என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்; 200 பேர் கைது
- மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ள தினக்கூலி ஊதியம் ரூ.690 வழங்க வேண்டும்.
- சாலை மறியல் போராட்டத்தில் கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
நாகர்கோவில் :
மாநகராட்சி, நகராட்சி கள், பேரூராட்சிகளில் நிரந்தர பணியாளர்களை நீக்கி தனியாரிடம் தாரை வார்க்கும் அரசாணையை கைவிட வேண்டும். டெங்கு பணியாளர்கள் அனைவரையும் முழு நேர பணியாளர்களாக அறிவித்து மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ள தினக்கூலி ஊதியம் ரூ.690 வழங்க வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தினக்கூலி, சுய உதவிக்குழு, ஒப்பந்த தொழிலாளி என பல்வேறு பெயர்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பேரூராட்சிகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு குமரி மாவட்ட கிளை சார்பில் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத் திற்கு குமரி மாவட்ட உள்ளாட்சி ஊழியர் சங்க செயலாளர் ஸ்டாலின் தாஸ் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் சுடலை மற்றும் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரம், மாநில குழு உறுப்பினர்கள் அந்தோணி, இந்திரா, சித்ரா, பெருமாள் உள்பட ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முற்றுகையிட வந்த போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்தபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
சாலை மறியல் போராட்டத்தில் கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் பஸ்களில் ஏற்றி அந்த பகுதியில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்