search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் அலுவலகம்"

    • போலீசாரும் அங்கு விரைந்து வந்து வள்ளியம்மை மீது தண்ணீரை ஊற்றினர்.
    • தொகையை கேட்டு எனது நிலத்தில் நான் பயிர் வைப்பதற்கு அந்த நபர் இடையூறு செய்து வருகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியை அடுத்த வைராவிகுளத்தை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மனைவி வள்ளியம்மை (வயது 70).

    இவரது மகள் முருகம்மாள். இவர் மணிமுத்தாறில் உள்ள அரசு மீன் பண்ணையில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறு கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளிப்பதற்காக வள்ளியம்மை வந்திருந்தார். அப்போது கூட்ட அரங்கில் வைத்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து தலையில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து பாட்டிலை தட்டி விட்டனர். மேலும் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரும் அங்கு விரைந்து வந்து வள்ளியம்மை மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது வள்ளியம்மை கூறுகையில், கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு நபரிடம் பணம் வாங்கி இருந்தேன். தற்போது அந்த தொகையை கேட்டு எனது நிலத்தில் நான் பயிர் வைப்பதற்கு அந்த நபர் இடையூறு செய்து வருகிறார்.

    எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தேன். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்து இங்கு வந்தேன் என்று கூறினார்.

    • மாற்றுத்திறனாளி மனைவியுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தாசில்தார் அலுவலகத்திலும் மனு அளித்தோம். கடந்த 4 ஆண்டு காலமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. மாற்றுத்திறனாளி. இவரது மனைவி வீரம்மாள்.

    இவர்கள் இருவரும் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் முனுசாமி கூறியதாவது:-

    எங்களுக்கு சொந்தமான 75 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு பட்டா கேட்டு மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், தாசில்தார் அலுவலகத்திலும் மனு அளித்தோம். கடந்த 4 ஆண்டு காலமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இது குறித்து கேட்டதற்கு எங்கள் நிலத்திற்கு அருகில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் எங்கள் நிலத்தின் வழியாக வரவேண்டும் என்பதால் அவர் பட்டா வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தது தெரியவந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போலீசார் முனுசாமி மற்றும் வீரம்மாள் ஆகியோரை சேலம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மாற்றுத்திறனாளி மனைவியுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இருவருக்கும் பாகப்பிரிவினை செய்யப்பட்டு 2.75 ஏக்கர் பிரித்து கொடுக்கப்பட்டது.
    • சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அருக்காணி என்பவருக்கும் அவரது அக்கா மாரத்தாள் என்பவருக்கும் பூர்வீக சொத்தாக திருப்பூர் மாவட்டம் முத்து கவுண்டம்பாளையத்தில் 5.30 ஏக்கர் நிலம் உள்ளது. இருவருக்கும் பாகப்பிரி வினை செய்யப்பட்டு 2.75 ஏக்கர் பிரித்து கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில் மாரத்தாள் மற்றும் அவரது மகன் ஆகியோர் அருக்காணிக்கு சேர வேண்டிய 2.75 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அருக்காணி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்தநிலையில் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அருக்காணி மற்றும் அவரது மகன் குப்புசாமி ஆகியோர் திடீரென உடலில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

    உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 2பேர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • மயிலாடி அடுத்த லட்சுமிபுரம் ஊரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
    • 1½ கிலோ மீட்டருக்கு அப்பால் நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    நாகர்கோவில் :

    மயிலாடி அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடி அடுத்த லட்சுமிபுரம் ஊரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த ஊரை சேர்ந்த தனி நபர் ஒருவரின் இடத்தில் குடியிருப்பு பகுதிகள் உள்ள இடத்தில் மிகப்பெரிய அளவில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அந்த இடத்தில் டவர் அமைக்கும் பட்சத்தில் இப்பகுதி பொதுமக்களுக்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இப்பகுதியில் வசிக்கும் பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படும். எனவே இதை பரிசீலனை செய்து குடியிருப்பு பகுதியில் அமைய இருக்கும் இந்த தனியார் செல்போன் டவரை நிறுத்தி, இப்பகுதியில் இருந்து 1½ கிலோ மீட்டருக்கு அப்பால் நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மகன்களிடம் இருந்து சொத்தை மீட்டுதர கோரிக்கை
    • தங்களை பராமரிக்காமல் கைவிட்டு விட்டதாகவும் அவர்கள் கூறினர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மற்ற நாட்களிலும் பொதுமக்கள் மனு அளித்து செல்கிறார்கள். மனு அளிக்க வருபவர்கள் தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருவதை தடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பூதப்பாண்டி அருகே நடுவூர் பகுதியை சேர்ந்த வயதான தம்பதியினர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்களது சொத்தை மகன்கள் எழுதி வாங்கி விட்டதாகவும், அதன் பிறகு தங்களை பராமரிக்காமல் கைவிட்டு விட்டதாகவும் அவர்கள் கூறினர்.

    எனவே அந்த சொத்தை மீண்டும் எங்களுக்கு மீட்டு தர வேண்டும் என்று கூறி மனு அளித்தனர். திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலக பகுதியில் தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் வந்து இப்படி தர்ணா போராட்டத்தில் ஈடுபடக்கூடாது
    • கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வாலிபர் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க வந்த வாலிபர் ஒருவர் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பெய்த மழையையும் பொருட் படுத்தாமல் தரையில் அமர்ந்து கோஷமிட்டார். உடனே கலெக்டர் அலுவ லகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட அவரை சமாதானம் செய்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீ சாரிடம் அந்த வாலிபர் கூறியதாவது:-

    எனது பெயர் ரமேஷ் (வயது 31). எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. எனக்கு சகோதரர்கள் உண்டு. நான் பிறந்ததில் இருந்து எங்களது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறேன்.

    இந்த நிலையில் எனது உறவினர்கள் சிலர் என்னை வீட்டை விட்டு துரத்தி வெளியேற்றினர். இதனால் கடந்த 2 நாட்களாக வீடு இன்றி பொது இடங்களில் ஓய்வெடுத்து வருகிறேன். மேலும் எனது வீட்டை முழுமையாக அபகரிக்க முயல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத்தொடர்ந்து போலீசார் ரமேசிடம், "கலெக்டர் அலுவலகத்தில் வந்து இப்படி தர்ணா போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. தங்களது புகாரை மனுவாக கலெக்டர் அலுவல கத்தில் அளிக்க வேண்டும்" என்றனர். இதையடுத்து ரமேஷ் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு வீடு திரும்பினார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வாலிபர் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கலைஞர் உரிமைத்தொகை பலருக்கு கிடைக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • தொலைபேசி எண்கள் இல்லாமல் முதியவர்கள் பலருக்கும் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    தென்காசி:

    தமிழ்நாடு அரசின் சார்பில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் உரிமை தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

    ரூ. 1000 உரிமைத்தொகை

    இருப்பினும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பெண்கள் அந்நிறுவனங்களின் சார்பில் ஓய்வு தொகையைப் பெற்று வந்தாலும் தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்படும் கலைஞர் உரிமைத்தொகை ரூ. 1000 பலருக்கும் கிடைக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக எவ்வித ஓய்வூதிய மும் பெறாமல் இருந்து வரும் வயதான முதியவர்கள் பலருக்கும் தொலைபேசி எண்கள் எதுவும் இல்லாமல் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    மூதாட்டி கோரிக்கை

    அதன்படி நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மந்தியூர் ஊராட்சி பிள்ளை யார்குளம் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மூதாட்டிகள், முன்னர் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டதன் காரணமாக அதற்கு ஓய்வூதியமாக மாதம் ரூ. 700 பெற்று வருகிறோம்.

    ஆனால் தற்போது தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் கலைஞர் உரிமைத்தொகை ரூ. 1000 பெறுவதற்கு பதிவு செய்தி ருந்தும் கிடைக்கவில்லை. எனவே பீடி தொழிலாளர்க ளாகிய வயதான எங்களுக்கு ஆயிரம் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கலெக்டர் ரவிச்சந்திரனை சந்தித்து மனு அளித்தனர்.

    • கலெக்டர் அலுவலகத்திற்கு வாயில் கருப்பு துணி கட்டியபடி வந்தனர்.
    • ஆலய நிலங்கள் சட்டத்திற்கு புறம்பாகவும், சட்டவிரோதமாகவும் விற்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    இந்து மக்கள் கட்சி கடலூர் மாவட்ட தலைவர் தேவா தலைமையில் பொதுச் செயலாளர் சக்திவேல், அமைப்பு பொதுச் செயலாளர் ஜம்புலிங்கம், கடலூர் ஒன்றிய தலைவர் ஜெகநாதன், மாவட்ட செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வாயில் கருப்பு துணி கட்டியபடி வந்தனர்.

    பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-  பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஆறுகால கட்டளை பூஜைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், பல ஏக்கர் விவசாய நிலங்கள் கணக்கில் இருக்கின்றதா? இல்லையா? என உண்மை தன்மையை கண்டறிந்து சொத்துக்களை மீட்க உயர்மட்ட விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். ஆலய கட்டளை மற்றும் ஆலய நிலங்கள் சட்டத்திற்கு புறம்பாகவும், சட்டவிரோதமாகவும் விற்கப்பட்டுள்ளது.

    அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலின் உள்ளே செயல் அலுவலர் அலுவலகம் செயல்படுவதால் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் வெளியூரிலிருந்து வருவோருக்கு திருமண பதிவு சான்றிதழ் பெறுவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. அதனால் அலுவலகத்தை கோவிலின் வெளிப்புறம் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வாயில் கருப்பு துணி கட்டி மனு அளிக்க வந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை அளிக்க அதிகளவில் பொதுமக்கள் குவிந்தனர்.
    • கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் வாரந் தோறும் திங்கட்கிழமை குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் தங்களுக்கு முதியோர் பணம், பட்டா, குடும்ப அட்டை மற்றும் பிரச்சினை களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுப்பார்கள்.

    இந்த மனு மீது அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளை கலெக்டர் நேரில் அழைத்து பேசி உடனடியாக தகுதியு டைய மனுக்களுக்கு நட வடிக்கைகள் எடுக்க வலி யுறுத்துவார்.இதன் காரணமாக திங்கட்கிழமை களில் கலெக்டர் அலுவல கத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 15-ந் தேதி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 கலைஞர் உரிமை தொகை வழங்கிட ஆணை பிறப்பித்து அதை நிறை வேற்றும் வகையில் ஒவ்வொரு குடும்ப தலைவி களுக்கும் அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப் பட்டது.

    இந்த உரிமை தொகை கிடைக்காத நபர்கள் தங்கள் அருகே உள்ள இ-சேவை மையத்தில் மேல்முறையீடு மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் இன்று (திங்கட்கிழமை) மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்திருந்தனர். இதில் பெரும்பாலும் உரிமை தொகை தொடர்பான மனுக்களாக இருந்தது. மனுக்களை பெற்று கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.

    • வாழை தோட்டம் விவகாரத்தில் புகார் கொடுத்தும் 4 மாதமாக அலைக்கழிக்கப்படுவதாக வேதனை
    • இழப்பீட்டுக்கு நஷ்டஈடாக ரூ.1½ லட்சம் வழங்க உத்தரவிடவேண்டும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எராளமானோர் வந்து மனுக்களை கொடுத்து வந்தனர். மனுக்கள் கொடுக்க வந்தவர்களை போலீசார் சோதனை செய்தே கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.

    இந்த நிலையில் மனுவுடன் வந்த பெண் ஒருவர், திடீரென கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள், தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணை அங்கிருந்து அகற்ற முயன்றனர். அப்போது அந்தப் பெண், தனக்கு சொந்தமான வாழை தோட்டம் தொடர்பாக கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் 4 மாதம் அலைக்கழிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார். அவரை சமரசம் செய்த போலீசார், அங்கிருந்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்தப் பெண் பெயர் ராதிகாகுமாரி என்பதும், மாங்கரை அருகே உள்ள கல்லுவிளை காட்டுவிளையைச் சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி என்பதும் தெரியவந்தது.

    அவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்க கொண்டு வந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பாலூர் தேசம் பகுதியில் எங்களுக்குச் சொந்தமான இடத்தில் 350 வாழைகள் நட்டு விவசாயம் செய்துள்ளேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு, எனது கணவரின் தம்பி வின்சென்ட் அவரது மனைவி ஜெபராணி ஆகியோர் வந்தனர். அவர்கள் 150 வாழைக்குலைகளை வெட்டி சேதப்படுத்தினர். இதுபற்றி நானும் கணவரின் சகோதரி லிசியும் சென்று கேட்டபோது, வின்சென்ட் அவதூறு பேசி கொலைமிரட்டல் விடுத்தார்.

    இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் கருங்கல் போலீசில் புகார் செய்தேன். தாசில்தார், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்தேன். ஆனால் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. கோர்ட்டிலும் வழக்கு உள்ளது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு, ஆன்லைன் மூலம் வின்செண்ட் பற்றி புகார் அளித்தேன். இருப்பினும் கடந்த 4 மாதங்களாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வின்சென்ட் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுப்பதோடு, எனக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பீட்டுக்கு நஷ்டஈடாக ரூ.1½ லட்சம் வழங்க உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக குவிந்த பொதுமக்கள்
    • 9 இடங்களில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில், செப்.20-கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 75 சதவீதம் பேருக்கு உரிமை தொகை கிடைத்துள்ளது. பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. நிராகரிப்பு குறித்து இதுவரை செல்போனில் எந்த ஒரு குறுஞ்செய்தியும் வரவில்லை. எனவே கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பணம் கிடைக்காதவர்கள் உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குமரி மாவட்டத்தை பொருத்த வரை அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர் மற்றும் திருவட்டார் ஆகிய 6 தாலுகா அலுவலகங்கள் மற்றும் நாகர்கோவில் கோட்டாட்சியர் அலுவலகம், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகம் என மொத்தம் 9 இடங்களில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த மையங்களில் 5 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பித்த பலரும் இங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஏராளமான பொதுமக்கள் உதவி மையங்களுக்கு வந்திருந்தனர். ஆனால் சர்வர் செயல்படாதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி மையத்திற்கு இன்று 2-வது நாளாக காலையிலேயே ஏராளமான பொதுமக்கள் வந்தனர். அவர்கள் உதவி மையங்களில் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை கேட்டு காத்திருந்தனர். காலை 10.15 மணிக்கு உதவி மைய ஊழியர்கள் ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டை சரி பார்த்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்தனர்.

    சிலருக்கு வங்கி கணக்கு குளறுபடி, வருமான வரி பிரச்சினை உள்பட பல்வேறு காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உதவி மையங்களுக்கு வந்த பொதுமக்களின் முகவரிகள் மற்றும் செல்போன் எண்களை பதிவு செய்துவிட்டு ஆன்லைன் மூலமாக குறைபாடுகளை பார்த்து பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதே போல் தாலுகா அலுவலகங்களில் உள்ள உதவி மையங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • பல்வேறு பகுதிகளிலும் நாய்களை பிடிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
    • 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 45 போலீசார் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகள் மற்றும் கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கடந்த சில நாட்களாக நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்தன.

    இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மகேஷ் உறுதி அளித்தார். அதன்பேரில் மாநகராட்சி பகுதிகளில் நாய்களை பிடிக்கும் பணி தொடங்கியது.

    இன்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்தப் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். சுமார் 10 நாய்கள் அந்தப் பகுதியில் பிடிபட்டன. அவற்றை வேனில் ஏற்றி கருத்தடை செய்ய கொண்டு சென்றனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் நாய்களை பிடிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

    நாகர்கோவில் கணேசபுரத்தில் பூங்காவுடன் கூடிய போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு கோட்டார் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 45 போலீசார் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சமீப காலங்களில் பூங்காவில் சிறுவர்-சிறுமிகளை அச்சுறுத்தும் வகையில் மாடுகளும், நாய்களும் திரிந்து வருகின்றன. வழியை மறித்து படுத்திருக்கும் மாடுகள் எழுந்திருக்க மறுப்பதால், பூங்காவுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஓடி விளையாடும் சிறுவர்-சிறுமிகளை நாய்கள் விரட்டுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையை மாற்ற மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    ×