search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓணம் பண்டிகை"

    • கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டனர்.
    • குன்னூர் ரெயில் நிலையம், வெலிங்டன், ராணுவ மையம் போன்றவற்றிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக நடந்தது.

    கோவை:

    கேரள மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஓணம் திருவிழா. இந்த பண்டிகை 10 நாட்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு ஓணப்பண்டிகை கடந்த 20-ந் தேதி அத்தப்பூ கோலமிடுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கேரள மக்கள் தங்கள் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட தொடங்கினர். 10 நாட்களிலும் 10 வகை பூக்களை வைத்தும் அத்தப்பூ கோலம் போட்டும் பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

    10-வது நாளான இன்று ஓணம் பண்டிகை வெகுவிமரிசையாக கேரள மக்களால் கொண்டாடப்பட்டது.

    கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை, நீலகிரியிலும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் வாளையார், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைக்கட்டி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதி கேரள எல்லையில் உள்ள பகுதிகளாகும். இங்கு கேரள மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள்.

    கோவை மாநகரில் சித்தாபுதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவிலான கேரள மக்கள் வசித்து வருகின்றனர். இதுதவிர அங்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலும் உள்ளது.

    இன்று இங்குள்ள மக்கள் அதிகாலையிலேயே எழுந்து, தங்கள் வீடுகள் முன்பு பெரிய அளவிலான பூக்கோலங்களை வரைந்து, மாவேலி மன்னனை வரவேற்று ஓணம் பண்டிகையை கொண்டாடினர். தொடர்ந்து தங்கள் பாரம்பரிய உடையணிந்து வீட்டில் பல வகை உணவுகளை தயாரித்து சுவாமிக்கு படையல் வைத்து சாமி கும்பிட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபட்டனர். கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டனர். அங்கு வந்திருந்த அவர்களது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 500 கிலோ பூக்களை கொண்டு அத்தப்பூ கோலம் மற்றும் கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இது அங்கு வந்திருந்தவர்களை மிகவும் கவர்ந்தது. பக்தர்கள் அத்தப்பூ கோலத்தை பார்வையிட்டனர்.

    மேலும், தங்களது சொந்தபந்தங்கள், அக்கம்பக்கத்தினருக்கு உணவு, உடை மற்றும் பரிசு பொருட்களை அளித்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டனர். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்பது கேரளா பழமொழி. அதற்கேற்ப, அறுசுவைகளில் கசப்பை தவிர மற்ற காய்கறிகளை வைத்து 64 வித உணவு வகைகளை கேரள மக்கள் தயாரித்து பரிமாறி மகிழ்ந்தனர்.

    இதுதவிர திருவாதிரைக் களி நடனம், ஊஞ்சல் கட்டி ஆடுவது, கயிறு இழுத்தல், பாடல்களை இசைக்க விட்டு அதற்கு ஏற்ப நடனம் ஆடுவது, புலி வேஷமிட்டு நடனமாடுவது என பல வகைகளிலும் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    பல்வேறு பாடல்களுக்கு ஆயிரக்கணக்கான மகளிர் ஒன்றாக இணைந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக ஓணம் திருவிழாவை கொண்டாடியது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர். இதேபோல மாவட்டம் முழுவதும் ஓணம் பண்டிகைகளை கட்டி உள்ளது.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஓணம் பண்டிகைகளை கட்டியது. குன்னூர் ரெயில் நிலையம், வெலிங்டன், ராணுவ மையம் போன்றவற்றிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக நடந்தது.

    பூக்கோலமிட்டு, மாவேலி அரசரை பொதுமக்கள் வரவேற்றனர். தொடர்ந்து தங்கள் பாரம்பரிய நடனமான திருவாதிரை நடனமாடினர்.

    கேரளாவில் தொடர் விடுமுறை என்பதால் நீலகிரிக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வந்துள்ளனர். அவர்கள் சுற்றுலா தலங்களில் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    • அனைத்து துறை மாணவ-மாணவிகளுக்கிடையே அத்தப்பூ கோலபோட்டி நடைபெற்றது
    • அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமை ந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டா டப்பட்டது. ரோகிணி கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.விழாவை யொட்டி அனைத்து துறை மாணவ-மாணவிகளும் புத்தாடை அணிந்து, ஊஞ்ச லாடி, இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

    மேலும் அனைத்து துறை மாணவ-மாணவிகளுக்கிடையே அத்தப்பூ கோலபோட்டி நடைபெற்றது. விழாவில் கல்லூரி துணை தலைவர் பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசி ரியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • பெண்கள் ஊஞ்சலாடி மகிழ்ந்தனர்
    • புத்தாடைகளை அணிந்து பெண்கள் ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    நாகர்கோவில் :

    கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

    நாகர்கோவிலில் வடசேரி பகுதிகளில் பொதுமக்கள் ஓண ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகளை அணிந்து ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் அவர்கள் ஓண ஊஞ்சலாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகளிலும் ஓண ஊஞ்சல் வீடுகள் முன்பு கட்டப்பட்டிருந்தது. அதில் குடும்பத்தோடு ஆடி மகிழ்ந்தனர். வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமும் போடப்பட்டிருந்தது. பல்வேறு கலரிலான பூக்களில் பெண்கள் கோலமிட்டு மகிழ்ந்தனர். வடசேரி கிருஷ்ணன்கோவில் வடிவீஸ்வரம், பார்வதிபுரம் வெட்டூர்ணிமடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளும் முன்பு அத்தபூக்கோலம் போடப்பட்டிருந்தது. கேரளாவை ஒட்டியுள்ள களியக்காவிளை, மார்த்தாண்டம், மேல்புறம், குழித்துறை, தக்கலை பகுதிகளிலும் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    இதையடுத்து அந்த பகுதிகளில் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலம் போடப்பட்டுள்ளது. புத்தாடைகளை அணிந்து பெண்கள் ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    ஓணம் பண்டிகையைடுத்து இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டிலும் வியாபாரிகள் பூக்களை வாங்குவதற்கு வந்திருந்தனர். நேற்று முன்தினம் ஓணம் பண்டிகையையொட்டி விடிய விடிய பூக்கள் வியாபாரம் நடந்தது.

    ராயக்கோட்டை, பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை, திண்டுக்கல், சங்கரன்கோவில் பகுதியில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மாவட்டத்தில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வந்து இருந்தது.

    பிச்சிப்பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டது. மற்ற பூக்கள் குறைவான அளவில் விற்பனையானதால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.

    • திண்டுக்கல்லில் வசித்து வரும் தமிழக வாழ்வு கேரளா மக்கள் இன்று ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
    • பாலகிருஷ்ணாபுரம் விஸ்தரிப்பு பகுதி சர்வேயர் நகரில் கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வீட்டு வாசலில் அத்தப்பூ கோல மிட்டு மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றனர்.

    திண்டுக்கல்:

    கேரளாவில் பிரசித்தி பெற்ற பண்டிகைகளுள் ஒன்று ஓணம் பண்டிகை. பண்டிகை நாளன்று மக்கள் வீட்டின் முன்பு பலவகை வண்ண பூக்களை கொண்டு அத்தப்பூ கோலமிடுவர். புத்தாடை அணிந்து, 10க்கும் மேற்பட்ட உணவு வகைகளை சமைத்து அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்தளித்து கொண்டாடி மகிழ்வர். ஓணம் பண்டிகை கேரள மாநிலம் மட்டுமின்றி தேனி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி போன்ற கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி திண்டுக்கல்லில் வசித்து வரும் தமிழக வாழ்வு கேரளா மக்கள் இன்று ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். பாலகிருஷ்ணாபுரம் விஸ்தரிப்பு பகுதி சர்வேயர் நகரில் கேரளாவைச் சேர்ந்த செந்தில் - பினு தம்பதியினர், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வீட்டு வாசலில் அத்தப்பூ கோல மிட்டு மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றனர்.

    10 நாட்களாக வீட்டு வாசலில் மலர்களால் கோலமிட்டு வந்தனர். இன்று பவள மல்லி, தாமரை, வாடாமல்லி, டோரியா, சம்பங்கி உள்ளிட்ட 9 வகையான பூக்கள் கொண்டு 10 அடுக்கு வரிசையில் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் உறவினர்களுடன் பருப்பு, பால் பாயசம், அப்பளம், இஷ்டு, அவியல், ஓலன், காலன், புளி இஞ்சி உள்ளிட்ட 12 வகையான உணவு பதார்த்தங்கள் உடன் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

    • சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளத்தின் அறுவடைத்திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
    • அனைத்து வீடுகளின் முன்பும் அத்தப்பூ கோலங்கள் வரையப்பட்டிருந்ததால் எங்கு பார்த்தாலும் வண்ணமயமாக காட்சியளித்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகை ஓணம்.

    மகாபலி சக்கரவர்த்தியை சூழ்ச்சியால் வீழ்த்திட திருமால் வாமனராக அவதரித்து பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாக கேட்டதாகவும், அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன் முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களை காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்பது வரலாறு.

    அதன்படி மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுக்கு ஒருமுறை மக்களை காண வருவதாகவும், அவரை வரவேற்கும் விதமாக திருவோண திருநாளாவை கேரள மக்கள் கொண்டாடுகின்றனர். சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளத்தின் அறுவடைத்திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை கடந்த 20-ந்தேதி தொடங்கியது. அன்று முதலே கேரள மாநிலம் ஓணம் கொண்டாட்டத்தால் களைகட்ட தொடங்கியது.

    மாநிலத்தில் பல இடங்களில் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளும் நடைபெற்றன. பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் நடந்த ஓணம் கொண்டாட்டங்களில் மாணவ-மாணவிகள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் ஓணம் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து மக்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராடி புத்தாடைகள் அணிந்தனர். பின்பு உறவினர்கள், நண்பர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக வீட்டு வாசலில் போடப்படும் அத்தப்பூ என்ற பூக்கோலம் ஆகும். அதன்படி இன்று அனைவரின் வீடுகளின் முன்பும் வண்ண வண்ண மலர்களால் அத்தப்பூ கோலங்கள் வரையப்பட்டிருந்தன.

    அனைத்து வீடுகளின் முன்பும் அத்தப்பூ கோலங்கள் வரையப்பட்டிருந்ததால் எங்கு பார்த்தாலும் வண்ணமயமாக காட்சியளித்தது. அது மட்டுமின்றி பல இடங்களில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடந்தன. அதில் வயது வித்தியாசமின்றி அனைவரும் கலந்துகொண்ட ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் தங்களின் வீடுகளில் பல வகையான சிறப்பு உணவுகள் தயார் செய்தனர். ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் பல வகையான உணவுகளை தயாரித்து குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    மேலும் தங்களின் வீட்டில் தயாரித்த உணவு பதார்த்தங்களை அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தால் கேரள மாநிலம் முழுவதும் இன்று களை கட்டி காணப்பட்டது.

    கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படவில்லை. அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளின் படியே ஓணம் கொண்டாடப்பட்டது. வீட்டில் இருந்தாலும் முகக்கவசம் அணிந்தபடியே அனைவரும் காணப்பட்டனர். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று இல்லாத காரணத்தால் 3 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் முகக்கவசம் அணியாமல் ஓணம் பண்டிகை கொண்டாடியதை காண முடிந்தது.

    • ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் விலை உயர்ந்து உள்ளது.
    • கனகாம்பரம் கிலோ ரூ.400-க்கும் மல்லி-ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    போரூர்:

    ஓணம் பண்டிகை நாளை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூக்கள் விலை சற்று அதிகரித்து உள்ளது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், சேலம் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இன்று 40 வாகனங்களில் பூக்கள் விற்பனைக்கு குவிந்து இருந்தன.

    ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் விலை உயர்ந்து உள்ளது. கனகாம்பரம் கிலோ ரூ.400-க்கும் மல்லி-ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை விபரம் (கிலோவில்) வருமாறு:-

    சாமந்தி- ரூ.100வரை, பன்னீர் ரோஸ்-ரூ.70, சாக்லேட் ரோஸ்-ரூ.120, அரளி- ரூ.200, மல்லி-ரூ.300, முல்லை-ரூ.180, ஜாதி-ரூ.240, சம்பங்கி-ரூ.150, கனகாம்பரம் -ரூ.400.

    இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூ விற்பனை விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிகாலை முதலே மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பூ கடைக்காரர்களின் வரத்து குறைந்து இருந்தது. பூ விற்பனை மந்தமாகவே நடந்து வருகிறது என்றனர்.

    • கேரள மக்கள் போட்டி போட்டு தோவாளை பூச்சந்தைக்கு வந்து பூக்கள் வாங்கி செல்கிறார்கள்
    • பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்

    ஆரல்வாய்மொழி :

    மலையாள மொழி பேசும் மக்கள் எல்லாம் வாழுகின்ற இடங்களில் கொண்டாடப்படும் ஓணம். நாளை திருவோணம் அத்தப்பூ கோலமிட்டு உலகை காண வரும் மாவேலி மன்னனை வரவேற்க மக்கள் தயாராக உள்ளதால் அத்தப்பூ கோலமிட தேவையான பூக்கள் அனைத்தும் தோவாளை பூச்சந்தையில் கிடைக்கும் என்பதால் கேரள மக்கள் போட்டி போட்டு தோவாளை பூச்சந்தைக்கு வந்து பூக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 300 டன் பூக்கள் ராயக்கோட்டை, பெங்களூர், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து லாரிகளில் பூக்கள் வந்து இறங்கியது. நேற்று முன்தினம் தொடங்கிய வியாபாரம் விடிய விடிய நடந்து வருகிறது.

    ஆனாலும் பூக்கள் விலை குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.500, பிச்சிப்பூ ரூ.600, பட்ட ரோஸ் ரூ.200, அரளி ரூ.150, சேலம் அரளி ரூ.400, சம்பங்கி ரூ.250, கிரோந்தி ரூ.100, மஞ்சள் கிரோந்தி ரூ.70, கொழுந்து ரூ.120, மரிக்கொழுந்து ரூ.140, தாமரை ரூ.5, துளசி ரூ.40, பச்சை ரூ.10, கோழிப்பூ ரூ.100 உள்ளிட்ட பல பூக்களும் விலை குறைந்து காணப்படுகிறது. பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ரூ.1000, ரூ.2 ஆயிரம் என விற்பனையான பூக்கள் இந்த ஆண்டு விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேரள மாநிலத்தில் போலீசார் பலர் சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
    • போலீஸ் சீருடையணிந்து கொண்டு வீடியோ எடுத்து வெளியிடுவதால், அது சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவனந்தபுரம்:

    இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கும் பலர், அதில் தாங்கள் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சிலர் அதிக லைக்குகள் வாங்குவதற்காக வித்தியாசமான வீடியோக்களை எடுத்து பதிவிடுகிறார்கள்.

    அதேபோலத்தான் கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள இலவன்திட்டா போலீஸ் நிலையத்தில் போலீசார் அனைவரும்சேர்ந்து கறிவிருந்து தயாரித்து சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. கறிவிருந்துக்கு தேவையான பொருட்களை ஒவ்வொரு இடத்திற்கும் போலீஸ் ஜூப்பில் சென்று வாங்குவது, அனைவரும் சேர்ந்து சமையல் வேலையை செய்வது, பின்பு சமைத்த உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, ஒருவருக்கு ஒருவர் ஊட்டுவது என அனைத்தையும் வீடியோ எடுத்து பதிவிட்டிருந்தனர்.

    அந்த வீடியோ பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் இருந்தாலும், பணி நேரத்தில் போலீஸ் சீருடையில், போலீஸ் நிலையத்தில் வைத்து அனைவரும் சேர்ந்து கறிவிருந்து தயாரித்து சாப்பிட்ட விவகாரம் பிரச்சனையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அந்த போலீஸ் நிலைய போலீசாருக்கு ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் அந்த சர்ச்சை வீடியோ விவகாரம் முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே, போலீசார் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

    தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் நடந்து வரும் நிலையில், போலீஸ் நிலையத்தில் போலீசார் வண்ண உடையணிந்து ஆடிப்பாடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

    கேரள மாநிலத்தில் போலீசார் பலர் சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அவை டிரெண்டிங் ஆகிவிடுவதால் அடிக்கடி வீடியோக்களை பதிவிடுகிறார்கள். போலீஸ் சீருடையணிந்து கொண்டு வீடியோ எடுத்து வெளியிடுவதால், அது சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இடுக்கி மாவட்டம் மூணாரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக நிரம்பி வருகின்றன.
    • கூட்ட நெரிசலை தவிர்க்க கேரளாவிற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கேரள வாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக கேரள மாநிலம் மூணாறுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வேலை மற்றும் பல்வேறு பொருட்கள் வாங்குவதற்காக கேரள மக்கள் தினமும் உடுமலைக்கு வருகின்றனர்.

    தற்போது கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. இதனால் பண்டிகைக்காக தேவையான பொருட்களை வாங்குவதற்காக கேரள மக்கள் உடுமலையில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக உடுமலை உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட், மத்திய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள கடை வீதிகளில் கேரள மக்கள்-வியாபாரிகள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் மற்றும் புத்தாடைகளை வாங்கி வருகின்றனர்.

    கேரள மாநிலம் மறையூர், காந்தலூர், மூணாறு செல்லும் பஸ்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக 9/6 செக்போஸ்ட் வழியாக கேரளா மாநிலம் செல்வதற்காக தனியார் ஜீப்புகளில் பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர். இடுக்கி மாவட்டம் மூணாரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக நிரம்பி வருகின்றன. அங்குள்ள ஓட்ட ல்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஓணம் பண்டிகை விருந்துக்காக காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், வெல்லம், பூக்கள் உள்ளிட்டவற்றை வாங்கி விற்பனை செய்வதற்காக மாநில எல்லையோரம் கடை வைத்துள்ள வியாபாரிகள் உடுமலையில் குவிந்து, மூட்டை மூட்டையாக பொருட்களை வாங்கி சென்றனர். ஓணம் பண்டிகை கொண்டாட கேரள மாநிலம் செல்வதற்காக குவிந்த பொது மக்களால் உடுமலை பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க கேரளாவிற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கேரள வாழ் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மலையாள மக்கள் ஓண விழாவை, வீடுகளில் தினமும் பூக்கோலம் போடுவது, விளக்கேற்றி வழிபடுவது போன்ற பாரம்பரிய முறைப்படி கொண்டாடி வருகிறார்கள்.
    • 2 பேருக்கு ஓண சாப்பாடு ரூ.900 முதல் ரூ.1800 வரை கட்டணம் விதித்து இதற்கான முன்பதிவு தொடங்கி விட்டன.

    சென்னை:

    மலையாள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா கடந்த 20-ந்தேதியே தொடங்கி விட்டது.

    தமிழகத்தில் சுமார் 30 லட்சம் மலையாளிகள் வாழ்கிறார்கள். இதில் சென்னை மற்றும் கோவையில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

    சென்னையில் 125 ஆண்டுகள் பழமையான மலையாள கிளப் உள்ளது. இதுதவிர சிறிய கிளப்புகள் 100-க்கும் மேல் உள்ளன. மலையாள கிளப்பில் இந்த ஆண்டுக்கான ஓணம் விழாவை நடிகர் முகேஷ் தொடங்கி வைத்தார்.

    கேரளாவின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நாளை ஓண விருந்து மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஓண விருந்துக்கு முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    மலையாள மக்கள் ஓண விழாவை, வீடுகளில் தினமும் பூக்கோலம் போடுவது, விளக்கேற்றி வழிபடுவது போன்ற பாரம்பரிய முறைப்படி கொண்டாடி வருகிறார்கள். சில கிளப்புகளில் ஓண சந்தை நடைபெறுகிறது. இங்கு கேரளத்தவர் அணியும் பாரம்பரிய உடைகள், உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஓண விழாவில் முக்கியமானது ஓண விருந்து. நாளை நடைபெறும் இந்த விருந்து நிகழ்ச்சியில் 25 வகையான உணவு வகைகளை வாழை இலையில் வைத்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.

    இந்த சைவ சாப்பாட்டில் ஓலன், காளன், எரிசேரி, உப்பேரி, அன்னாசிபழ பச்சடி, கிச்சடி, புளி இஞ்சி, சிப்ஸ், கூட்டுக்கறி, அவியல், சாம்பார், தக்காளி ரசம், சம்பாரம் (இஞ்சி, மிளகாய் கலந்த மோர்) உள்பட 25 வகை இடம் பெற்றிருக்கும்.

    இந்த உணவு வகைகளை வீடுகளில் தயாரித்து சாமி கும்பிட்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சாப்பிட்டு மகிழ்வார்கள்.

    கல்லூரிகளில் அத்தப்பூ கோலம், திருவாதிரை நடனம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளை மாணவிகள் நடத்தி வருகிறார்கள். கோயம்பேட்டில் உள்ள செயின்ட் தாமஸ் கலைக்கல்லூரியில் வருகிற 2-ந்தேதி பூக்கோல போட்டி பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட கோலங்கள் இடம்பெறும் என்றும், மாணவிகள் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருப்பதாக கல்லூரியின் செயலாளர் பிஜூ சாக்கோ தெரிவித்தார்.

    ஓணத்தில் ஓண விருந்து சாப்பிட ஆர்வம் காட்டுவார்கள். அனைவரது வீடுகளிலும் அனைத்து வகைகளையும் தயார் செய்வது கடினம் என்பதால் ஓட்டல்களும் ஓண விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    2 பேருக்கு ஓண சாப்பாடு ரூ.900 முதல் ரூ.1800 வரை கட்டணம் விதித்து இதற்கான முன்பதிவு தொடங்கி விட்டன. பெரும்பாலான ஓட்டல்களில் முன்பதிவும் முடிந்துவிட்டன.

    • ஓணம் பண்டிகையின்போது டன் கணக்கில் காய்கறிகள் கேரளாவிற்கு ஏற்றுமதியாகும்.
    • ஓணம் பண்டிகையொட்டி பச்சை காய்கறிகள் விலை கூடுதலாக விற்கப்பட்டன.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட் மாவட்டத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையாக விளங்கி வருகிறது.

    இந்த மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, மேலப்பாவூர், சுந்தரபாண்டியபுரம், சேர்ந்தமரம், குலையநேரி, சடையப்பபுரம், கட்டேறிபட்டி, குபேரபட்டணம், ராமச்சந்திரப்பட்டிணம், மேலமெஞ்ஞானபுரம், சுரண்டை,

    கீழக்கலங்கல், மேலக்கலங்கல், அச்சன்குன்றம், லட்சுமிபுரம், கருவந்தா, பரங்குன்றாபுரம், அதிசயபுரம், கலிங்கப்பட்டி, வீ.கே.புதூர், கல்லூத்து, இரட்டைகுளம், சாம்பவர்வடகரை, இலத்தூர், பெத்தநாடார்பட்டி, செல்லதாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம், ஆவுடையானூர், சாலைப்புதூர், அரியப்புரம், நாட்டார்ப்பட்டி, திப்பணம்பட்டி,

    கல்லூரணி, கொண்டலூர், திரவிய நகர், ஆழ்வார்குறிச்சி, பாப்பான்குளம், ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருவர். இங்கு விற்கப்படும் காய்கறிகள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக காணப்படும். மேலும் கேரள மாநில வியாபாரிகள் ஆண்டு முழுவதும் இந்த மார்க்கெட்டிற்கு நேரடியாக வந்து காய்கறிகளை கொள்முதல் செய்வது வழக்கம். ஓணம் பண்டிகையின்போது டன் கணக்கில் காய்கறிகள் கேரளாவிற்கு ஏற்றுமதியாகும்.

    கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம் சூடுபிடித்துள்ளது. நாளை திருவோணம் நட்சத்திரத்தன்று ஓணம் திருவிழா விமர்சையாக நடக்கிறது. இதனையொட்டி பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் கேரள வியாபாரிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

    மேலும் கடந்த 3 நாட்களாக கூடுதல் காய்கறிகள் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இங்கிருந்து கர்நாடகா, மும்பையில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகளும் அதிகளவில் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

    மேலும் சாம்பார் காய்கறிகளான கேரட், பீன்ஸ், வெள்ளரி, உருளை, பல்லாரி, சாம்பார் வெள்ளரி போன்றவை அதிகளவில் கொள்முல் செய்யப்பட்டு கேரள நகரங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் இருந்து உருளை, இஞ்சி, பீன்ஸ் வரத்து குறைவாக இருந்தாலும் கேரளாவிற்கு தேவைக்கேற்ப அவற்றை வியாபாரிகள் அனுப்பி வருகின்றனர்.

    ஓணம் பண்டிகையொட்டி பச்சை காய்கறிகள் விலை கூடுதலாக விற்கப்பட்டன. கத்திரிக்காய் ரூ.10 முதல் ரூ.18-க்கும், வெண்டை கிலோ ஒன்றுக்கு ரூ.30, அவரை-ரூ.15, புடலைங்காய்-ரூ.35, சீனி அவரை-ரூ.33, காராமணி-ரூ.37, பாகற்காய்-ரூ.22, சுரைக்காய்-ரூ.20, பூசணிக்காய்-ரூ.8, தடியங்காய்-ரூ.6, சாம்பார் வெள்ளரி-ரூ.4, சுனாமி-ரூ.13, தக்காளி-ரூ.23, மிளகாய்-ரூ.30, சின்ன வெங்காயம்-ரூ.45, பல்லாரி கிலோ ரூ.20 முதல் ரூ.32 வரையிலும், மாங்காய் ரூ.50 முதல் ரூ.60 வரையிலும் விற்பனையானது.

    • கெட்வெல் ஆஞ்சநேயர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது.
    • இந்த ஆண்டும் நாளை மறுநாள் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி நாளை பூக்கள் விலை அதிகரிக்கும்.

    நெல்லை:

    கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த நாளில் கேரளாவில் பெண்கள் தங்களது வீடு முன்பு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்வார்கள். இதற்காக தமிழகத்தில் குமரி மாவட்டம் தோவாளை, நெல்லை சந்திப்பு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலர் சந்தைகளில் இருந்து அதிகளவு பூக்கள் கேரளாவிற்கு ஏற்றுமதியாகும்.

    இந்நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை தமிழகத்தில் கல்லூரிகளில் படிக்கும் கேரளா மாணவ-மாணவிகள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களும் கொண்டாடுவார்கள்.

    இதனையொட்டி நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது. இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.500 வரை விற்பனையானது.

    அதே விலையிலேயே பிச்சிப்பூ விற்பனையானது. அதேநேரத்தில் பூக்களை வாங்கி கொண்டு தெருக்களில் சென்று விற்கும் வியாபாரிகள் ரூ.600 வரை விற்றனர்.

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இன்று காலை ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.800-க்கு விற்பனையானது. பிச்சிப்பூ ரூ.600-க்கு விலை போனது. இதேபோல் சம்பங்கி மற்றும் ரோஜா பூக்கள் கிலோ தலா ரூ.200-க்கு விற்பனையானது.

    இதுகுறித்து நெல்லை சந்திப்பு பூக்கடை உரிமையாளர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையின்போது பூக்கள் விலை அதிகரிக்கும். இந்த ஆண்டும் நாளை மறுநாள் பண்டிகை கொண்டாடப்படுவதை யொட்டி நாளை பூக்கள் விலை அதிகரிக்கும்.

    கடந்த 2 நாட்களாக சுபமுகூர்த்த தினம் என்பதால் மல்லிகை மற்றும் பிச்சி பூக்கள் விலை ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனையான நிலையில், இன்று ரூ.500 வரை விற்பனையாகி உள்ளது. நாளை அதன் விலை மேலும் அதிகரிக்கும் என்றார்.

    ×