

நாகர்கோவில், அக்.27-
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சி பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர் .போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரசேகர் உட்பட 11 பேர் மீது நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.