search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நாளை ஆர்ப்பாட்டம்
    X

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நாளை ஆர்ப்பாட்டம்

    • ஊராட்சி மன்ற தலைவர்கள் நல அமைப்பு அறிவிப்பு
    • ஒரு பணியும் அவர்கள் ஒப்புதல் இன்றி செய்ய முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் நல அமைப்பின் தலைவர் முத்து சரவணன் நிருபர்களி டம் கூறியதாவது:-

    தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் தற்போது மத்திய அரசு நிதியை கூட செலவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு வருகி றது. இதனால் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீர், சுகாதாரம், சாலை பணிகள் ஆகியவை கூட தற்போது தடைபடும் நிலையில் உள்ளது.

    மேலும் செய்த வேலைகளுக்கு வழக்கமாக ஊராட்சி தலைவர் மூலம் காண்ட்ராக்டர்களுக்கு பில் வழங்கப்பட்டு வருகிறது. பில் பி.எப்.எம்.எஸ். எனும் முறை மூலம் தற்போது வழங்கப் பட்டு வருகிறது.

    அதில், தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் கையெழுத்திட வேண்டும் தற்போது ஆணையர், தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் கையெழுத்தி டவேண்டும் என அறிவுறுத்துள்ளார்.

    இதனால் காண்ட்ராக்டர்க ளுக்கு வழங்கக்கூடிய தொகை கூட முறையாக வழங்க முடியாமல் தடைபட்டு வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் அதி காரத்தை அரசு வேண்டுமென்றே குறைத்து வருவதால் தங்களுக்கு ஒரு பணியும் அவர்கள் ஒப்புதல் இன்றி செய்ய முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

    இது கிராம ஊராட்சி விதிகளுக்கு அப்பாற்பட்ட தாகும். இதனால் இதனை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் நல அமைப்பு சார்பில் நாளை (25-ந்தேதி) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி தலைவர்கள் நல அமைப்பு தலைவர் அஜித்கு மார் தலைமை தாங்குகிறார். ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்து சரவணன், மெற்றில்டா, சதீஷ்குமார், தாமஸ்கென்னடி, அருள்ராஜ், சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேலும் ஊராட்சி தலை வர்கள் நலஅமைப்பு மாநில தலைவர் முனியாண்டி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×