search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவ மாணவிகள்"

    • “நீயா நானா” கோபிநாத் கலந்து கொண்டு மாணவர்கள் இடையே கலந்துரையாடினார்
    • மாணவர்களுக்கிடையே வெற்றி பெற வேண்டும் என்ற தூண்டு தலையும் ஏற்படுத்தினார்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந் துள்ள ரோகிணி பொறி யியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை பொறியியல் முதலாம் ஆண்டு மாணவ மாணவி களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். பேராசிரியை தங்கம் வரவேற்புரை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தனியார் டிவி புகழ் "நீயா நானா" கோபிநாத் கலந்து கொண்டு மாணவர்கள் இடையே கலந்துரையாடினார்.அப்போது அவர் நேரத்தின் முக்கியத்து வம் பற்றியும், மன அழுத்தத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது பற்றியும், தன் துறையில் தனித்துவம் பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைத்து, மாணவர்களுக்கிடையே வெற்றி பெற வேண்டும் என்ற தூண்டு தலையும் ஏற்படுத்தினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களைமுதலாம் ஆண்டு துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர், பேராசிரியை செய்து இருந்தனர். முடிவில் பேராசிரியை ஜார்ஜ் மேரி ஆர்த்தி நன்றி கூறினார்.

    • பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
    • சிறப்பு அழைப்பாளராக தவமணி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    கோவில்பட்டி:

    பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நற்பணி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். சிலம்ப பயிற்சி ஆசிரியர் சண்முகசுந்தர கணபதி, நகர்மன்ற உறுப்பினர் லவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக 14 -வது வார்டு நகர் மன்ற உறுப்பினரும், தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட துணை தலைவரும் பொறியாளருமான தவமணி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் நிவேதா, குழந்தைகள் நலப் பணியாளர் சபீனா ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தாஸ் நிஷா பேகம், மேற்பார்வையாளர்கள் அமுதம்மாள், பாலம்மாள், கனக லட்சுமி மற்றும் மன்ற ஆலோசகர் பாலமுருகன் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    • சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர். பிரகலாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை
    • சுமார் 70 மாணவ மாணவிகளுக்கு ஒளி ஏற்றிவைத்தனர்

    கன்னியாகுமரி :

    தலக்குளம் பிஎஸ் நர்சிங் கல்லூரி மற்றும் பள்ளியின் முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கான தீப ஒளியேற்றும் விழா நடைபெற்றது.

    விழாவில் கல்லூரியின் தாளாளர் நரம்பியல் நிபுணர் டாக்டர் ப.ஆறுமுகம், தலைமை தாங்கினார். மருத்துவப்பணிகள் மற்றும் ஊரக சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர். பிரகலாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி பேராசிரியை சுபிதாஜினி வரவேற்புரை வழங்கினார்.

    இவ்விழாவில் கல்லுரி நிர்வாக அதிகாரி குற்றாலம் பிள்ளை, மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர். சரோஜினி, நரம்பி யல் நிபுணர் டாக்டர். பழனியாண்டி, குழந்தை நல நிபுணர் டாக்டர்.சுனிதா, குடியுரிமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஜூலியா, பி.எஸ் கல்லூரி முதல்வர் டாக்டர். அமுது மற்றும் மக்கள்தொடர்பு அதிகாரி நாராயணபிள்ளை ஆகியோர் பங்கேற்றனர்.

    கைவிளக்கு ஏந்திய காரிகையான நைட்டிங்கே லின் விளக்கை பி.எஸ்.மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர்.டோரல் டுவா ஏற்ற அதைத்தொடர்ந்து பி.எஸ் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர்.ஜோஸ்பின் சுதா, மற்றும் பேராசிரியை பால் சஜிலா, ஆகியோர் சுமார் 70 மாணவ மாணவிகளுக்கு ஒளி ஏற்றிவைத்தனர். பின் பி.எஸ் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அமுது உறுதிமொழி மாணவர்க ளுக்கு உரைத்தார்.

    விழாவின் முடிவில் கல்லூரி பேராசிரியர் அபிஷாபெல் நன்றியுரை யாற்றினார்.

    ×