என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 10 நாய்கள் பிடிபட்டன
- பல்வேறு பகுதிகளிலும் நாய்களை பிடிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
- 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 45 போலீசார் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகள் மற்றும் கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கடந்த சில நாட்களாக நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்தன.
இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மகேஷ் உறுதி அளித்தார். அதன்பேரில் மாநகராட்சி பகுதிகளில் நாய்களை பிடிக்கும் பணி தொடங்கியது.
இன்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்தப் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். சுமார் 10 நாய்கள் அந்தப் பகுதியில் பிடிபட்டன. அவற்றை வேனில் ஏற்றி கருத்தடை செய்ய கொண்டு சென்றனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் நாய்களை பிடிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
நாகர்கோவில் கணேசபுரத்தில் பூங்காவுடன் கூடிய போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு கோட்டார் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 45 போலீசார் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீப காலங்களில் பூங்காவில் சிறுவர்-சிறுமிகளை அச்சுறுத்தும் வகையில் மாடுகளும், நாய்களும் திரிந்து வருகின்றன. வழியை மறித்து படுத்திருக்கும் மாடுகள் எழுந்திருக்க மறுப்பதால், பூங்காவுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஓடி விளையாடும் சிறுவர்-சிறுமிகளை நாய்கள் விரட்டுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையை மாற்ற மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்