search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்றவர்களின் குறை கேட்பு கூட்டம்
    X

    கடலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்றவர்களின் குறை கேட்பு கூட்டம்

    • புதிய மாவட்ட கலெக்டர் வளாகத்தில் செப்டம்பர் 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
    • 16-ந்தேதிக்குள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டத்தில் அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறை கேட்பு கூட்டம், புதிய மாவட்ட கலெக்டர் வளாகத்தில் செப்டம்பர் 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில், சென்னை ஓய்வூதிய இயக்குநரால் நடத்தப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை 2 பிரதிகளில் "ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு" என குறிப்பிட்டு வருகிற 16-ந்தேதிக்குள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    Next Story
    ×