று மனோஜ் முனியப்பனுக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சிக்கு போராட சென்ற வருவாய் துறை ஊழியர்களை போலீசார் கைது செய்து இன்று காலை தான் விடுவித்தனர்.

    இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மனோஜ் முனியப்பனை மீண்டும் பணியில் சேர்க்கும் வரை போராட்டம் தொடரும். இதில் எந்த சமரசத்திற்கும் உடன்பாடு இல்லை. வருவாய் துறை ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் முழு நேரமும் பணியாற்றி வருகிறோம்.

    ஒவ்வொரு புதிய திட்டங்களுக்கும் புதியதாக ஆட்கள் நியமிக்காமல் பணியில் இருப்பவர்களே செய்து வருகிறோம்.இதனால் பணிச்சுமை அதிகமாக உள்ளது. இப்படி பணி செய்யும் மனோஜ் முனியப்பனை எந்த விசாரணையும் செய்யாமல் பணி இடை நீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது.

    மாவட்டம் முழுவதும் இருந்து வருவாய் துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலக பணிகளும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 650-க்கும் மேற்பட்ட தாசில்தார் அலுவலக பணியாளர்கள் வட்டாட்சியர்கள் மற்றும் கிராம உதவியாளர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பணிகள் முழுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம், உள்பட வருவாய்த்துறை பல்வேறு பணிகள் இந்த போராட்டத்தால் முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்.புதுப்பாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் அரவை ஆலையை மூட வேண்டும்.
    • ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த ஏராளமான பொது மக்கள் வந்து மனுக்களை அளித்தனர்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எம்.புதுப்பாளையத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

    அவர்கள் எம்.புதுப்பாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் அரவை ஆலையை மூட வேண்டும். இந்த ஆலையால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

    நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. ஆழ்துளை கிணறு நீர் மாசுபடுகிறது என்று குற்றம் சாட்டினார். பொதுமக்கள் மனு கொடுக்க வந்த போது கலெக்டர் அங்கு இல்லை. அவர் மற்றொரு அரசு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். இதனால் பொதுமக்கள் அங்கேயே காத்திருந்தனர்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    எம்.புதுப்பாளையத்தில் அனுமதியின்றி பிளாஸ்டிக் அரவை தொழிற்சாலை செயல்படுகிறது. இதனை மூடக்கோரி பஞ்சாயத்து தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாசு கட்டுப்பாடு அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் ஏற்கனவே மனு அளித்துள்ளோம். அந்த ஆலைைய மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனாலும் ஆலை நிர்வாகத்தினர் ஆலையை நடத்தி வருகின்றனர். எனவே, இந்த ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

    • நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
    • அரசு விடுமுறை நாட்களை தவிர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதியிலும், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்திலும் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆதார் மையத்தில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.

    இதனால் ஆதார் மையத்தில் தினமும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காலை 9 மணி முதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு அந்த நபர்களுக்கு மட்டும் ஆதார் திருத்தம், பெயர் சேர்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆதார் சேவை மையமானது அரசு விடுமுறை நாட்களை தவிர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்திற்கு ஏரளாமான பொதுமக்கள் குவித்தனர்.

    சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆதார் பெயர் மற்றம், முகவரி திருத்தம் உள்ளிட்ட வைகளை திருத்தம் செய்து சென்றனர். மேலும் ஆதார் திருத்தம் செய்வதற்கு பள்ளி மாணவ-மாணவிகளும் ஏராளமானோர் குவிந்திருந்தனர். ஆதார் திருத்தம் செய்வதற்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்ததால் அவதியடைந்தனர்.

    • பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் அடிப்படை வசதி தேவைகள் குறித்து குழுவினர் கேட்டறிந்தனர்.
    • இந்த மாத இறுதிக்குள் பாலத்தில் போக்குவரத்து செல்வதற்கான நடவடிக்கை தொடங்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் அரசு திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் இன்று உறுப்பினர்கள் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.

    உயர்மட்ட பாலம் கட்டும் பணி

    இதில் உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், ஜவா ஹிருல்லா , மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்று நெல்லையை அடுத்த பொன்னாக்குடியில் நதிநீர் இணைப்பு திட்டப்பணிகள், அதே சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    அதனைத்தொடர்ந்து நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதுமான வகுப்பறைகள், கழிப்பறை உள்ளிட்ட மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டனர். மேலும் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் அடிப்படை வசதி தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.

    பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டப்பணிகள் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. கடந்த ஆட்சி காலங்களில் பணிகள் தொய்வு ஏற்பட்டிருந்தது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.

    இதுவரை 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. ஒரு பாலம் கட்டுமானப் பணி முடிவடைந்துள்ளது. அதில் இந்த மாத இறுதிக்குள் போக்குவரத்து செல்வதற்கான நடவடிக்கை தொடங்கப்படும். எஞ்சியுள்ள நதிநீர் இணைப்பு பணிகள் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்படும்.

    கல்லணை அரசுப்பள்ளி

    தொடர்ந்து, நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளியில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதால் இந்த ஆண்டு மாணவிகளின் சேர்க்கை குறைந்துள்ளது. இனிமேல் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை குறையாத அளவிற்கு பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதி களை மேம்படுமங மப்படும். மேலும், பள்ளி அருகில் உள்ள கால்வாயில் அசுத்தமாக இருக்கிறது. அதனையும் சரிசெய்து, பள்ளியில் அதிக கழிப்பறை வசதி, வகுப்பறை வசதி கட்டி கொடுத்து, அனைத்து மாணவிகளும் பயன்பெறும் வகையில் வசதி ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள குழுவின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

    மாவட்ட கலெக்டர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு, தனித்தனியாக வெளியில் அமைந்துள்ள துறைகள் அனைத்தையும் பொதுமக்களின் நலன்கருதி ஒரே இடத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கூடுதல் கட்டிடம்

    அரசு விருந்தினர் மாளிகையில் கூடுதலாக 10 அறைகள் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. ரூ.92 கோடியில் நெல்லை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கல்லணை பள்ளி மாணவிகள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த தேவையை மனுவாக எழுதி மதிப்பீட்டு குழுவினரிடம் வழங்கினர்.

    • திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ்அறிவுறுத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டுதல், சாலை வசதி, குடிநீர் வசதி கோருதல் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 462 மனுக்கள் பெற்று கொள்ளப்பட்டது. அதில் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ்அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு பாதுகாவலர் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் சப்- கலெக்டர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, துணை கலெக்டர்கள் மற்றும் அனைத்து அரசு த்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மனு கொடுக்க வருபவர்களை பரிசோதனை செய்த பிறகு உள்ளே அனுமதித்து வருகிறார்கள்.
    • கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கி ழமை தோறும் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப் பட்டு வருகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக வருகிறார்கள்.

    இதில் சிலர் தீக்குளித்து தற்கொலைக்கு முயலும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதனால் கலெக்டர் அலுவலக வாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்கள் மனு கொடுக்க வருபவர்களை பரிசோதனை செய்த பிறகு உள்ளே அனுமதித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திங்கள் கிழமையான இன்றும் மனு அளிப்பதற்கு ஏராள மானோர் வந்திருந்தனர். அதில் முதியவர் ஒருவர் திடீரென கலெக்டர் அலுவ லக வாசலில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி மயங்கி விழுந்தார். அப்போது கலெக்டர் அலுவ லகத்தில் நடந்த வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் மற்றும் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் அந்த நபரை பிடித்து காப்பாற்றினார்கள். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.

    போலீசார் முதியவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் பூதப்பாண்டி அருமநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுவிசேஷமுத்து (வயது 72) என்பது தெரியவந்தது. அவரது தோட்ட பயிருக்கு வேலி அமைத்து இருந்ததாகவும், அதை 2 பேர் தீ வைத்து எரித்து விட்டதாகவும், இது தொடர்பாக உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இதுதொடர்பாக சம்பந் தப்பட்ட போலீஸ் நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீ சார் உறுதி அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புதிய மாவட்ட கலெக்டர் வளாகத்தில் செப்டம்பர் 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
    • 16-ந்தேதிக்குள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டத்தில் அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறை கேட்பு கூட்டம், புதிய மாவட்ட கலெக்டர் வளாகத்தில் செப்டம்பர் 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில், சென்னை ஓய்வூதிய இயக்குநரால் நடத்தப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை 2 பிரதிகளில் "ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு" என குறிப்பிட்டு வருகிற 16-ந்தேதிக்குள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டிருந்தது. 

    • பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    • கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 450 மனுக்கள் பெறப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையேற்று பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 450 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) செந்தில்குமாரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் கடந்து செல்லும் பாதை எங்கும் போஸ்டர் மயமாக காட்சியளிக்கிறது.
    • வடிவம்மாள் என்ற 80 வயது மூதாட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு கண்ணீருடன் வந்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது:-

    கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் அரசு பள்ளி சுவர்கள், தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறை, பஸ் நிலைய சுவர்கள், பொதுமக்கள் கடந்து செல்லும் பாதை எங்கும் போஸ்டர் மயமாக காட்சியளிக்கிறது.

    இவை வாகனத்தில் செல்வோர்களின் கவனத்தை திசை திரும்பி விபத்துக்கள் உண்டாக காரணமாக அமைந்து விடுகிறது. இதேபோல் நெடுஞ் சாலைகளில் சாலைகளில் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விடுகிறது. எனவே உடனடியாக அரசு இதில் தலையிட்டு கல்விக் கூடங்கள், நெடுஞ்சாலைகள் உட்பட பல்வேறு இடங்களில் அரசு உத்தரவை மீறி போஸ் டர்கள் ஓட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி யிருந்தார்.

    முன்னதாக பொது இடங்களில் போஸ்டர் ஓட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நூதனமான முறையில் அவர் தனது உடலில் போஸ்டர்களை சுற்றி கட்டி மனு அளிக்க வந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.

    தொடர்ந்து பாபநாசம் அணையில் இருந்து கோடகன் கால்வாய் வழி யாக கார் சாகுபடி பணிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பா ளர் மைதீன்கான் தலைமை யில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

    இதில் மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் மாலைராஜா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், ஒன்றிய செயலாளர் மாரியப்பன், வெள்ளாளங்குளம் பஞ்சா யத்து தலைவர் மகாராஜன், மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கல்லூர் மாரியப்பன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் பாளை கக்கன் நகர் அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் வடிவம்மாள் என்ற 80 வயது மூதாட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு கண்ணீருடன் வந்தார். அவர் கலெக்டரிடம் அளித்த மனுவில் எனது கணவரும், மகனும் இறந்து விட்டார்கள் தற்போது எனது பேரன் என்னிடம் இருந்த 3 ஆயிரம் பணத்தை திருடி கொண்டு சென்று விட்டான். மேலும் அவன் என்னை அடித்து துன்புறுத்துகிறான். எனவே எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    உடல் முழுவதும் போஸ்டர்கள் கட்டி கொண்டு வந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார்.

    உடல் முழுவதும் போஸ்டர்கள் கட்டி கொண்டு வந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார்.

    உடல் முழுவதும் போஸ்டர்கள் கட்டி கொண்டு வந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார்.


     


    • ஊராட்சி மன்ற தலைவர்கள் நல அமைப்பு அறிவிப்பு
    • ஒரு பணியும் அவர்கள் ஒப்புதல் இன்றி செய்ய முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் நல அமைப்பின் தலைவர் முத்து சரவணன் நிருபர்களி டம் கூறியதாவது:-

    தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் தற்போது மத்திய அரசு நிதியை கூட செலவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு வருகி றது. இதனால் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீர், சுகாதாரம், சாலை பணிகள் ஆகியவை கூட தற்போது தடைபடும் நிலையில் உள்ளது.

    மேலும் செய்த வேலைகளுக்கு வழக்கமாக ஊராட்சி தலைவர் மூலம் காண்ட்ராக்டர்களுக்கு பில் வழங்கப்பட்டு வருகிறது. பில் பி.எப்.எம்.எஸ். எனும் முறை மூலம் தற்போது வழங்கப் பட்டு வருகிறது.

    அதில், தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் கையெழுத்திட வேண்டும் தற்போது ஆணையர், தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் கையெழுத்தி டவேண்டும் என அறிவுறுத்துள்ளார்.

    இதனால் காண்ட்ராக்டர்க ளுக்கு வழங்கக்கூடிய தொகை கூட முறையாக வழங்க முடியாமல் தடைபட்டு வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் அதி காரத்தை அரசு வேண்டுமென்றே குறைத்து வருவதால் தங்களுக்கு ஒரு பணியும் அவர்கள் ஒப்புதல் இன்றி செய்ய முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

    இது கிராம ஊராட்சி விதிகளுக்கு அப்பாற்பட்ட தாகும். இதனால் இதனை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் நல அமைப்பு சார்பில் நாளை (25-ந்தேதி) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி தலைவர்கள் நல அமைப்பு தலைவர் அஜித்கு மார் தலைமை தாங்குகிறார். ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்து சரவணன், மெற்றில்டா, சதீஷ்குமார், தாமஸ்கென்னடி, அருள்ராஜ், சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேலும் ஊராட்சி தலை வர்கள் நலஅமைப்பு மாநில தலைவர் முனியாண்டி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.
    • பிரதான நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.

    பேச்சுவார்த்தை

    அப்போது அங்கு பிரதான நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டர் அலுவலகத்திற்குள் மனு கொடுக்க அனைவரையும் அனுமதிக்க முடியாது. எந்த கோரிக்கையாக இருந்தாலும் அதிகபட்சம் 5 பேர் மட்டுமே அனுமதிக்க முடியும் என்றனர்.

    இதனை தொடர்ந்து 5 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றனர். அவர்கள் மனு கொடுத்து விட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமூக விரோதிகள் அட்டகாசம்

    வாய்க்கால் பட்டறை அரசு பள்ளி அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த பகுதியில் சமூக விரோதிகள் கஞ்சா விற்பதும், மது குடிப்பதும் என அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் நடந்து செல்லும் பெண்களை தகாத வார்த்தையில் பேசி மிரட்டி வருகின்றனர்.

    மேலும் கடந்த 8-ந் தேதி சிறுமி ஒருவரை தகாத வார்த்தையில் பேசி உள்ளனர். இதனால் தட்டி கேட்ட எங்கள் மீது மர்ம கும்பல் சரமாரியாக தாக்கினர்.

    இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

    எனவே அப்பகுதியில் கஞ்சா, மது குடித்து ரகளையில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக கைது செய்து பொதுமக்களை அச்சமின்றி வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×